Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, March 14, 2011

கணவனுக்கு தெரியாத மனைவியின் 2 வது திருமணம்?

அரூர் : கடத்தூர் அருகே கணவருக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த மனைவி மீது போலீசில் வாலிபர் புகார் செய்தார்.

கடத்தூர் அடுத்த தொங்கனூரை சேர்ந்தவர் ரமேஷ் (38). இவருக்கும் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்த அமுதா (22) என்பவருக்கும் கடந்த ஐந்தாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு அமுதா பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார்.படிப்பு முடிடந்த பின் தாய் வீட்டில் இருந்து வந்தார். கணவர் ரமேஷ் வீட்டுக்கு செல்லவில்லை. இந்நிலையில், கடந்த மூன்றாண்டுக்கு முன் அமுதாவுக்கு அவரது பெற்றோர் இரண்டாம் திருமணமாக ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்த சக்திகணேஷ் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்தை ரமேசுக்கு தெரியாமல் மறைத்துள்ளனர். அமுதாவுக்கும், சக்தி கணேஷிற்கும் நடந்த திருமணத்தை அறிந்த ரமேஷ் தன்னுடன் குடும்ப நடத்த மனைவியை அனுப்பி வைக்குமாறு அமுதாவின் வீட்டுக்கு சென்று மாமியார் காளியம்மாளிடம் கேட்டுள்ளனர்.அப்பொழுது மாமியார் காளியம்மாள், மாமனார் வேடியப்பன் ஆகியோர் ரமேஷை தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியுள்ளனர். இது குறித்து ரமேஷ் அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரீனா விசாரித்து, வேடியப்பனை கைது செய்தார். மேலும் அமுதா, சக்தி கணேஷ், காளியம்மாள் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!