Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, December 28, 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க!?

வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை தெரிந்து கொள்ள புதிய ஏற்பாடு (Must Share it Friendss)

வாக்காளர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்து வருகிறது. 

வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதையும் பொதுமக்கள் அந்த முகாம்களுக்கு சென்று பார்க்கலாம்.மேலும், கூடுதலாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திலும் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தெரிவிக்கப்படும். இது இலவச தொலைபேசியாகும்.அதேபோன்று, செல்போன் மூலம் எஸ்எம்எஸ் செய்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். 

அதற்கு, EPIC என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். 24 மணி நேரத்திற்குள் தேர்தல் அலுவலகத்தில் இருந்து விவரம் தெரிந்துகொள்ளலாம். பெயர் இல்லை என்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.

Sunday, December 21, 2014

இப்படியா இதயமெல்லாம் பதறுகிறது!?

பாகிஸ்தான் பெஷாவரிலுள்ள இராணுவப் பள்ளியில் நடைபெற்ற வெறிச்செயல் மிக மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது வடிகட்டிய, ஈனத்தமான, கோழைத்தனமான செயல். (மோடி என்கிற யோக்கியன் கண்டனம்).

இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி-  சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

உயிரிழந்த மாணவர்களை இறைவன் சுவனப் பூங்காவில் நுழைவிப்பானாக.  குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

பயங்கரவாதிகளுக்கு மதம், நாடு, மொழி  என்பதெல்லாம் எதுவும் இல்லை என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டடுள்ளது.

இந்த தாக்குதல் மனிதாபமானமற்ற செயல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதை ஒரு போதும் இஸ்லாம் ஆதரிக்க வில்லை, இதை செய்தவர்கள் மனித மிருங்கங்கள் அவர்கள் என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்க முடியாது.

காரணமின்றி மனித உயிர்களோடு விளையாடுபவன் இசுலாமியோனோ, இந்துவோ அல்ல கிர்ஸ்தவனோ யாராக இருந்தாலும் சரி, விடுதலை புலிகளாக இருந்தாலும் சரி, சிங்கள அரக்கர்களாக இருந்தாலும், சரி நம் நாட்டு குஜராத் தன் இன கொலையாளி காவி பயங்கரவாதிகள் மோடி உள்பட எவரானாலும் சரி, அவர்கள் மனித இன துரோகிகள் மட்டும் அல்ல. இறை துரோகியும் ஆவார்கள் அவர்களை நாம் மன்னிக்க முடியாது.

அதே நேரம் இஸ்லாமியன் செய்தால் அது கொடுங்கோல் அதை மற்றவன் (ஹிந்துத்துவா தீவிரவாதிகள்) செய்தால் கண்மூடி இருக்கும் நம் நாட்டு மன சாட்சி அற்ற மக்கள் மனித நேயத்தை பற்றி பேசுவது கேலிதனமனது அவர்கள் உண்மையில் மனித உயிர்களை நேசிக்கவில்லை.

நடு நிலையாக பேசும் பிறமத சகோதரர்களும் இருக்கின்றார்கள் என்பதும் உண்மை.

(படம்:போஸ்னியாவிலே முஸ்லீம்களை கொன்று குவிக்க கம்யூனிஸ்ட் ராட்கோ மிலாடிக்கை தூண்டிய எது?). 

குஜராத்தில் மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரரமோடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும், கற்பழிப்புகளையும் (மோடியின் அயோக்கியதனத்தை) தட்டிகேட்கவும் எந்த ஒரு வந்தேறி நாய்களுக்கும் வாயில்லை!!. இதுதான் நம் கேள்வி?.

Sunday, December 7, 2014

ஐயே.. என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்!?

பண்டைய கால தமிழர்களின் உணவு முறை: முஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் பலரைப் பார்த்துள்ளோம். ஆதி கால தமிழர்கள் அசைவப் பிரியர்களாகவே இருந்துள்ளனர். பின்னால் வந்த ஆரியனால் தமிழர்களின் கலாசாரம் மறையத் தொடங்கி ஆரிய கலாசாரம் தமிழகமெங்கும் ஏன் இந்தியா முழுவதுமே பரவத் தொடங்கியது. நமது முன்னோர்கள் எந்த அளவு அசைவப் பிரியர்களாக இருந்துள்ளனர் என்பதனை சங்க கால தமிழர்களின் வரலாற்று நூல்களிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

குறிஞ்சி,பாலை,முல்லை,மருதம்,நெய்தல் என்ற ஐவகை நிலத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.அந்த தமிழர்கள் உண்ட உணவைப்பார்ப்போம்.


குறிஞ்சி நிலத்தவர் உணவு: சோழ நாட்டு குறிஞ்சி நில மக்கள் தேனையும்,கிழங்கையும் உண்டார்கள்.பிற நிலத்தாருக்கும் விற்று மீன்,நெய்யையும் நறவையும் வாங்கி வந்தார்கள்.-(பொருநாநூற்றுப்படை.213-214.)

