Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, March 7, 2011

இவன்க தொந்தரவு தாங்கலப்பா? யு.எஸ்,.லுமா?

வாஷிங்டன் : அமெரிக்காவில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு, தண்டனை வழங்கப்பட உள்ளது. அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் "பர்சனா தாம்' என்ற ஆஸ்ரமம் உள்ளது. 90ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஆஸ்ரமத்தில் ஏராளமான இந்தியர்கள் தங்கியுள்ளனர். இந்த ஆஸ்ரமத்தின் நிறுவனர் பிரகாஷானந்த் சரஸ்வதி. தற்போது 80 வயதாகும் பிரகாஷானந்த் மீது ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த இரண்டு இளம் பெண்கள் கற்பழிப்பு புகார் செய்தனர்.

தங்களை 12 வயது முதல் பாலியல் ரீதியாக இந்த சாமியார் கொடுமை படுத்தியதாக இந்த பெண்கள் கடந்த 2008ம் ஆண்டு புகார் செய்தனர். 45 கோடி ரூபாய் ஜாமீன் பத்திரத்தின் பேரில் இவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், 31 வயதான கேத்தி டோனிசென் என்ற பெண் தன்னிடம் சாமியார் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கூறினார். இதையடுத்து, பிரகாஷானந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், 20 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும், என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பணம் நிறைய வைத்திருக்கும் சாமியார்கள், இந்திய பட்ஜெட்டுல பணம் பத்தல கொஞ்சம் கொடுத்து உதவக்கூடாதா.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!