Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, March 30, 2011

தேர்தலுக்குப்பிறகு கோடா நாடு? ஸ்டாலின்

திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் தனியார் ஆலை சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த துணை முதல்வர் ஸ்டாலின் 3 மணிக்கு பிரச்சாரத்தை துவக்கினார். தச்சநல்லூர், டவுனில் நெல்லை வேட்பாளர் லட்சுமணனையும், பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கானையும் ஆதரித்து பேசினார்.

முதல்வர் கருணாநிதி, தாம் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்க வருபவர்கள் அல்ல. எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். ஆனால் அ.தி.மு.க.,விற்கு தலைமை வகிக்கும் அம்மையார் தமிழ்நாட்டை பற்றி கவலைப்படாதவர். தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார். அப்புறம் கதை முடிஞ்சதுன்னு கொடநாட்டிற்கு கிளம்பிவிடுவார். அவருக்கு தமிழக மக்களை விட கொடநாட்டின் மீதுதான் அக்கறை அதிகம். கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மரியாதை தர தெரியாதவர். மரியாதை இல்லாமல் நடத்துபவர்.

கடந்த தேர்தலிலும் இதனை நேரடியாக பார்த்திருக்கிறீர்கள். இந்துமுறையும் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும்போது எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை பார்த்திருப்பீர்கள். அந்த கூட்டணியில் இருக்கும் மார்க்கெட் போன முன்னாள் கதாநாயகன் பிரச்சாரத்தின்போதே தமது கட்சி வேட்பாளரை அடிக்கிறார். அவருடன் கட்சியினர் பிரச்சாரத்திற்க செல்வதாக இருந்தால் தலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டுதான் செல்லவேண்டும். இதுதான் அந்த கூட்டணியில் கட்சிகள் தரும் மரியாதையாகும். ஆனால் தி.மு.க.,.கூட்டணியில் முதல்வர் கருணாநிதி அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்துபேசி மரியாதையுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். எனவேதிட்டங்கள்தொடர தி.மு.க.,கூட்டணிக்கு ஆதரவாக தாருங்கள் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!