திணைச் சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டனர்.(மலைபடுகடாம்-168-169)

குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும்,பன்றி இறைச்சியையும் உண்டனர். ( மலைபடுகடாம்-171-183)

மலை நாட்டை காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர்.மலை மீது நடந்து சென்ற கூத்தர் தினைப்புனத்து காவலனால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி உண்டனர்.(243-249 ).

பாலை நிலத்தார் உணவு: ஓய்மானாட்டுப் பாலை நில மக்களான வேட்டுவர்கள்,இனிய புளிங்கறி எனப்படும் சோற்றையும் ஆமாவின் சூற்றிறைச்சியையும் உண்டனர். (சிறு நாநூற்றுப் படை-175-177).தொண்டை நாட்டு பாலை நில மக்கள் புல்லரிசியை சேர்த்து நில உரலில் குத்திச் சமைத்த உணவை உப்புக்கண்டத்துடன் சேர்த்து உண்டனர். (பெ.ஆ.படை.95-100).மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசி சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டனர். (பெ.ஆ.படை.130-133).

முல்லை நிலத்தார் உணவு; பொன்னை நறுக்கினார்ப் போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் (சங்ககால பிரியாணி) திணை மாவையும் உண்டனர். (440-445).

மருத நிலத்தார் உணவு; மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்கு கொடுத்து மான் கறியையும், கள்ளையும் பெற்றுக்கொண்டனர்.(பெ.ஆ.படை. (216-217).ஒய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்க்காயும் கலந்த கூட்டையும் உண்டனர். (சி.ஆ.படை.193-195).தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெல் சோற்றை பெட்டைக்கோழி பொரியலுடன் உண்டனர்.(பெ.ஆ.படை.254-256).

நெய்தல் நிலத்தார் உணவு; நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச் சியையும் உட்கொண்டனர்.(சி.ஆ.படை.(156-163).தொண்டைநாட்டுப் பட்டினத்தில்(மாமல்லபுரம்) நெல்லை இடித்து மாவாக்கி ஆண் பன்றிகளுக்கு கொடுத்து கொழுக்க வைத்து அதன் இறைச்சியை சமைத்து உண்டனர்.காவிரிபூம்பட்டினத்து மீனவர் கடல் இறா,வயல ஆமை இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (பட்டினப்பாலை.63-64).கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியையும், விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (பட்டினப்பாலை- (176-178).

இவ்வுணவுகள் தாம் அசல் தமிழர்கள் உண்ட அசைவ உணவு. இன்று சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.?
 

Monday, December 1, 2014

இந்தியாவின் சாபக்கேடு!?

பள்ளிவாசலில் பாஜக கொடி! வட இந்தியா பள்ளிவாசல் ஒன்றில் பாஜக கொடி நடு ராத்திரியில் ஏரி ஏற்றப்பட்டு வன்முறைக்கு வித்திட்டுள்ளனர்.

* RSS காவிபயங்கரவாதிகள் இந்த நாட்டில் இன்னும் தேசபக்தி வேடம் போட்டு இருக்கிராயே அது தான் இந்த நாட்டிற்க்கே அவமானம்,

* உன்னுடைய சுயலாபத்திற்
காக இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கிராயே  அது தான் அவமானம்!"!

* தேசபிதா காந்தியை கொன்றாயே அது அவமானம்,

* வெள்ளையணுக்கு மாமா வேலை பார்த்து இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளை காட்டி கொடுத்தாயே அது அவமானம்!!!!

* சொந்த மாநில மக்களை உன் பிரதமர் நரபலி மோடி கொன்று குவித்தானே அது அவமானம்.

* மரியாதைகுரிய போரில் மடிந்த ராணுவ வீரர்களுக்கு வாங்கிய சவப்பெட்டியில் ஊழல் செய்தாயே அது அவமானம்!!!!

* இந்திய ஜனநாயகத்தையே குழிதோன்டி புதைக்கும் முயற்ச்சியில் ஈடுபடுகிராயே அது அவமானம்!!!!!

* தலித் மக்களை கோவிலுக்குள் விட மறுக்கிறாயே அது அவமானம்!!!!

* மதவெறி, கலவரம், பொய், போட்டோ ஷாப் இதை மட்டுமே செய்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளாயே இது தான் இந்தியாவின் உச்சகட்ட அவமானம்!!!

* இந்த இந்திய மண்ணில் ஒரு RSS காவி நாய்கள் இருந்தாலும் அது இந்த மண்ணுக்கே அவமானம், இந்துத்துவா இந்தியாவின் சாபக்கேடு. 

