Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, March 25, 2011

மூடப்படும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்?

கொழும்பு, மார்ச் 25: இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் இப்போது மூடப்பட்டுள்ளது.

இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் பிரச்னையை துவங்கியபோது 1987-ல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வவுனியாவில் துவங்கப்பட்டது. 2009-ல் விடுதலைப்புலிகளுடன் நடந்த போருக்குப் பின்னர் பல்வேறு செஞ்சிலுவை சங்கங்கள் மூடப்பட்டுவிட்டன.

ஆனாலும் வவுனியாவில் இருந்த சங்கம் மட்டும் தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த நிலையில் இந்த சங்கம் இப்போது மூடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து மட்டும் செஞ்சிலுவை சங்கம் செயல்படவேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து வவுனியாவில் இருந்த செஞ்சிலுவைச் சங்கம் மூடப்படுகிறது.

அனைவரும் ஏற்கும் தீர்வை விரும்புகிறோம் - ராஜபட்ச: தமிழர்கள் பிரச்னையில் அனைவரும் ஏற்கும் தீர்வை மட்டுமே விரும்புகிறோம் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச கூறினார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: தமிழர்கள் பிரச்னை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணிக் கட்சியினருடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அனைவரும் ஏற்கக்கூடிய சிறந்தத் தீர்வை அடைவதே எனது குறிக்கோள்.

விடுதலைப்புலிகளின் கோரிக்கையான தனி நாடு என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. 60 ஆண்டுகளாக இந்த பிரச்னை நீடித்து வருகிறது. இதை மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும். தமிழ் தேசிய கூட்டணியுடன் இதுவரை 3 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சு நடத்தி வருகிறது என்றார் அவர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!