Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, February 28, 2011

அஜீத்தின், சூப்பர் டூப்பர் பில்லா - I I

அஜீத்தின் பில்லா-2வில் டைரக்டர் விஷ்ணுவர்தன் விலகியதையடுத்து டைரக்டர் பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி எடுத்துள்ளார்.

அ‌தேபோல் பில்லா படத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா பில்லா-2விலும் இசையமைக்கிறார். கடந்த 2007ம் ஆண்டு அஜீத்-நயன்தாரா-நமீதா நடிப்பில் டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவனின் இசையில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பில்லா-2 எனும் பெயரில் எடுக்க இருக்கின்றனர். டேவிட் எப்படி பில்லாவாக மாறினானர் என்பதே படத்தின் கதை.

பில்லாவை இயக்கிய விஷ்ணுவ‌ர்தனே பில்லா-2வை இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென விஷ்ணுவர்தன் இப்படத்திலிருந்து விலகினார். இதனையடுத்து யார் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், கமல் நடித்து சூப்பர் ஹிட்டான உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி பில்லா-2 படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.என்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஆகிய இருவரும் இணைந்து பில்லா-2வை தயாரிக்கின்றனர். தீனா, பில்லா, ஏகன், மங்கத்தா படத்தை தொடர்ந்து பில்லா-2விற்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். படத்திற்கான நாயகி மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

உயிருடன் கூடிய சடலம் வேண்டுமா? வெப்சைட்'டில் விளம்பரம்!

ஹூஸ்டன் : அமெரிக்காவில் தங்கள் குழந்தைகளின் கல்வி கடன் 90 லட்சத்தை அடைப்பவர்களுக்கு உடல் உறுப்பை அளிக்க ஒரு பெற்றோர் முன்வந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்த ஒரு பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் கல்வி கடன் 90 லட்சம் உள்ளதாகவும் இதை அடைப்பவர்களுக்கு தங்கள் உடல் உறுப்புகளை அளிப்பதாக "வெப்சைட்'டில் அறிவித்துள்ளனர். கடனை அடைப்பவர்கள் எங்கள் ரத்தம், பிளாஸ்மா மற்றும் அனைத்து உறுப்புகளையும் எடுத்துக் கொள்ளலாம். "உயிருடன் கூடிய சடலம் வேண்டுமா? என்ற அறிவிப்புடன் இவர்கள் இந்த விளம்பரத்தை இணையதளத்தில் கொடுத்துள்ளனர்.

வித்தியாசமாக செய்வதுதான் வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி.

Sunday, February 27, 2011

நடைப்பயிர்ச்சி அதன் பலன்கள்

உடற்பயிற்சியில் பலவகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்பது எதோ முதியவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக் கூடாது. பள்ளி செல்லும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சியாகும்.

பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது. காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல. குறைந்தது 2 கி.மீ ஆவது நடக்க வேண்டும். கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.

நடக்கும்போது பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டோ பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது. மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும். நடை ஒரே சீராக இருக்க வேண்டும்.

நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்.
· உடலில் இரத்த ஓட்டம் சீராக அமையும்.
· உடல் உறுப்புகள் நன்கு இயங்கும். வியர்வை நன்கு வெளியேறும். இதனால் உடலில் தேவையற்ற நீர்கள் வெளியேறும். உடல் வலுப்பெறும்.
· காற்றை நன்கு உள்வாங்கி வெளியிடுவதால் நுரையீரல் நன்கு செயல்பட்டு, சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சுவாசத்தை சீராக்குகிறது.
· நடப்பதால் நரம்புகள் பலமடைகிறது, மூளை புத்துணர்வு பெறுகிறது. ஞாபக சக்தி
அதிகரிக்கிறது.
· எலும்புகள், பலப்படும். தசைகள் சுருங்கி விரியும்.
· உடலில் தங்கியுள்ள அதிகமான அதாவது தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
· நல்ல உறக்கம் கிட்டும்.
· நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
· முதுமையைத் தள்ளி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும்.
· கை, கால் மூட்டு வலி நீங்கும்.
· செரிமான சக்தி அதிகரித்து, நன்கு பசி எடுக்கும்.
· முக்குற்றங்களான வாத, பித்த, கபத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.
· தினமும் 1 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது.

நடைப்பயிற்சி நமக்கு நலம் தரும் பயிற்சியாகும். ஆரோக்கியத்தை அள்ளித்தரும், பயிற்சி. தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

கோபத்தில் இலங்கை ரசிகர்கள்

கொழும்பு : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி மீது ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானை எதிர்த்து மோதிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட இலங்கை வென்றதில்லை. இந்த வேதனையான சாதனையை மாற்ற இலங்கை அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தொடர்ந்து ஏழாவது முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.

இது அந்நாட்டு ரசிகர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அனுராதா என்ற ரசிகர் "டெய்லி மிரர்' இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் வீரர்கள் விளம்பரத்தில் கவனம் செலுத்த துவங்கியதால் சிறப்பாக விளையாட முடியவில்லை. தேசத்துக்காக விளையாடாமல் தனிப்பட்ட சாதனைகளுக்காக வீரர்கள் விளையாடுவதால் தான் எதிர்பார்க்காத தோல்வி கிடைத்தது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மீடியா அதிகாரி நிலந்தா ராஜேந்திரா கூறுகையில்,"" பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். ஒரு சில வீரர்கள் அணிக்காக ஒருங்கிணைந்து விளையாடவில்லை என்றார்.

மற்றொரு ரசிகர் சுனில் பெரேரா கூறுகையில்,"" நமக்கு கோப்பை வெல்லும் திறமை <உள்ளது. ஆனால், ரசிகர்களிடம் அதிகபட்சமாக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பெரும்பாலானவர்கள், தொடர் துவங்கும் முன்பே, நாம் கோப்பை வென்றுவிட்டதாகவே நினைக்கின்றனர். இதற்கு இன்னும் அதிக பயணம் செல்ல வேண்டும்,'' என்றார்.

ஹிந்துத்து(க்கள்)வாவை ஒடுக்கும் மலேய அரசு?