நடு ராத்திரியில் ஏரி கட்டி இருப்பானுங்க காவி டவுசர் பகலில் ஏரி கட்டி இருந்தால்,.. காந்திக் காலத்தில் இருந்த பொட்டயாதான் இருக்கானுக்க என்ன செய்வது வம்சாவளி காட்டிக் கொடுத்தும் கூட்டிக் கொடுத்தும் வாழ்ந்தவனுங்க திருந்துவானுங்கலா?.

அந்த கொடியை கோயில்கலில் கொமணம் இல்லாமல் இருக்கும் சிலைக்கு கொமணம் கட்டடுங்கட அவமானம இருக்கு.

இஸ்லாமியர்கள் ஆங்கில அரசுக்கு எதிராக,    தீவிரமாக போராடியவர்களின்  தியாகத்தை, வீரத்தை  சுதந்திரப் போராட்ட  வரலாற்றை  மறைத்து விட்டு, இந்திய மககளுக்கு  தாங்கள் செய்த துரோகத்தை, ஆங்கிலேயருக்கு (கூட்டி கொடுத்தான், காட்டி கொடுத்தான்) தாங்கள் காட்டிய விசுவாச வரலாற்றை  மறைத்துவிட்டு இன்று வசதியாக மக்களின் பார்வையில்   இன்று தேசபக்தி  வேடம் போடுகிறார்கள்.

இந்தியாவை காப்பாற்ற பிறந்த தேசபக்தர்களாக  தங்களை  இப்போது  அடையாள படுத்துகின்றனர்! மேலும் சுதந்திரத்துக்காக  சுகபோகங்களைத் துறந்து போராடியவர்கள் இஸ்லாமியர்கள்  இந்த மண்ணின் மைந்தர்கள் இந்துமத  இழிவை ஏற்றுக் கொள்ளாமல்,  முஸ்லிம்களாக  மதம் மாறியதால். மேலும்,  இந்த தேசத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரமுடன் போராடிய இஸ்லாமியர்களை இன்று தேச விரோதிகளாக, தீவிரவாதிகளாக  காட்டுகிறார்கள் இந்த ஹிந்துத்துவா  தீவிரவாதிகளான ஆரிய வந்தேறிகள். 

Saturday, November 22, 2014

பால் கொடுத்தால் அம்மா அழகாயிடுவாங்க!?

தாய் பால் கொடுத்தால் அம்மா அழகாயிடுவாங்க ஒரு நிஜம்.
குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் அழகு கெட்டுவிடும் என்று பெண்கள் மத்தியில் தவறான கருத்து உள்ளது. குழந்தைப் பேறுக்குப் பின்பு சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால் உடல் கட்டமைப்பைச் சீராகப் பராமரிக்க முடியும். குழ ந்தைப் பேறுக்குப் பின் பெண்கள் குண்டாவது உண்டு.

தாய்ப்பால் கொடுக்கும் போது, உடல் பருமனானது படிப்படியாகக் குறைந்து பழைய நிலைமைக்கு வரும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கும்போது ஆக்சிடோசின் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். இதனால் கருப்பை சுருங்கி, பிரசவத்துக்கு முன்பு உள்ள நிலையை அடையும். கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.
தாய்ப்பால் கொடுத்துவரும் தாய்மார்களுக்குக் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் வரை மாதவிடாய் தள்ளிப்போகும். இது அடுத்த குழந்தைக்கான வாய்ப்பைத் தள்ளிப்போடவும் உதவுகிறது. ஆனால், இதற்கு மாறாக சிலருக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஏற்படவும் செய்யலாம். அது அவர்களது உடல் அமைப்பு, ஹார்மோன் மாற்றத்தைப் பொருத்தது. பிரசவக் காலத்தில், ஜெஸ்டேஸ்னல் டயபட்டிஸ் (Gestational Diabetes) பாதிப்பு இருந்தால் தாய்க்கு டைப்&2 சர்க்கரை வியாதி வரும். ஆனால், தாய்ப்பால் கொடுத்து வந்தால் இந்தச் சர்க்கரைப் பாதிப்பும் வருவதில்லை. மேலும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்தம் குறைந்து ஒருவிதமான திருப்தியை உணர முடியும்.
பிரசவம் முடிந்த 3 முதல் 10 மாதங்களுக்குள் உடலும் மார்பகங்களும் 60 சதவிகிதம் தன் நிலைக்கு வந்துவிடும். தாய்ப்பால் கொடுப்பது முழுமையாக நிறுத்தப்பட்டதும் மார்பகங்கள் முழுமையான தன்னிலைக்கு வந்துவிடும். இதற்கு கர்ப்ப காலத்தில் இருந்தே சரியான அளவில் பிரேஸியர் அணிவது உதவும். பிரேசியர் அணிவதால் சரியான அளவில் பால் சுரக்காது அல்லது பால் கட்டும் என்கிற மூட நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இதில் உண்மை கிடையாது. பிரசவம் முடிந்ததும் தவறாமல் பிரேஸியர் அணிய வேண்டும்.

Friday, November 14, 2014

தெரியாத துரித உணவு!?

