Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, March 1, 2011

ஏன் இந்த கோபம்? நயன்!

கேரள நடிகர் சங்கமான (அம்மா) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு நடிகைகள் நயன்தாரா மீராஜாஸ்மின் ஆகியோர் பங்கேற்க மறுத்ததால், இருவரும் மீது கடும் கோபத்தில் இருக்கிறது கேரள நடிகர் சங்கம்.

கேரள நடிகர் சங்கம் சார்பில் கோழிக்கோடில் நாளை(02.03.11) பிரமாண்டமான கலைவிழா நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்ளுமாறு அம்மாநில நடிகர், நடிகையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது அம்மா சங்கம். விழாவில் மலையாள முன்னணி நடிகர்கள் மம்முட்டி மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். விழாவில் பங்கேற்க நயன்தாரா, மீரா ஜாஸ்மினுக்கு அழைப்பு விடுத்தும் இருவரும் பங்கேறக முடியாது என்று அறிவுத்துள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே மீரா ஜாஸ்மின் மீது நடிகர் சங்கம் கோபத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் முன்பு ஏதோ ஒரு விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லையாம், இப்போது கோழிக்கோடு விழாவிலும் பங்கேற்க மறுப்பதால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறது நடிகர் சங்கம். அதேபோல் நடிகை நயன்தாராவும் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. ஆகையால் இருவரும் மீதும் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!