கோலாலம்பூர்: தடை செய்யப்பட்ட இந்து அமைப்புடன் தொடர்புடைய ஒரு இயக்கத்தைச் சேர்ந்த 109 உறுப்பினர்களை மலேசிய போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ரோட்டில் திஷ்டி கழிக்க தர்பூசணி உடைப்பது. மரத்திற்க்கு துணியை சுத்தி காசு வசூல் செய்வது, இந்திய அல்லவே சுத்தத்தை பேணும் மலேசியா நாடு. சட்டவிரோதமாக பேரணி நடத்த முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

தடைசெய்யப்பட்ட ஹிண்ட்ராஃபின் கிளை அமைப்பான இந்து உரிமைகள் இயக்கத்தைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரணி நடத்த வேண்டாம் என்று பலமுறை கூறியிருந்தோம். எனினும் அவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என கோலாலம்பூர் போலீஸ் தலைவரும், துணை கமிஷனருமான ஜுல்கிஃப்லி அப்துல்லா தெரிவித்தார்.

ஜாக்பாட் கிடைத்த நடிகை?

ஜெயா டிவி., ஒளிப்பரப்பாகும் ஜாக்பாட் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு நடத்தி வந்தார்.

மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி அமோக வரவேற்பை பெற்றது. இதற்கு காரணம் குஷ்பு அணிந்து வந்த விதவிதமான புடவைகள் மற்றும் ஜாக்கெட் போன்றவை தான். குஷ்பு தி.மு.க.,வில் சேர்ந்தார். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் இருந்து குஷ்பு தூக்கப்பட்டார்.

இதனையடுத்து குஷ்புக்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை நடிகை நதியா ஏற்று நடத்த ஆரம்பித்தார். ஆனால் குஷ்பு ரேஞ்சுக்கு நிகழ்ச்சி விறுவிறுப்பாக அமையவில்லை. இதனால் நதியாவை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக நடிகை நமீதாவை வைத்து நிகழ்ச்சி பண்ணலாம் என்று ஜெயா டிவி முடிவு செய்தது.

நமீதாவை வைத்து நிகழ்ச்சியை பண்ணினால் குஷ்பு மூலம் கிடைத்த வரவேற்பைவிட இன்னும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்பது ஜெயா டி.வி.யின் எண்ணம். ஆனால் இப்போது திடீரென நதியாவே நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தட்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்களாம்.

Saturday, February 26, 2011

என்றும் இளமையாக இருக்க!

பிப். 26 : இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம் செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.

முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும். இது நெல்லிக்கனியில் அதிகம் காணப்படுகிறது.

மேலும் தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக் கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால் பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

தலைமுடி உதிர்வதை தடுத்து அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப் போக்கி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கண் பார்வைத் திறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பணத்திற்கு விலைபோகும் பத்திரிக்கை தர்மம்

புதுடில்லி : அரசியல்வாதிகளும் - பத்திரிகையாளர்களும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள முடியா தம்பதிகளாகத் தான் இருக்க முடியும் (Journalists and politicians make odd bed fellows) என்று சொன்ன காலம் ஒன்று இருந்தது.

கேரளாவின் புகழ் பெற்ற மாத்ருபூமியின் (Mathrubhoomi) தலைவர் வீரேந்திர குமார் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மஹாராஷ்டிரா டைம்ஸ் ஆசிரியர் பாரத் குமார் ரவுத் சிவசேனாவின் ராஜ்யசபா உறுப்பினராவும் சென்ட்ரல் க்ரோனிகல் மற்றும் நவ்பாரத் ஆசிரியர் பிரபுல்ல மகேஸ்வரி காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினராகவும் செயல்படுகின்றனர். ஹித்தாவதா ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் பன்வாரிலால் புரோஹித் மூன்று முறை பாஜக உறுப்பினராக நாக்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கென்று தனித்தனியே ஊடகம் வைத்துள்ளதும் அதன் நடுநிலைத்தன்மைகளும் அனைவரும் அறிந்த ஒன்று. மூத்த பத்திரிகையாளர் சயீத் நக்வி இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது "ஒரு காலத்தில் பத்திரிகையாளனிடம் இருந்த நேர்மை, துணிவு, தொழில் விழுமியங்களை பாதுகாத்தல் போன்றவை தற்போது குறைந்து வருகிறது. நீரா ராடியா போன்ற அரசியல் தரகர்கள் பத்திரிகையாளர்களை வளைக்க ஆரம்பித்துள்ளது அபாயகரமான அறிகுறி" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

வெறும் ஜோல்னா பையை மாட்டி கொண்டு எதை பற்றியும் கவலைப்படாமல் உண்மையை உலகுக்கு எடுத்து சொல்லும் சித்திரமாக பத்திரிகையாளன் இருந்தது தற்போது கனவாக உள்ளது. பத்திரிகைத் தொழில் என்பது தற்போது அதிகாரத் தொடர்பு, கார்பரேட் நெருக்கம் அரசியல் வாய்ப்பு என கவர்ச்சிகரமான ஒன்றாக மாறியுள்ளது. சில கட்சிகள் மற்றும் அரசுகள் பத்திரிகைகளை தங்கள் பக்கம் வளைக்க அரசு விளம்பரங்கள் அளித்தல் போன்றவற்றைத் தாண்டி நேரடியாக பத்திரிகையாளனையே வளைக்க இலவச மனைகள் ரயில், விமான பாஸ்கள், மலிவு விலையில் விருந்தினர் விடுதிகள் எனப் பல வசதிகளை செய்து தருகின்றன. கார்பரேட்டுகளும் பண்டிகை அன்பளிப்புகள் கவர் என பல வழிகளில் பத்திரிகையாளர்களை தங்கள் வசம் வளைக்கப் பார்க்கின்றன.