அவசர உலகில் எது நல்லது எது கெட்டது என்று தெரியாமாலேயே நாம் துரித உணவுகளை உட்கொள்கிறோம் அது எப்படிசெய்கிறார்  (தீங்கு விளைவிக்க கூடியது) என்பதை அதன் நடத்துனர் தினேஷ் சொல்கிறார்.

1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்ல 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை.

2) சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால்.

3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம்.

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம்.

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..

6) இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க ... அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும்.

7) அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள்.

8) வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம்.

9) தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம்.

10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் .

இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடலும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன்.

-தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

Monday, November 3, 2014

Pendrive ல் இருக்கும் ஆனா இருக்காது!?

தகவல்களை சேமித்து வைக்க பெரும்பாலான நபர்கள் USB Pendrive-களை பயன்படுத்துவார்கள். இதில் முக்கியமான பிரச்னை வைரஸ் பிரச்னை, வைரஸ்கள் மிக சுலபமாக Pendrive-ல் புகுந்து, தகவல்களை பாதிக்கிறது. அப்போது கணனியில் Pendrive-வை ஓபன் செய்தால் எந்த தகவலும் இருக்காது. ஆனால் Properties சென்று பார்க்கும் போது பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.

கோப்புகளை மீண்டும் திரும்ப பெறுவதற்கு, எந்தவொரு மென்பொருளையும் உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கு முதலில்,

1. Pendrive-யை கணனியில் சொருகி கொள்ளுங்கள்.

2. Start –> Run –> cmd –> Enter கொடுக்கவும்.

3. இப்போது உங்கள் Pendrive எந்த டிரைவில் இருக்கிறது என பாருங்கள். இதற்கு My Computer சென்று தெரிந்து கொள்ளலாம்.

4. உதாரணமாக E: டிரைவில் Pendrive இருக்கிறது என வைத்து கொள்வோம், அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5. அதன் பின் attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள், ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.

சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள், உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

Saturday, October 25, 2014

நம்மிடம் வந்த ஒரு முகநூல் கேஸ்!?

ஒரு பெண் திருமணமானவர் ஒரு பெண் குழந்தை உண்டு கணவரும் அப்பாவும் வெளிநாட்டில் இவர் அம்மாவின் பராமரிப்பில் (இந்தம்மா பேஸ்புக்கில்).

அடிக்கடி மகளின் படத்தை முகநூலில் இட்டு லைக் வாங்குவார் கமெண்ஸில் பூரிப்பார் ,இவ்வழியில் நட்பில் இணைந்தார் ஒருவர். அவர் மகளைப் புகழ்ந்து அடிக்கடி இன்பாக்ஸ்இல் ஜொள்ளு வடித்திருக்கிறார் ,ஒருநாள் "இந்த குட்டி இவளோ அழகா இருக்கே இவங்கள பெத்த அம்மா எவளோ அழகா இருப்பாங்க ப்ளீஸ் ஒரு போட்டோ காட்டக்கூடாதா?" என் வழிந்துள்ளார்.

பெண் அப்படியே அங்கமெல்லாம் பூரித்து ஒரு படத்தை அனுப்பிவிட்டார்- அடுத்து அதை பார்த்த நபர் "என்னங்க க்ளோஸாவே இல்ல இன்னொரு படம் நல்ல மேக்கப் போட்டு க்ளோஸா அனுப்புப்பா என்றதும் (பெண் உஷாராகி "உங்க படம் அனுப்புங்க அப்பதான் நான் அனுப்புவேன் என்று சொல்ல) அவர் ஒரு பிரபலமல்லாத ஹிந்தி மாடலிங் ஆளின் படத்தை அனுப்பி இது நான் தான் இப்ப கொஞ்சம் கருத்துட்டேன் துபாய் ல என் வேலை அப்படி என்று புளுகியிருக்கார்.

பொண்ணு அவர் அழகுல மயங்கி அவர் கேட்ட போதல்லாம் டிசைன் டிசைனா படம் எடுத்து அனுப்பிடுச்சு ஆனால் அண்ணன் அப்பறம் தான் வேலையை காட்ட ஆரம்பிச்சிருக்கார்.

அசிங்கமான படங்கள் கேட்டு தொல்லை ,இந்த பெண் சந்தேகம் கொண்டு உங்க அம்மா தங்கை படமிருந்தால் எனக்கு அனுப்புங்க என்று கேட்க அவர் மறுத்துவிட்டார்(அப்படி யாரும் இருந்தாதானே அனுப்புவான் இந்த நாயெல்லாம் என்னைக்கோ குடும்பத்தை விட்டு விரட்டி இருப்பாங்க).

மேற்கொண்டு படங்கள் அனுப்பாத காரணத்தால் அவன் மிரட்ட ஆரம்பிக்க இந்த பொண்ணுக்கு டர்ர்ர்ரு ஸ்டார்ட்.

