Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, March 23, 2011

முதல்வருக்கு அல்வா கொடுத்த?

முதல்வர் கருணாநிதி, சென்னையிலிருந்து திருவாரூர் சென்றபோது, அவருக்கு, "பரங்கிப்பேட்டை அல்வா'வை முன்னாள் எம்.எல்.ஏ., மகன் கொடுத்தார். தி.மு.க., கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் கருணாநிதி, இன்று காலை, சென்னையிலிருந்து காரில் திருவாரூர் சென்றார்.

வழியில் பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், முதல்வருக்கு கொடுக்க கொண்டு வந்த சால்வைகள் மற்றும் பூங்கொத்துக்கள் சோதனையிட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டது. பரங்கிப்பேட்டை நகர தி.மு.க., சார்பில், பு.முட்லூரில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ., சிவலோகம் மகன் சண்முகம், தான் கொண்டு வந்த, "பரங்கிப்பேட்டை அல்வா'வை கொடுக்க முயன்றார். பதறிப்போன பாதுகாப்புப் படையினர், அந்த பொட்டலத்தை பிரித்து சோதனை செய்த பின்னரே முதல்வரிடம் கொடுக்க அனுமதித்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!