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்” என்ற பழமொழிக்கேற்ப பிறரின் குறைகளைச் சுட்டிக் காட்டும் ஊடகங்கள் தாங்கள் முதலில் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு சில கறுப்பு ஆடுகளால் நேர்மையான பத்திரிகையியல் தர்மத்தோடு இதழியல் நடத்தும் நல்ல ஊடகங்களையும் மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுவர். இது சமூகத்துக்கும் ஊடக துறைக்கும் ஆரோக்கியமான ஒன்றல்ல. இதைத் தவிர்க்க ஊடகத் துறையில் உள்ளவர்கள் அரசியல் தரகர்கள், கார்பரேட்டுகள், அரசியல் கட்சிகளுடன் வரைமுறை தாண்டிய நெருக்கம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இதற்கான முயற்சிகள் பத்திரிகையாளர்கள் சங்கங்களிலிருந்து தொடங்கப்பட வேண்டும். உண்மையை உலகுக்கு எடுத்து சொல்லும் முயற்சியில் இணைய செய்தி ஊடகங்களின் பங்கும் அதிகப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் இவர்களின் ஸ்டிங் ஆப்பரேஷன்களையே மக்கள் இன்னொரு ஸ்டிங் ஆப்பரேஷன் மூலம் பரிசோதிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவர். இதில் தினமனி, தினமலர் விதிவிலக்கல்ல.

பாயப்போகுதா! பதுங்க போகுதா!! சிறுத்தை?

சென்னை, பிப். 26: தேமுதிக தனது நிலையை தெளிவாக்கிவிட்ட நிலையில், திமுக அணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதிமுக அணியில் இடம்பெறத் தீவிர முயற்சிகளை மேற்கொள்வதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2006-ல் அதிமுக அணியில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் அந்த அணியில் இருந்து வெளியேறி திமுக அணிக்கு ஆதரவு தெரிவித்தது.

அதன்பிறகு 2009 மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் 2 தொகுதிகளில் போட்டி யிட்டது. அதில் அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார்.

வர இருக்கும் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்கிறது என்று தில்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி அறிவித்தார் என்றாலும், விடுதலைச் சிறுத்தைகள் இதே அணியில் இருக்குமா என்கிற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் திமுக அணியில் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு இணையாகத் தங்களுக்கும் மரியாதையான எண்ணிக்கையில் திமுக அணியில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்பார்க்கிறது. இந்த முறை இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெறும் அளவுக்கு கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது அக்கட்சியின் கோரிக்கை.

காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள் கேட்பதால், விடுதலைச் சிறுத்தைகளுக்கு அவர்கள் எதிர்பார்ப்பது போல குறைந்தது 15 தொகுதிகளைத் தி.மு.க.வால் தர முடியுமா என்பது சந்தேகம்தான்.

"திமுகவில் எங்களுக்கு கெüரவமான இடங்கள் தரப்படாத நிலை ஏற்பட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது? தேமுதிகவும் இணைந்து விட்டநிலையில் அதிமுக அணி பலமடைந்து இருக்கிறது. குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும் அந்த அணியில் வெற்றி உறுதி பெறும்போது, இங்கே திமுக அணியில் குறைந்த இடங்களைப் பெற்று போட்டியிட வேண்டிய அவசியம் என்ன?

எங்களுக்கு 15 இடங்கள் தருவதால் திமுக அணிதான் பலப்படுமே தவிர அதனால் நாங்கள் அடையும் பலன், குறைந்த இடங்களில் அதிமுக அணியில் போட்டியிடுவதால் கிடைக்கும் வெற்றிக்குத்தான் சமமாக இருக்கும்' என்கிறார் தொல்.திருமாவளவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதி ஒருவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அதிமுக அணியில் ஏற்றுக்கொள்வார்களா என்கிற கேள்விக்கு, தங்களுக்கு "தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற சமிக்ஞை வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். அணி மாறுமா சிறுத்தை என்பது அதற்கு இங்கே தரப்படும் இரை (இடங்கள்) எவ்வளவு என்பதைத் பொறுத்து அமையும்!

தொண்டர்கள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அப்படி பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரே அணியில் இருந்து செயல்படுவதாக இருந்தால் இரண்டு கட்சியின் வாக்கு வங்கியிலும் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு அது அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு சாதகமாகி விடலாம் என்று கணிக்கிறார்கள். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக பாதிக்கப்படுமென்று அந்தக் கட்சித் தொண்டர்களே பயப்படுவதாகத் தெரிகிறது.

நீதிபதியே இப்படி என்றால்! நீதி எப்படி இருக்கும்?

கொச்சி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் சகோதரர், 2 மருமகன்களிடம் கறுப்புப் பணம் இருப்பதாக வருமான வரித்துறை கூறியிருக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வருமான வரித்துறை பொது இயக்குநர் இ.டி.லூகோஸ், "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் குறித்து எதுவும் கூற முடியாது. ஆனால், அவரது 2 மருமகன்கள், சகோதரர் ஆகியோரிடம் கறுப்புப் பணம் இருப்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்' என்றார்.

கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன்கள் பி.வி.ஸ்ரீனிஜன் பென்னி ஆகிய இருவரும் வழக்கறிஞர்கள். சகோதரர் கே.ஜி.பாஸ்கரன் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றியவர். குற்றச்சாட்டுகளையடுத்து அவர் ராஜிநாமா செய்தார்.

அவர்களிடம் எப்படி கறுப்புப் பணம் வந்தது என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் லூகோஸ் தெரிவித்தார். எனினும் எவ்வளவு கறுப்புப் பணம் அவர்களிடம் இருக்கிறது என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்படுமா? கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் விசாரணை தற்போது இறுதிநிலையை எட்டியிருப்பதாகவும், அடுத்த மாதத்தில் விசாரணை முடிவடைந்துவிடும் என்றும் லூகோஸ் தெரிவித்தார்.இந்த விசாரணை குறித்து எந்தவொரு அறிக்கையையும் மத்திய அரசு வருமான வரித்துறையிடம் கேட்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய நீதியும், நீதிபதிகளும் இந்த லட்சணம் என்றால் எப்படி வேலங்கப்போகுது, காவிகளை மாற்றாவிடில். பல மாநிலமாக உடையும்.

தனியா? துணையா?

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையிலான கூட்டணி உடன்பாடு எட்டப் படாத நிலையில் திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31 தொகுதிகளும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் உறுதி செய்யப் பட்டுள்ளன.

குறைந்தது 80 தொகுதிகள் மற்றும் கூட்டணி ஆட்சி ஆகிய கோரிக்கைகளில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், கே.வி.தங்கபாலு, ஜி.கே.வாசன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு திமுகவின் தேர்தல் குழுவுடன் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் உடன்பாடு எட்டப் பட வில்லை.