அவன் மேல் இருந்த அதீத நம்பிக்கையில் துபாயில் அவள் கணவர் தந்தை இருக்கும் இடங்களையும் தெரிவித்திருக்கிறாள் - இதுபோதும் அவனுக்கு அவளை மிரட்ட அவள் கெஞ்சியும் அவன் விடவில்லை இந்தப்பெண் ப்ளாக் செய்தும் அவன் வேறு பெயர்களில் முன்பே நட்பில் இணைந்திருந்தபடியால் தப்பிக்க முடியவில்லை.

உதவி கேட்டு நம் சகோதரர் ஒருவரை அனுகவே அவர் உன் ஐடியை டீஆக்டிவேட் செய் வேறு ஐடியில் அவன் நட்பு வட்டத்து பெயர்களை (mutual friends )இணைக்க வேண்டாம் என்றும் அந்நிய ஆடவருடன் சகஜமாக பேச உங்களுக்கு எப்படி துணிச்சல் வருகிறது என்றும் உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்தை ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள் என்றும் செமத்தியாக திட்டி அனுப்பினார்.

அடுத்தவன் யாரென்றே தெரியாமல் எப்படி அவன் அனுப்பிய படத்தை நம்பினாய்,உன் புருஷனை விட அந்த கேவலப்பட்ட நாய் எந்த விதத்தில் உயர்ந்தவன் ,வெளிநாட்டில் இருக்கும் உன் கணவன் உன்னோடு பேசிக்கொள்ளத்தானே இந்த அனுமதியை உனக்கு வழங்கியுள்ளான் அதை நீ அத்துமீறலாமா? என்று அறிவுரை கூறப்பட்டது.

பெண்களே! முகநூல் ஒரு இருள் உலகம் இங்கு எல்லோருக்கும் ஒரு கரிய முகம் உண்டு உங்கள் படங்களை எத்தன்மை வாய்ந்ததாயினும இங்கு பதிவிட வேண்டாம்.

உங்களை அறிந்த மக்கள் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை நன்கறிவார்கள் அதுபோல நீங்கள் அறியாத நண்பர்கள் எத்தன்மைவாய்ந்தவர் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்!

அப்படி கட்டாயம் உங்கள் முகத்தை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்றால் அதனால் வரும் பின்விளைவுகள் மற்றும் இழப்புகளை தாங்கிக்கொள்ள தயாராய் இருங்கள்!

அந்த துணிச்சல் இருந்தால் இந்த அறிவுரையை தூக்கி எறியுங்கள் ! செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் தான். 

அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்கள் அறவே வேண்டாம். அறிமுகம் இல்லாத, அவ்வளவாக பழக்கமில்லாத நபர்களிடம் சொந்த தகவல்களை பகிர்வது, வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற செயல்களையும் பெண்கள் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். விக்கிறவனுக்கு ஒரு கண் போதும், வாங்குகிறவனுக்குத் தான் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அது போல ஆண்களை விட பெண்கள் எப்போதும் ஒரு படி மேலே ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டால் இது போன்ற சுய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் நிலைமையிருந்தும், சமூக நெருக்கடிகளில் இருந்தும், பல இழப்புகளிலிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

Thursday, October 16, 2014

ATM குறைகளை நிவர்த்தி செய்ய!

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார். அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS) வந்துள்ளது. உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார். mவங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார். அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த X தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.

அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார். அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html ஆதங்கமாக தெரிவித்துள்ளார். மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர். அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.

மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman } "https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html   உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள். ( can  u do copy past please).

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.
 
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது. இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.
 
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை. PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

Friday, October 3, 2014

பாதிப்பு பொது மக்களுக்கே!?

18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம்.

சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது முதல், அந்த வழக்கை நடத்த இதுவரை 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.  


மக்கள் வரி பனத்தை கூட்டு கொள்ளையடித்துவிட்டு அப்பாவி மக்களை தூண்டிவிட்டு அனுதாபம் என்ற பெயரிலும் வன்முறை வெரியாட்டம் ஆடும் அதிமுக. 

மாபெரும் அரசு எந்திரத்தின் தூணாக நிற்கும் அரசு அதிகாரிகள்,போலீஸ் சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் இருந்தது ஏன்??. நம்முடைய வரிப்பணத்தில் ஓடும் அரசு பேருந்து மீது தாக்குவதால் நாட்டிற்கோ, ஜெயலலிதாவிற்கோ என்ன லாபம்?. நம் வீட்டு பெண்கள் இது போல போக வழியின்றி, உண்ண உணவகம் இன்றி இருந்தால் நமக்கு எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்து அரசியல் கட்சியினர் ஆர்பாட்டம் செய்யாமல் இயல்பு வாழ்விற்கு துணை நிற்பதே மனிதாபிமான செயல். உருவ பொம்மை எரிப்பதால் ,மாற்று கட்சி அலுவலகம் தாக்கப்படுவதால் என்ன லாபம்?? அப்பாவி பொது மக்களுக்கு தான் பாதிப்பு.

