Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, March 29, 2011

கண் கலங்கிய சினேகா!!

காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தமல்லி அருகேயுள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியில் கலை விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை சினேகா பங்கேற்றார். விழாவில் சினேகாவை கண்டதும் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். அவருக்கு தங்கள் பாணியில் ஒரு பெரி‌ய வரவேற்பு கொடுத்ததுடன் புன்னகை இளவரசி என்று கரகோஷம் போட்டனர்.

விழாவில் சினேகாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த ஒரு விஷேச டிரைலர் ஒன்றை தயார் செய்து அவருக்கு திரையிட்டு காட்டினர். டிரைலரை பார்த்ததும் மிகவும் பரவசமடைந்த சினேகா கண்கலங்கி போய்விட்டார்.

பின்னர் மேடையில் பேசிய சினேகா, எத்தனையோ கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறேன். ஆனால் உங்‌களை போன்ற ஒரு மாணவர்களை எங்கும் கண்டதில்லை. என்மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு என்னை நெகிழ செய்தது. என் வாழ்க்கையில் இந்த தருணத்தை என்‌றுமே மறக்க மாட்டேன். எந்தவொரு நடிகைக்கும் கிடைக்காத பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. இங்கு இருக்கும் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் வாழ்வில் ஒரு உயர்வான நிலையை அடைய அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் என்று மனம் உருகி பேசினார்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!