திமுக 50 முதல் 60 வரை தொகுதிகளைக் காங்கிரசுக்குத் தர தயாராக இருப்பதாகவேத் தெரிகிறது. எனினும் காங்கிரஸ் கட்சியின் பிடிவாதத்தால் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வருகிறது. கூட்டணி ஆட்சி என்னும் சர்ச்சைக்குள் சிக்க விரும்பாத திமுக தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்துப் பேசலாம் என்றும் காங்கிரசை சமாதானப் படுத்தி வருகிறது.

காங்கிரசின் பேரங்களுக்கு திமுக வளைந்து கொடுக்காத நிலையில் காங்கிரஸ் தனித்து களம் காணும் திட்டமும் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பீகார் உத்தியை தமிழகத்திலும் பயன்படுத்த ராகுல் தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கும் நிலையில் பீகார் நிலைமை வேறு தமிழ்நாடு நிலைமை வேறு பீகார் கண்டது போல தோல்வியைத் தமிழகத்தில் காங்கிரஸ் சந்திக்காது என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இது குறித்தும் திமுகவின் மாற்றுத் திட்டம் குறித்த ஆலோசனையில் விவாதிக்கப் பட்டதாகவும் பல நிர்வாகிகளும் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளுக்கு இன்னும் பணிந்து போக வேண்டாம் என்று கூறிய நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி நாம் அவசரப் படக் கூடாது என்றும் அதிமுக -தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் காங்கிரசையும் பகைத்துக் கொள்வது நல்லதல்ல என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தனித்து போட்டியிட்டாலும் பெரிய அளவில் இழப்பை சந்திக்க போவதில்லை. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தன்னுடைய வாக்கு வங்கியின் பலத்தை அது முழுமையாக அறிந்து கொள்ளவும் இத்தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும். ஆனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி முறியும் நிலையில் அதன் இழப்பு முழுக்க முழுக்க திமுகவுக்கே என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Friday, February 25, 2011

தீரா துயரத்தில் மீனவர்கள்! கேள்விக்குறியான மத்திய, மாநில அரசுகள்?

வேதாரண்யம் : நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் மிரட்டி, இருப்பிடம் காட்டும் கருவி மற்றும் மொபைல் போனை பறித்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நாகை மாவட்டம், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

இதில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெருமாள்பேட்டைச் சேர்ந்த மீனவர்கள் சந்திரசேகரன் (27) குமார் (32) பன்னீர்செல்வம் (30) ஆகியோருக்கு சொந்தமான மூன்று படகில் 14 பேர் கடந்த 22ம் தேதி மதியம் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே, 15 கிலோ மீட்டர் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்களுக்கு வெகு அருகே இலங்கை கடற்படையைச் சேர்ந்த கப்பல் நின்று கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள், இலங்கை ராணுவத்தினரிடம், "நமது எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். அவர்களை விரட்டுங்கள்' என தெரிவித்தனர்.

தொடர்ந்து அங்கு வந்த இலங்கை மீனவர்கள் தமிழக படகுக்குள் புகுந்து அவர்களிடம் இருந்து, ஜி.பி.எஸ்., கருவி (இருப்பிடம் காட்டும் கருவி) மொபைல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். இவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த சிங்கராலையும் (இறால்) எடுத்துச் சென்றனர். "மீண்டும் இப்பகுதிக்கு வந்து மீன்பிடித்தால் கொன்று விடுவோம்' என, கடுமையாக எச்சரித்து மிரட்டி அனுப்பினர்.

மீனவர்கள் நேற்று மாலை கோடியக்கரைக்கு திரும்பினர். இதுபற்றி வேதாரண்யம் கடற்கரை போலீசிலும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் புகார் செய்துள்ளனர். தமிழக மீனவர்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ பயன் லாபம் ஈட்ட கறிவேப்பிலை!!

தென்னிந்திய சமையலில் அதிகளவில் இடம் பெறுவது கறிவேப்பிலை. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கொத்து 50 காசுக்கு விற்கப்பட்டு வந்த கறிவேப்பிலை தற்போது 2 ரூபாய் வரை விற்கப்படும் அளவிற்கு மவுசு கூடியுள்ளது.

மருத்துவக் குணத்தின் காரணமாக கறிவேப்பிலைப் பொடி பெருமளவு அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிக மருத்துவக் குணங்களும், அதிக லாபமும் தரும் கறிவேப்பிலை சாகுபடியில் ஒரே ஆண்டில் ஆறு முறை அறுவடை செய்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும்.

மருத்துவ குணங்கள்: அஜீரணம், வயிற்றுப்போக்கு, இளநரை, முடியின் வேர்கள் வலுப்படுத்துல் ஆகியவற்றுக்கு கறிவேப்பிலை உதவுகிறது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்-சி உயிர்சத்தும் உள்ளது.

செங்காம்பு, தார்வாட் 1, தார்வாட் 2 ஆகிய ரக கறிவேப்பிலை தற்போது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கறிவேப்பிலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து தோட்டக்கலைத் துறை தெரிவித்த தகவல்கள்:

மண் வகை: மணல் கலந்த செம்மண். வண்டல் மண் மற்றும் நல்ல வடிகால் வசதியுள்ள மண்.

நடவு முறை: பெரிய செடிகளாக வளர்க்க 2.5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். குத்துச் செடிகளாக வளர்க்க 1.2 மீ இடைவெளி வேண்டும்.

அதிக மகசூல் பெற 60 செ.மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இம்முறையில் நடவு செய்தால் 45 முதல் 60 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய முடியும். பூமியில் இருந்து 10 செ.மீ. உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும்.

உரமிடுதல்: அடிவுரம் 1 அடி ஆழத்தில் சதுர குழித் தோண்டி நாற்றுகளைச் சுற்றி மக்கிய தொழுவுரம் இடவேண்டும். பின்னர் உரத்தை மண்ணுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். நட்டவுடன் ஒரு முறையும், மூன்றாம் நாள் ஒரு முறையும், பின்னர் வாரம் ஒருமுறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

மேலுரம்: ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் ஒரு செடிக்கு 20 கிலோ தொழுவுரத்தை இட்டு கொத்தி விடவேண்டும்.