ஜெயலலிதா மேல் உண்மையான பாசமிருந்தால் உன் வாகனத்தை எரி அதவிட்டுட்டு பொது மக்கள் வர்ர பஸ்ஸ எரிக்கிறது அப்பாவி மக்களே பயப்படுத்துவது இதுவே முதலும் கடசியுமாக இருக்கட்டும். இது அதிமுக மட்டுமல்ல திமுகாவுக்கும்  சேர்த்துதான். இந்த வழக்கு வெற்றிபெற காரணம் முழுக்க முழுக்க நீதிபதி சாரும் ஏனென்றால் இந்த தீர்ப்பை அறிவிக்க எவ்வளவு தைரியம் வேண்டும் அதை மைக்கேல் டி'குன்ஹா  செய்து காட்டினார்.

@ இவர்கள் அன்று கொள்ளை அடித்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு பல ஆயிரம் கோடிகள். ஆனால் அபராதமோ வெறும் 100 கோடி. இன்று தமிழகத்தில் இவர்கள் போடும் இந்த முதலைக்கண்ணீர் நாடகம் மக்களை இதிலிருந்து திசை திருப்பத்தான். இது போல அடுத்தடுத்து தீர்ப்பு வந்தால் இனி ஊழல் செய்து சொத்து சேர்க்க முடியாதே. பாதிப்பு பொது மக்களுக்கே!?.

Saturday, September 27, 2014

உள்ளத்தால் உயர்வான உயர்ந்தவர் யார்!?

புயல் வேக மட்டை வீச்சில் பிரசித்தி பெற்றவர் மட்டயில் மட்டுமல்ல மனதாலும் சச்சினைவிட உள்ளத்தால் உயர்வானவர் ஆபிரிடி.
ஒரு முறை ஜெயசூரியா வேகமாக நூறு ரன்களை அடித்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என்று நண்பர்களிடம் சொல்லி கொண்டு இருந்தேன். ஆனால் சில மாதங்களுகுள்ளகவே அந்த சாதனையை 16 வயதில் முறியடித்தவர். அதுவும் தன்னுடைய முதல் அறிமுக தொடரில்.
அன்றில் இருந்து இவருடைய அதிரடி ஆட்டதிற்கு நான் பலிகடா ஆகிவிட்டேன். நான் விளையாடி கொண்டு இருந்து கிரிக்கெட் அணியில் அன்றில் இருந்து அதிரடி ஆட்டம் மட்டுமே ஆடுவேன். வெறும் 15 ஓவர் மட்டும் விளையாடும் அந்த ஆட்டத்தில் நூறு ரன்களை அடித்தவன் என்கிற சாதனை எனக்கு சொந்தமானது. சரி.. இப்போ விசயத்திற்கு வருவோம்.
இவர் எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர். இந்தியாவில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாடி சம்பாரிதவர்கள் எல்லாம் ஹோட்டல், கம்பனி என்று தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கி கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக்காதவர்கள். இன்று ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் ஷாஹித் அப்ரிடி தான் வாழ்நாளில் சம்பாரித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை, மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கு செலவு செய்து உள்ளார். இதுவரை அவர் 17 மில்லியன் டாலர்களை அவர் செலவு செய்து உள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல்.

ஆனால் இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் ஆட்டகாரரர்கள் என்ன செய்ய போகிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்குவார்கள். அதில் புதிய புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்ச கணக்கில் பீஸ் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத்தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழுவதும் கமிசன் பெறுவார்கள். இது தானே நடந்து கொண்டு இருக்கிறது.
அப்ரிடியின் மனிதநேய செயலை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விலகி நின்று பாராட்டுவோம்.. படியுங்கள் & பகிருங்கள்.

Saturday, September 20, 2014

மக்கள் தந்த பேதி மருந்து!?

