Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, March 24, 2011

பா​.ஜ.க, தனியார் சேனலும் திட்டமிட்டு விரித்த வலை?

புதுடெல்லி:அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எம்.பிக்களுக்கு லஞ்சம் அளித்ததாக கூறும் விவகாரத்தை பா.ஜ.கவும், ஐ.பி.என் – சி.என்.என் தொலைக்காட்சி சேனலும் திட்டம் தீட்டி விரித்த வலை என டெஹல்கா வெளிக் கொணர்ந்துள்ளது.

விக்கிலீக்ஸ் வசமிருக்கும் அமெரிக்கா தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்கள் அடங்கிய இந்தியா தொடர்பான கேபிள் செய்திகளை ‘தி ஹிந்து’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இச்செய்தியில்தான் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் வெளியானது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க.

இந்நிலையில் டெஹல்காவில் வெளியான செய்தியானது௦ காங்கிரஸிற்கு பா.ஜ.கவுக்கு எதிரான தற்காப்பு ஆயுதமாக மாறியுள்ளது. பா.ஜ.கவின் மூத்ததலைவர் எல்.கே.அத்வானி,மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, சுதீந்தர் குல்கர்னி ஆகியோரின் ஆதரவுடன் சி.என்.என்.-ஐ.பி.என் சேனலுடன் இணைந்து நடத்திய ரகசிய கேமரா ஆபரேசனின் மோசடியை டெஹல்கா வெளிப்படுத்தியுள்ளது.

இதுத் தொடர்பான 10 தொலைபேசி உரையாடல்களின் ஆவணங்களை டெஹல்கா தம் வசம் வைத்துள்ளது.

BJPMPAshokArgal_Call_1., BJPMPAshokArgal_Call_2

சி.என்.என்.-ஐ.பி.என் தொலைக்காட்சிக்காக கேமரா ஒளிப்பதிவுக்கு தலைமை வகித்த செய்தியாளர் சித்தார்த் கவுதம் வெளியிட்ட தகவல்களுடன் டெஹல்கா இதனை தெரிவித்துள்ளது.

ரகசிய ஆபரேசனுக்கு கவுதமிற்கு கட்டளை பிறப்பித்தவர் பா.ஜ.கவின் மாநிலங்களவை தலைவரான அருண் ஜெட்லியாவார். சுதீந்தர் குல்கர்னி சேனல் குழுவினருக்கு தேவையான வசதிகளை செய்துக் கொடுத்துள்ளார்.

ரகசிய கேமரா ஆபரேசனுக்கு பிறகு எல்.கே.அத்வானி நேரடியாக கவுதமை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். அசோக் அர்கார்,ஃபகான் சிங் குல்ஸ்தே,மகாவீர் பகோரா ஆகிய பா.ஜ.க எம்.பிக்கள் ரகசிய கேமரா ஆபரேசனில் பங்கேற்றுள்ளனர்.

சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அஹ்மத் பட்டேல் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அமர்சிங் ஆகியோரை இந்த ரகசிய கேமரா ஆபரேசனில் சிக்கவைக்க திட்டமிட்டப் பொழுதும் அவர்கள் அதில் சிக்காமல் தப்பிவிட்டனர்.

இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக 2008 ஜூலை 22-ஆம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது பாராளுமன்ற அவையின் நடுவே பா.ஜ.க எம்.பிக்கள் பண கட்டுகளுடன் வந்து தங்களுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டது எனக்கூறி உயர்த்தி காண்பித்தனர்.

இச்சம்பவம் இந்திய தேசத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சமாஜ்வாதி கட்சியின் அமர்சிங் அளித்த லஞ்சப் பணம் என அவர்கள் குறிப்பிட்டனர். லஞ்சப் புகாரை விசாரித்த கிஷோர் சந்திரதேவ் கமிட்டி அமர்சிங்கையும், அஹ்மத் பட்டேலையும் குற்றமற்றவர்கள் என கூறியது.

நேற்று பாராளுமன்றத்தில் டெஹல்காவின் அறிக்கையை உயர்த்திக்காட்டி பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்ஸால் பிரதமருக்கெதிரான பா.ஜ.கவின் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.க தலைமையின் ஆசீர்வாதத்துடன் சேனல் இந்த ரகசிய கேமரா ஆபரேசனை நடத்தியதாக பன்ஸால் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு காங்கிரஸோ,சமாஜ்வாதிக் கட்சியோ எம்.பிக்களை விலைக்கொடுத்து வாங்கவில்லை என டெஹல்கா தெரிவித்துள்ளதாக பன்ஸால் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!