Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, March 2, 2011

கலர் டி வி, க்கு ஆப்பு, அரசுக்கு மாப்பு? தேர்தல் கமிஷன்

சென்னை : தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை, இலவச கலர் "டிவி' வினியோகத்தை நிறுத்தி வைக்கவேண்டுமென, அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதவிர, இலவச வினியோகங்களை கண்காணிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது.

தமிழக அரசு, அனைத்து தரப்பினருக்கும் இலவச கலர் "டிவி'க்கள் வழங்கி வருகிறது. கடைசியாக கொள்முதல் செய்யப்பட்ட, "டிவி'க்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வினியோகிக்கும் பணியில், ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் இம்மாதம் முதல் தேதியில் இருந்து தீவிரம் காட்டத் துவங்கினர். ஆனால் மார்ச் 1ம் தேதி, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால், உடனடியாக, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. எனவே, மக்களுக்கு வினியோகிப்பதற்காக வாங்கி வைத்த, "டிவி'க்களை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அதிகாரிகள், அவற்றை இரவோடு இரவாக வினியோகிக்கும் பணியை பல்வேறு இடங்களில் துவக்கினர்.

மற்ற இலவசங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதையும் கண்காணிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது. இலவசங்கள் வினியோகத்துக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து அதிகாரிகளின் செயல்பாடுகளும், தேர்தல் கமிஷனின் கண்காணிப்புக்குள் வரும். விதிமீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையினரை, சொந்த மாவட்டங்களில் இருந்து மாற்ற வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இதுதவிர கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகளை வேறு மாவட்டங்களுக்கு மாற்றவும் உத்தரவிட்டிருந்தது. மேலும் இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள் விடுமுறை போன்ற காரணங்களால், கடைசியாக பணியாற்றிய இடங்களில் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர கோர்ட்டில் ஏதாவது வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தால் அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

இந்த முறை தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க மூன்று கட்ட பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமிக்க உள்ளது. பொது பார்வையாளர்கள் தேர்தலின் ஒவ்வொரு கட்டத்தையும் உன்னிப்பாக கவனிப்பர். அவர்களது பணிகள் குறித்து தேர்தல் கமிஷன் விரிவான அறிவுரைகளை அவர்களுக்கு அளிக்கும்.

அடுத்ததாக செலவுக் கணக்கு பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரின் செலவுகளையும் கண்காணிப்பர். குறிப்பாக வங்கிகளில் தனியாக கணக்கு துவங்கி வேட்பாளர்கள் செலவிடும் முறை தமிழகத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது.இவை தவிர மைக்ரோ பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, ஓட்டுச்சாவடி அளவில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அவை உரிய இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கப்படும் வரை இவர்கள் கண்காணிப்பர். பொதுப் பார்வையாளர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இவர்கள் செயல்படுவர்.

இலவசங்களை கொடுத்து கொடுத்து மக்கள் மனங்களை மழுங்க அடித்து வைக்கும்முயற்சி.

2 comments :

மாப்புக்கும் ஆப்பு வரும் அப்பு !

இலவசம் கொடுக்கும் போது அதில் இவனுங்க முகரைக் கட்டையை போட்டு குடுக்குறானுங்க, அதென்ன இவனுங்க அப்பன் வீட்டுச் சொத்திளிருந்தா கொடுக்குரானுங்க? பஸ் டிக்கெட் விலை/பால் விலை ஏற்றும் போது கொடுக்கும் விளக்க விளம்பரத்தில் இவனுங்க மூஞ்சியைப் போடுவதுதானே, ஏன் போடுவதில்லை.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!