பயிர் பாதுகாப்பு: கறிவேப்பிலையைத் தாக்கும் நோய் இலைப்புள்ளி நோயாகும். இதில் இருந்து பாதுகாக்க கார்பன்டைசிம் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் அளவு கலந்து செடிகள் முழுவதும் நனையும் வரை தெளிக்க வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்: நடவு செய்யும் முறையைப் பொறுத்து மகசூல் மாறுபடும். 60 செ.மீ. இடைவெளியில் நடவு செய்தால் முதலில் 6 முதல் 9 மாதத்தில் முதல் அறுவடை செய்யலாம். தொடர்ந்து 45 முதல் 60 நாள்களில் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 2000 கிலோ வரை அறுவடை செய்ய முடியும்.

தற்போது கறிவேப்பிலை ஒரு கிலோ ரூ.30 முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இன்னும் விசேஷ நாள்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.

அமைச்சர்கள் பதவியை தொடர்ந்து...

லிபியாவில் கடாஃபியின் கொடுங்கோல் செயலைக் கண்டித்து அந்நாட்டின் ஏராளமான அமைச்சர்களும் தூதர்களும், வெளியுறவு அதிகாரிகளும் பதவி துறப்பு செய்துள்ளனர்.

கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களை இராணுவத்தையும், கூலிப்படையையும் ஏவிவிட்டு சுட்டுத்தள்ளி மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்ளும் கடாஃபியை கண்டித்து அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலீல் செவ்வாய்க்கிழமை தம் பதவியைத் துறந்தார்.

முஅம்மர் கடாஃபியின் மகனின் மூத்த உதவியாளர் யூசெஃப் சவானியும் பதவியை உதறிவிட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அப்தெல் ஃபதாவும் பதவியை துறந்திருப்பதன் மூலம் கடாஃபிக்கான எதிர்ப்பு வலுவடைந்துள்ளது.

லிபியாவில் தற்போது நிலவும் சூழலை பார்க்கும்போது நாடே சீர்குலைந்துள்ளது தெளிவாகிறது. அமைச்சர்களும், தூதர்களும் பதவியை துறந்துள்ளது நாடு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையே காட்டுகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடாஃபி ஆயுதத்தை தூக்குவதை பிரிட்டன் கண்டிக்கிறது என்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் கூறினார்.

கடாஃபி அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார். லிபியாவுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் குரல் கொடுத்துள்ளன.தனது குடும்பத்தின் நலனுக்காகக் கோடிக்கணக்கான மக்களை அடக்கி ஆண்ட, தொடர்ந்து ஆள முயலும் கடாஃபியின் செயலை பெரு வன்மையாகக் கண்டித்துள்ளது. லிபியாவுடனான ராஜீய உறவை முறித்துக் கொண்டுள்ளது.

கடாஃபிக்கு எதிராக 22 அரேபிய நாடுகளும் குரல் எழுப்பியுள்ளன. தமது குடிமக்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் கடாஃபி மதிப்பளிக்க வேண்டும் என்று அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன. கிளர்ச்சியாளர்களுக்கு முறையாக பதில் அளிக்கும்வரை அரபு நாடுகள் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள லிபியாவை அனுமதிக்க முடியாது என்றும் அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

இவர்கள் யார்! கிரிக்கட் விளையாட்டை எதிர்க்க?

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதிபெறும் பட்சத்தில், மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் அந்த அணியை விளையாட அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்" என சிவசேனா மூத்த தலைவர் மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.

14 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்கவிழா நேற்று டாக்காவில் தொடங்கியது. இப்போட்டியை இந்தியா, வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இப்போட்டியின் இறுதி ஆட்டம், ஏப்ரல் 2-ந் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.

ஆனால் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறும் பட்சத்தில், அப்போட்டி மும்பையில் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகத்தைச் சிவசேனா கட்சி எழுப்பி உள்ளது.

மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், அந்தக்கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில்,

"எங்கள் கட்சித்தலைவர் பால்தாக்கரேயின் எண்ணங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்குப் பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை இங்கு (மும்பை) விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்" என தெரிவித்தார்.

இவர்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது இந்த விளையாட்டை தடுப்பதற்கு, நாட்டில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் நடத்திவிட்டு முஸ்லிம்கள் போட்ட பரதேசிகள்தான் இவர்கள்.

பாகிஸ்தானும், இந்தியாவும் வெவ்வேறு பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணித் தலைவர் அஃப்ரிடி "உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நாங்கள் இந்தியாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், இப்போட்டி சிறப்பாக இருக்கும். அத்துடன் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு உத்வேகம் தந்து, லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும்" என்று நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் அணித்தலைவரின் பேட்டி வெளியான அடுத்தநாளே சிவசேனா தலைவரிடமிருந்து இத்தகைய மிரட்டல் வந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, February 24, 2011

தமிழ் பண்பாடு தெரியுமா? கவுதம்மேனனுக்கு!!

தமிழ் திரையுலகின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் நடுநிசி நாய்கள் படமும், படத்தில் இடம்பெறும் சர்ச்சையான காட்சிகளும்தான்.

படத்தின் கதைப்படி அம்மாவே மகனுடன் தவறாக இருப்பது போன்ற காட்சிகள் படம் பார்ப்பவர்களை அலற வைக்கிறது. இதுவொரு சைக்கோ படம் என்று கவுதம்மேனனே விளக்கம் அளித்தாலும், சமூக ஆர்வலர்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. மாறாக விளக்குமாற்றுடன் கவுதம் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வக்கிரமான காட்சிகளுடன் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் நடுநிசி நாய்கள் அருவருப்பையும் வக்கிரத்தையும் பகிரங்கமாக படமெடுத்து விட்டிருக்கிறார் கவுதம் மேனன். இதன் மூலம் இளைஞர்கள் வாழ்க்கையை சீரழித்துள்ளார். வளர்ப்பு தாயை கூட தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதுதான் நமது பண்பாடு.

