Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, March 14, 2011

காவல் படையா? கூலிப்படையா??

புதுடில்லி : ஆந்திராவில் ஆசாத் என்கவுன்டர் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டும் விசாரணை நடத்தாதது ஏன்,இது குறித்து மார்ச் 28-ம் தேதிக்குள் அரசு பதில் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் செர்குரிராஜ்குமார் என்ற ஆசாத் என்ற நக்சலைட் தலைவன் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டு‌க்கொல்லப்பட்டார். அவருடன் ஹேமச்சந்திராபாண்டே என்ற பத்திரிகையாளரும் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் அக்னி‌வேஷ், பினித்தாபாண்டோ ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில் ஆசாத், ஹேமச்சந்திர பாண்டே ஆகியோரை , போலீசார் போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். இது தனி மனித உரிமையை மீறிய செயல், இதற்கு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அல்தாப் ஆலம், ஆர்.எம்.லோகா ஆகியோர் இது குறித்து வரும் மார்ச் 28-ம் தேதிக்குள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!