Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, March 22, 2011

வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா குறைப்பு? பிரிட்டன்!

லண்டன்:உயர்கல்வி படிப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது வழக்கம். மேலும் அந்நாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் முறையானவிசா,முறையற்ற விசா மூலமும் செல்வதால் இரு நாடுகளிடையேயான உறவில் சிக்கல் எழுகின்றன. இதனை தவிர்ப்பதற்காக வழிமுறைகளை இங்கிலாந்து அரசு முயன்று வருகிறது.

உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயர் கல்வி படிக்க இங்கிலாந்திற்கு வருகின்றனர். இந்த எண்ணிக்கையை குறைப்பதற்காக முதற்கட்டமாக வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்திழுக்கும் போலியான கல்வி நிறுவனங்களை அடையாளம் காணப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு மாணவர்களில் ஏழு பேரில் ஒருவர் போலியான கல்விநிறுவனங்களில் பயின்று வருகின்றனர் என ஆய்வுஒன்று தெரிவிக்கிறது.

மேலும்வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது. வெளிநாட்டு மாணவர்களில் குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாட்டில் இருந்து செல்லும் மாணவர்களின் ஆங்கில அறிவு குறைவுகாரணமாக இங்கிலாந்து மாண வர்களுடன் ஒன்று சேர முடியாமல் அவர்களுடன் பழக முடியாமல் தனித்து விடப்படுகின்றனர். இதனால் இன வெறி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக விசா வழங்கும் படிவத்தில் ஆங்கில அறிவு கட்டாயம் என்ற விதியை சேர்க்கும் பட்சத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!