கவுதம்மேனன் அந்த உறவை விரசமாக்கி விஷம் கலந்துள்ளார். எங்கேயாவது இது போன்று தவறு நடக்கலாம். அதை திரையில் வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. அப்படி செய்தால் அது போன்ற தவறுகள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். தந்தையே மகனை பாலியல் தொழில் செய்வோர் கூட்டத்தில் அனுமதித்து சித்ரவதை செய்யும் சீன்கள் எவரும் சிந்திக்காதது. இது போன்ற சீன்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இனி அவர் இந்த மாதிரி படமே எடுக்கக் கூடாது.

இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நடுநிசி நாய்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்க தயாராகிக் கொண்டிருக்கிறதாம். கவுதம் வீட்டை விளக்குமாற்றுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அக்கட்சியை சேர்ந்த பெண்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான வியூகம் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல்வேறு நல அமைப்புகளும் நடுநிசி நாய்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டிருக்கின்றனவாம்.

மக்களுக்கு நல்ல விசயங்களை கொண்டுசெல்லவேண்டும், காசு பார்க்க எதைவேண்டுமானாலும் சொல்லலாமா.

புகைபிடிப்பவரா நீங்கள்!?

நம் உடலையும், மனதையும் பாதுகாப்பது நாம் அன்றி வேறு யாருமல்ல.

புகைபிடிப்பதால் தனது வாழ்நாளில் 10 ஆண்டுகள் வரை புகைப் பழக்கம் கொண்டவர்கள் இழக்கக் கூடும் என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவல் அண்மையில் பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. புகைப் பழக்கத்தோடு பிற உடல்நலக்கேடான பழக்கங்களும் இருந்தால் 15 ஆண்டுகள் வரை வாழ்நாள் இழப்பு ஏற்படும் என்றும் அதில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக 35 வயதைத் தாண்டியவர்கள் புகைப் பிடிக்கும் பழக்கும் வழக்கத்தைத் தொடர்ந்தால் கேடு பன்மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

புகைப்பழக்கம் இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை விரைவாக்குகிறது என்றும், அதிக கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை உட்கொள்வதாலும், சோம்பிய வாழ்க்கைப் பழக்கத்தாலும் மாரடைப்பு ஏற்படுவது விரைவுபடுத்தப்படுவதாகத் தெரிகிறது.

புகைப்பழக்கத்தை நிறுத்தியவர்கள் தமனி அடைப்புகள் நீங்கி வாழ்நாள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்தது.

இந்த ஆய்வு குறித்த கருத்து தெரிவித்த புகைபிடிப்பவர் ஒருவர் "புகைக்காமல் வாழ்பவர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழ்கிறார்கள்.

சிறந்த மாநிலம்., தமிழகம் தேர்வு!

சி.என்.என்.- ஐ.பி.என். செய்தி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் விருதுகளில் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும், குடிநீர் மற்றும் சுகாதாரம் குடிமக்கள் பாதுகாப்பு மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதுகளையும் தமிழகம் பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் சார்பில் நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இந்த விருதுகளை வழங்கினார். அப்போது முதலமைச்சர் கருணாநிதிக்குத் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிக்குமாறு ஹமீத் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் வழங்கிய இந்த விருதுகளை முதல் அமைச்சர் கருணாநிதியிடம் இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு காண்பித்தார்.

சி.என்.என்.-ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களைத் தேர்வு செய்து, அம்மாநிலங்களுக்கு வைர மாநில விருதுகள் வழங்கி வருகிறது.

2010ஆம் ஆண்டிற்கு 9 பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

வெள்ளித்திரையில் கள்ள சாமியார் நித்யா!

சாமியார் நித்தியானந்தா நடிகை ரஞ்சி‌தாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில் அந்த சம்பவங்களை காட்சியாக்கி கல்லா கட்ட நினைத்த புதுப்பட குழு தங்கள் படத்தில் நித்தியானந்தா தொடர்பான காட்சிகளை வைத்திருந்தனர்.

வில்லாளன் என்ற பெயரில் உருவாகியிருக்கும் அந்த படத்தை தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., கண்டோன்மெண்ட் சண்முகம் தயாரித்துள்ளார். வெற்றிவேல் - சூரியன் ஆகியோர் இயக்கியுள்ளனர். நாயகனாக புதுமுகம் வெற்றிவேலும் நாயகியாக புதுமுகம் சுஷ்மிதாவும் நடித்துள்ளனர்.

ரீலிசுக்கு தயாராகியிருக்கும் இப்படம் சென்சார் சான்றிதழுக்காக சமீபத்தில் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள், நித்தியானந்தா, காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் ஆகியோரை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த காட்சிகளை நீக்கச் சொன்னார்கள். படக்குழுவினர் எவ்வளவோ‌ கேட்டும் காட்சிகளை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து நித்தியானந்தா ‌தேவநாதன் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டன.

இதுபற்றி படத்தின் டைரக்டர்கள் வெற்றிவேல், சூரியன் ஆகியோர் அளித்துள்ள பேட்டியில் சாமியார் நித்யானந்தா மற்றும் அர்ச்சகர் தேவநாதன் காட்சிகளை ஒரு பாடலில்தான் வைத்திருந்தோம். அதை தணிக்கை குழுவினர் அனுமதிக்காமல் வெட்டி நீக்கி விட்டனர் என்றனர்.

Wednesday, February 23, 2011

தீவிரமடையும் மல்லிகைபுரட்சி!!

பீய்ஜிங் : சீனாவில் சமூகவலை தளங்கள் மூலம் மல்லிகைப்புரட்சி தீவீரமடைந்து வருகிறது.

உலகில் இணைய தளம் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முன்னிலை வகிக்கிறது. இந்த தகவல்தொழில்நுட்ப புரட்சி சீனாவுக்கே ‌ஆபத்தாக முடிகிறது. டிவீட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் சீனாவில் மல்லிகைப்புரட்சியினை ஏற்படுத்தி வருகின்றன.இப்புரட்சி கடந்த ஞாயிற்றுக்கிழ‌மை அரசுக்கெதிராக சீனாவில் 13 மிகப்பெரிய நகரங்களில் துவங்கின. நாட்டில் ஊழல், வேலையில்லா திண்டாட்டம், அடிப்‌படை வசதியின்மை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் கொதித்துப்போயியுள்ளனர். இது சீன பல்கலை. மாணவர்களிடையே வேகமாக பரவிவருகிறது.

