Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 5, 2011

கண்ண தொறந்த சாமி!

தனது ஸ்லிம்மான உடம்பாலும், கவர்ச்சியாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்து விட்டார் நடிகை ஸ்ரேயா. தற்போது நடிப்பை ‌காட்டிலும் ஆன்மீகம், யோகா, ‌மற்றும் பொது சேவை தொடர்பான நிகழ்ச்சிகளில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு காரணம் ஒரு பார்வையற்ற தம்பதியர் என்று மனம் நெகிழுந்து கூறுகிறார்.

இதுகுறித்து ஸ்ரேயா கூறியதாவது, சில தினங்களுக்கு முன்னர் பார்வையற்ற தம்பதியரை பார்த்தேன். அவர்கள் இருவரும் மிகவும் அன்புடன், பாசத்துடன் இருந்தனர். அத்துடன் மற்றவர்களுக்கு தங்களால் முயன்ற சிறுசிறு உதவிகளும் செய்து வந்தனர். இந்த சம்பவம் என்னை நெகிழ்ச்சியடைய செய்தது. பார்வையற்ற அவர்களே தங்களால் இயன்ற உதவிகள் செய்யும் போது, கை, கால் மற்றும் கண்கள் நன்றாக இருந்தும் நாம் ஏன்? செய்யக் கூடாது என்று ‌தோன்றியது. அப்போது முடிவு செய்தேன். நாமும் இதுபோன்று உதவிகள் ஏதாவது செய்ய வேண்டும் என்று.

அதன்பின்னர் நானும் சமூக சேவைகள் செய்யத் தொடங்கி விட்டேன். விரைவில் தன்னார்வ அமைப்பு ஒன்று தொடங்கி அதில் பார்வையற்றவர்களுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்து வருகிறேன் என்றார். அதுமிட்டுமின்றி உண்மையான அழகு முகத்தில் அல்ல, மனதில் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஸ்ரேயா.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!