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மக்கள் நன்கு தங்களுடைய நியாயமான வெறுப்பை இந்த இடைத்தேர்தல் மூலம் காண்பித்துள்ளார்கள்.
இடைத்தேர்தல் முடிவுகள்!  ஆப் கி பார்! மக்கள், ஆப்பு வச்சோம் பார்!  இந்த ஆப்பு மோடிக்கு மட்டுமல்ல பி ஜே பி மற்றும் பார்ப்பனிய பயங்கரவாதிகளுக்கும் சேர்த்து.
கசப்பு மருந்து தந்த பாஜகவுக்கு மக்கள் தந்தது பேதி மருந்து!
கருப்பு பணத்தை மீட்காத அரசுக்கு மக்கள் தந்த வெறுப்பு பணம் !
எண்ணெய் விலை உயர்வுக்கு மக்கள் தந்த வெண்ணை விலை!
லவ் ஜிஹாத் புரட்டுக்கு மக்கள் தந்த உ.பி விரட்டு!
இந்தித் திணிப்புக்கு மக்கள் தந்த இஞ்சித் திணிப்பு!
குரு உத்சவ் கொண்டாட்டதுக்கு மக்கள் தந்த சனி உச்சம்!
இலங்கை பிரச்சனை துரோகத்துக்கு மக்கள் செய்த ராவண வதம்!
கடலில் மீனவர்கள் பிரச்சனைக்கு மக்கள் விட்டது நட்டாற்றில்!
முஸ்லிம்கள் மைனாரிட்டி இல்லை என்றதற்கு மக்கள் தந்த காய்ந்த ரொட்டி!
விருந்தாளிகள் என்று நம்மை சொன்னவர்களுக்கு மக்கள் சொன்னது ! விருந்தும் மருந்தும் மூணு மாசம் கிளம்பு!
இது இந்து தேசம் என்றோருக்கு மக்கள் சொன்னது இந்திய தேசம்!
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்!
நாஙக யாரு ? தோசை, ரொட்டி,  வரட்டி எல்லாத்தையும் போடுவோம் புரட்டி! ஆக கலக்கத்தில்  காவி கூடாரம்.

Sunday, September 14, 2014

ஆட்டோ பயணம் அவசியமான பதிவு!?

இரவு நேரங்களில் தன்னந்தனியாக பயனம் செய்ய நேர்ந்தால்....

* உங்கள் கைபையில் மிளகாய் தூள்,பெப்பர் ஸ்பெரே, குண்டூசி இவைகளில் ஒன்றை மறக்காமல் எடுத்துகொள்ளுங்கள்.

* ஏய் ஆட்டோ என்றோ நீ,வா,போ என்றோ ஓட்டுனரை அழைக்காதீர். (இதனால் உங்கள் மீது வெறுப்பு ஏற்படலாம்). அண்ணா,தம்பி என்றோ முடிந்தால் ஸார் என்றோ அழைக்கவும். (இதனால் உங்கள் மீது நல்ல அபிப்பிராயமும் உடன் பிறந்த சகோதரி என்ற எண்ணம் ஏற்படலாம்)

* ஆட்டோவில் ஏறும் முன் நாம் போகும் இடத்தை தெளிவாக கூறி அதற்கான வாடகை பேசி கொள்ள வேண்டும். (இதனால் பிறகு வாடகை தகராறு ஏற்படாமல் தவிர்க்கலாம்).

* நீங்கள் ஏறும் முன் ஆட்டோவின் பெயரையோ அல்லது பதிவு நம்பரையோ குறித்து வைத்துகொள்ளுங்கள். (இதனால் நாம் ஏதாவது பொருளை விட்டு சென்றால் பிறகு அந்த ஆட்டோவின் நம்பரை வைத்து கண்டு பிடித்துவிடலாம்)

*ஆட்டோவில் ஏறிய பிறகு ஓட்டுனரின் காது கேட்கும் படி சத்தமாக உங்கள் உறவினருக்கோ (உறவினர் இல்லாத பட்சத்தில் சும்மா டயல் பன்னாமல்) போனில் "நான் இந்த பெயர் கொண்ட ஆட்டோவில் ஏறிவிட்டேன் இன்னும் குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிடுவேன்"என்று கூறவும்.

* பயனம் செய்யும் போது ஓட்டுனரிடம் குழைந்தோ அல்லது தேவையற்ற விசயமோ அல்லது ஏதும் பேசாமல் இருப்பது நல்லது.

* ஆட்டோவின் இரு ஓரங்களில் இருக்காமல் நடு பகுதியில் இருக்கவேண்டும்.

* உங்கள் அரைகுறை ஆடையே உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆதலால் ஆடைகள் ஒழுங்கான முறையில் உடுத்திகொள்ளுங்கள்.

* புடவை உடுத்திய பெண்கள் முந்தானையை சரிசெய்து காற்றில் பறக்காதவாறு கவனமாக இருக்கவேண்டும். (ஏனெனில் ஓட்டுனர் கண்ணாடி வழியாக பின்னால் வரும் வாகனத்தை பார்க்க முயற்சிக்கும் போது புடவை காற்றில் பறந்தால் அவரின் கவனம் திசைதிருப்பும் அதுவே மிக பெரிய பிரச்சினை ஆகிவிடும்.

* நீங்கள் போய் சேரும்வரை உங்கள் கவனம் எப்போதும் ஓட்டுனரை நோக்கியே இருக்கவேண்டும்.அவரின் சிறு சிறு நடவடிக்கை கண்காணிக்க வேண்டும்.

* முதல் தடவையாக போகும்போது நமக்கு அதன் வழி தெரியாது ஆதலால் செல்போன் எடுத்து நான் இந்த இடம் வந்தாகி விட்டது என்று ஓட்டுனரின் காதில் விழும்படி உறவினரிடம் பேச வேண்டும் அல்லது பேசுவது போல் பாவலா காட்டவேண்டும்.