சமூக வலைதளமான டிவீட்டரில் நாடுமுழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள்,மனித உரிமை அமைப்புகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்வதுடன் புகைப்படத்தினையும் அரசின் செயல்பாடுகள் குறித்து கண்டன கட்டுரைகளையும் எழுதி வருகின்றனர்.இது மேலும் தீவிரமடைந்துள்ளது. முன்னதாக கடந்த ஞாயிறன்று நடந்த மல்லிகைப்புரட்சியினால் பல்வேறு சமூக நல ஆர்வலர்கள், மாணவர்கள் கைது செய்யப்பட்டு் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உடனடியாக சீனா விடுவிக்க வேண்டும் எனவும் கண்டன குரல்கள் இணையதளம் வாயிலாக பரவி வருவதாக ஜிங்கூவா செய்தி நிறுவனம் கூறுகிறது.

இது குறித்து சீன உள்துறை அமைச்சர் மாஜிகாஜூ கூறுகையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மாற்றம் தான் இதற்கு காரணம். நாட்டில் சில மீடியாக்கள்,இணையதளங்களை முடக்கி வைத்தும் மல்லிகைபுரட்சி இன்னும் ஓயவில்லை. அனைத்து சீன மக்களுக்கும் அரசியலைப்பு உரிமை உள்ளது என்பதை மக்கள் புரிந்து ‌கொள்ளவேண்டும்.

விட்டு கொடுப்போமா, விட்டு பிடிப்போமா?? கலைஞர்!!

சென்னை : தொகுதிப் பங்கீட்டுப் பேச்சின் போது ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம் அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு என்று மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் முன் வைத்தது. இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு பிரச்னையை சோனியாவிடம் தி.மு.க., கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில், தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள் மட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள கோபம், அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழாவில் கலந்து கொள்ள நேற்று திருவண்ணாமலை சென்ற முதல்வர் கருணாநிதி, கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், இது தொடர்பாக கருத்துக்களை கேட்டார். கூட்டணியில் இருக்கும் எதார்த்த நிலையை கருத்தில் கொள்ளாமல் 80 சீட் வேண்டும், 90 சீட் வேண்டும் என காங்கிரசின் அனைத்து மட்டத் தலைவர்களும் கூறி வந்தது தி.மு.க.,வுக்கு தேவையற்ற நெருக்கடியை உருவாக்கியதாகக் கூறும் தி.மு.க., நிர்வாகிகள், லோக்சபா தேர்தலில் அதிக இடங்களைப் பெற இது போன்ற அணுகுமுறையை காங்கிரஸ் பின்பற்றியதை சுட்டிக் காட்டினர்.

லோக்சபா தேர்தலில் 16 இடங்களைப் பெற்ற காங்கிரசால், தங்கபாலு, மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிரபு, கார்வேந்தன் போன்ற முக்கிய தலைவர்களையே வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. கோஷ்டி பூசல், மாவட்ட ஒன்றிய அளவில் தேர்தல் பணி செய்ய காங்கிரசுக்கு ஆள் இல்லாதது. தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை காங்கிரசார் செலவிடாதது போன்றவையால் எதிர் அணி தான் லாபம் அடைந்தது. சட்டசபை தேர்தலிலும் இதே நிலை தான் காங்கிரசால் ஏற்படும்' என்றும் தலைமையிடம் கூறினர்.

கூட்டணியின் பெரிய கட்சி என்ற வகையில் காங்கிரசின் செயல்பாடுகள் கடந்த காலத்தில் இல்லை. தி.மு.க.,வுக்கு நெருக்கடியையும், அவமானத்தையும் உருவாக்குதிலேயே அதன் கவனம் இருந்துள்ளது. காங்கிரசின் முன்னாள் தலைவர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் இதற்கு சான்றாக அமைந்துள்ளன' என்றும் கூறியுள்ளனர்.

பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் மூலம் வட மாவட்டங்களிலும், கொங்கு நாடு மக்கள் கட்சி மூலம் மேற்கு மாவட்டங்களிலும், மூவேந்தர் முன்னணி, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் மூலம் தென்மாவட்டங்களிலும் தேர்தலை எதிர்கொள்ளலாம். தி.மு.க.,வின் திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இவை முழுமையாக நமக்கு கை கொடுக்கும். காங்கிரசால் நமக்கு பயனில்லை; சுமை தான்' என்று தலைமையிடம் வாதிட்டனர்.

சி.பி.ஐ.,யை கையில் வைத்துக் கொண்டு தனது சொந்த லாபங்களுக்காக காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. முலாயம் சிங், மாயாவதி போன்ற தலைவர்களை இதுபோல மிரட்டியுள்ள காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சோதனை என்ற பெயரில் அறிவாலயம் வரை சி.பி.ஐ.,யை அனுப்பி மிரட்டுவது சரியல்ல என்று குறை கூறிய தி.மு.க., தலைவர்கள், "இதே காங்கிரசால், மிசா நெருக்கடியையும் கடந்து வந்துவிட்டோம தோழமை என்ற நிலையில் காங்கிரசுடன் அனைத்து உறவுகளையும் தொடரலாம் மிரட்டலுக்கு பணிந்து கூட்டணியை தொடர வேண்டிய அவசியமில்லை' என கருணாநிதியிடம் கூறினர்.

காதலை எதிர்த்து!! கூலிப்படை ஏவிய தந்தை?

சென்னை : பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற தந்தையை கூட்டாளிகளுடன் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை தேடி வருகின்றனர்.

