Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 26, 2011

அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும்? விலையோ குபீர்?

மொகாலி : வரும் 30ம் தேதி நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள், மொகாலியில் நடக்கிறது. இந்த உலக கோப்பை கிரிக்கெட்டின், மிக முக்கியமான போட்டியாக இது எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டிக்கான டிக்கெட்டை பெறுவதில் பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் டிக்கெட்டுகள் "பிளாக்கில்' தான் விற்கப்படுகின்றன. 250 ரூபாய் டிக்கெட், எட்டு மடங்கு அதிகமாக ரூ. 2000 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. இதேபோல, ரூ. 500 டிக்கெட் ரூ. 4000த்துக்கும், ரூ. 1000 மதிப்புள்ள டிக்கெட், 6,500 முதல் 7000 ரூபாய் வரை உயர்த்தி விற்கப்படுகிறது. இதுகுறித்து "பிளாக்' டிக்கெட் விற்கும் நபர் ஒருவர் கூறுகையில்,"" அனைவருமே இந்த மோதலுக்காகத்தான் காத்திருந்தனர். இது இரு நாடுகள் இடையில் நடக்கும் சண்டைக்கு சமமானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றதும், டிக்கெட்டின் விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது. தவிர, இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.

இதுகுறித்து மொகாலி மாவட்ட போலீஸ் அதிகாரி குர்பிரீத் சிங் புல்லார் கூறுகையில், ரசிகர்கள் எப்படியும் டிக்கெட் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், எங்களது குழு, மைதானம் மற்றும் பிற இடங்களில் மாறுவேடங்களில், "பிளாக்' டிக்கெட் விற்பவர்களை தேடிக்கொண்டு தான் உள்ளது,'' என்றார். டிக்கெட் கிடைக்காத ரசிகர் ஒருவர் கூறுகையில்,"" ஆறு மணி நேரமாக வரிசையில் நின்றும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் மைதானத்தின் அருகில், "பிளாக்' டிக்கெட் விற்கும் நபர்கள் சாதாரணமாக திரிகின்றனர். அவர்களுக்கு மட்டும் எப்படி டிக்கெட் கிடைக்கிறது,'' என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!