* நாம் போகும் வழி சரியாக தான் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.அவ்வாறு தவறான வழியில் போகிறது என்றால் பதட்டபடாமல் நிதானமாக ஏன் என்று காரணம் கேட்க வேண்டும்.ஓட்டுனர் கூறும் காரணம்(சாலை வேலை,சாலை மூடல்) சரியாக இருக்கும் என்று நம்பிக்கை வந்தாலோ அல்லது வராவிட்டாலோ மறுபடியும் செல்போன் எடுத்து இந்த ரூட் சரியில்லை வேறு வழியாக வருகிறேன் என்று உறவினருக்கு பேசுவதுபோல் பாவலா காட்டவேண்டும்.

* அதையும் மீறி தவறான பாதையில் போகிறது என்றால் எந்த காரணம் கொண்டும் பதட்டபடாமல் சமயோஜித புத்தியை கொண்டு சில வழிமுறையை கையாளவேண்டும்.

* தங்கள் இருக்கையின் கீழ்தான் பெட்ரோல் திறக்க,மூட,ரிசர்வ் செய்ய பைக்கில் இருப்பது போல் "நாப்"இருக்கும் (பார்க்க படம்-1)அதை அடைத்து விட்டால் போதும் சிறிது தூரம் சென்றவுடன் அதுவே தானாகவே ஆஃப்பாகிவிடும்.மீண்டும் ஸ்டாட் செய்வதற்குள் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

* அது டீசல் ஆட்டோவாக இருக்கும் பட்சத்தில் ஓட்டுனரின் வலது பக்கத்தில் சிகப்பு கலரில் ஆஃப் சோக் உள்ளது(பார்க்க படம் -2) அதை இழுத்தால் ஆஃப்பாகிவிடும்.

* சில ஆட்டோக்களில் ஓட்டுனரின் முன் பகுதியில் சிகப்பு கலரில் லிவர் உள்ளது (பார்க்க படம் -3) அதை இழுத்தால் ஆஃப்பாகி விடும்.

*இதற்கு ஒன்றும் வழியில்லை என்றால் உங்கள் துப்பட்டாவோ புடவையின் முந்தானையோ கொண்டு ஓட்டுனரின் கழுத்தில் போட்டு பின்னால் இழுத்தால் நிச்சயமாக ஆட்டோவை நிறுத்துவது அவருக்கு பாதுகாப்பு இல்லையெனில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழும் வாய்ப்புள்ளது.

* அவ்வாறு ஆட்டோ கவிழ போகும் என்று தெரிந்தால் தப்பிக்க முயற்சி எடுக்க வேண்டாம்.நடு பகுதியில் இறுக்கமாக பிடித்து கொண்டு இருங்கள்.அடி ஒன்றும் படாது காயங்கள் இல்லாமல் உங்களால் எழமுடியும்.

இறுதியாக.. இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும்பாலானவர்கள் படித்தவர்களாகவும் ஒழுக்கமானவர்களாகவும் குடும்ப வறுமை காரனமாகவும் இத்தொழிலுக்கு வருவதால் பெண்களிடம் வரம்பு மீறாமல் கண்ணியமாக நடக்கின்றனர்.மேலும் போலிசாரின் வாகன சோதனைகள் அதிகம் நடப்பதால் மது அருந்தும் ஓட்டுனர்கூட பணி நேரத்தில் அருந்துவதில்லை.ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த ஓட்டுனரும் குற்றவாளி இல்லை.அவர்களுக்கும் குடும்பம் உள்ளது.உங்களை நம்பி தான் அவர்கள் வாழுகிறார்கள்.

Sunday, September 7, 2014

உடல் ஆரோக்யத்திற்கு!?

* அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்துவது மலச்சிக்லைப் போக்கும்.

* வேப்பிலையை (தளிரை) பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

* கொத்துமல்லிக் கீரையை (தளையை) பச்சையாக சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூடும். *கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவு பெறும்.

* மொச்சை, கொண்டைக் கடலை, முருங்கை, முள்ளங்கி இவைகளால் வாயுத் தொல்லை உண்டாகும்.

* மூலநோய் உள்ளவர்கள் மிளகாயை அறவே நீக்குவது நல்லது.

* கறுப்பு தேநீர், காப்பி இவை மலத்தைக் கட்டும்.

* இரவு சாப்பிட்ட உடன் படுக்கக் கூடாது.

* மஞ்சள் தேய்த்துக் குளிக்காத பெண்களுக்கு தோளில் சுருக்கம் விழ வாய்ப்புண்டு.

* மூன்று மாதத்திற்கொரு ரத்த தானம் செய்யலாம்.

* நடைப் பயிற்சி செய்வதால் வியாதிகள் வராமல் தடுக்கலாம்.* தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடல் ஆரோக்யமாக இருக்கும்.






இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!