மதுரை, திருநகரை சேர்ந்தவர் மனோகர் (51) இவரது மகள் தீபிகா (19) பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (23) இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தீபிகாவிற்கு 18 வயது பூர்த்தியானது. இதையடுத்து காதலனுடன் அவர் மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தார். அப்போது இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு போலீசார் செய்த சமரசத்தை பெற்றோர் ஏற்க மறுத்தனர். மேலும், தங்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டால், கொலை செய்து விடுவோம் என்று பெண்ணின் பெற்றோர் மிரட்டினர். இதையடுத்து, தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தாம்பரம் சானடோரியம், மாதவன் தெருவில் நாகராஜ் மனைவியுடன் வாடகை வீட்டில் குடிபெயர்ந்தார். வீட்டிற்கு அருகே வாடிக்கையாளர் சேவை மையம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி மதியம் தீபிகா வீட்டில் தனியாக இருந்த போது, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டியது. இதில், பலத்த காயமடைந்த தீபிகா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்படி, பரங்கிமலை துணை கமிஷனர் ராமர் மேற்பார்வையில், தாம்பரம் உதவி கமிஷனர் நாராயணசாமி, குரோம்பேட்டை இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணையில், எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால், தீபிகாவின் தந்தை மனோகர் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. உள்ளகரத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மனோகரையும், குரோம்பேட்டை நியூ காலனியில் தங்கியிருந்த பாரதி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (20) முருகன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து மனோகர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: என் மகளின் காதல் விவகாரம் தெரிந்தவுடன் அவரை கண்டித்தேன். பொறியியல் கல்லூரியில் மகளை படிக்க வைத்தேன். இரண்டு லட்ச ரூபாய் கல்லூரிக்கு கட்டணம் செலுத்தினேன். ஆனால், எங்களை ஏமாற்றிவிட்டு, திட்டமிட்டபடியே நாகராஜை, அவள் திருமணம் செய்து கொண்டாள். இதனால் ஆத்திரம் ஏற்பட்டது. என் சகோதரர் மகன் பாரதியின் உதவியுடன், மதுரையை சேர்ந்த கூலிப்படையை வைத்து தீபிகாவை கொலை செய்ய திட்டமிட்டோம். இதன்படி கூலிப்படைக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது.

Tuesday, February 22, 2011

வருகிறது கைரேகை முறை? (finger print)

வெளிநாட்டு தொழிலதிபர்கள் மாநாடு ஐதராபாத்தில் நடந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை கூடுதல் செயலர் ஸ்ரீவஸ்தவா குறிப்பிடுகையில் "பாஸ்போர்ட் விண்ணப்பங்களை விரைவில் பரிசீலித்து வினியோகிக்க, இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட உள்ளன.

ஆந்திராவில் மட்டும் ஏழு மையங்கள் அமைய உள்ளன. பாஸ்போர்ட் குறித்த விசாரணைகள், ஆன்-லைன் மூலமே நடக்கும். விண்ணப்பதாரரின் விவரங்கள் மின்னணு தொழில் நுட்பம் மூலம் மாற்றம் செய்யப்படும். இது தொடர்பான ஏழு முன்னோடி திட்டங்கள், தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் நான்கும், வடமாநிலங்களில் மூன்றும் செயல்படுத்தப்பட்டுள்ளன' என்றார்.

வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சக கூடுதல் செயலர் அதுல்குமார் திவாரி குறிப்பிடுகையில், "மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களை பரிமாறிக்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் பாஸ்போர்ட் திட்டத்தின் மூலம், வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர் மற்றும் தொழிலதிபர் குறித்த அனைத்து விவரங்களும், ஆன்-லைன் மூலம் கிடைக்கும். கைரேகை பதிவுமுறை மூலம், அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்படுவதால், இதில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை' என்றார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும், 77 பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க, வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

கோப்பையை வெல்ல என்ன தகுதிகள் வேண்டும்?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று விட்டது மிகவும் மகிழ்ச்சி. இந்திய பேட்ஸ்மேன்கள் சேவாக், விராட் கோலி ஆகியோர் ரன் குவிப்பில் சாதனை படைத்துள்ளனர், அவர்களுக்குப் பாராட்டுகள்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் வலுவானது என்பது தெரியவந்த போதிலும், பீல்டிங், பந்து வீச்சில் அணி எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதும் அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டதை எவராலும் மறுக்க முடியாது.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச வீரர்கள் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 ஓவர்களில் 283 ரன்கள் குவித்துள்ளனர். இது சாதாரண விஷயமல்ல. 370 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை நோக்கி விளையாடும்போது பலம் வாய்ந்த அணிகளே தடுமாறி விரைவில் ஆட்டமிழந்துவிடும். ஆனால் வங்கதேச வீரர்கள் சிறப்பாக ஆடி கடைசி வரை வெற்றிக்குப் போராடினார்கள். டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைக்காமல், அவர்கள் பேட் செய்து இதே 283 ரன்களை எடுத்திருந்தால் கூட, இந்திய அணி போராடித்தான் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும்.

போட்டிக்குப் பின் பேட்டியளித்த கேப்டன் தோனி, இந்திய அணியின் பந்து வீச்சும், பீல்டிங்கும் சிறப்பாக இல்லை என்பதை ஒப்புக் கொண்டார். அதனை மேம்படுத்துவோம் என்றும் தெரிவித்தார். வங்கதேச வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துகளை எவ்வித சிரமமும் இன்றி எதிர்கொண்டனர். குறிப்பாக ஸ்ரீசாந்தின் பந்துகளை விளாசித் தள்ளி ரன் குவித்தனர். அன்றைய தினத்தில் ஸ்ரீசாந்தின் பந்து வீச்சு முற்றிலுமாக எடுபடவில்லை. 5 ஓவர்கள் வீசிய அவர் 53 ரன்களை வாரி வழங்கினார். ஒரு விக்கெட்டை கூட அவரால் வீழ்த்த முடியவில்லை. வங்கதேசத்திடம் இப்படி என்றால் எதிர் வரும் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவிடம் அவரது பந்துகள் என்னபாடுபடப் போகிறதோ தெரியவில்லை.

பொதுவாக பேட்டிங், பீல்டிங், பந்து வீச்சு என மூன்று துறைகளில் வலுவாக உள்ள அணிதான் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியும். முந்தைய மூன்று உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா தொடர்ந்து வென்றதற்கு இம்மூன்று துறைகளில் அவர்கள் மிளிர்ந்ததே காரணம். வலுவான பேட்டிங் அல்லது வலுவான பந்து வீச்சு என ஒரே துறையை மட்டும் நம்பி களம் இறங்கும் அணிகள் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றதில்லை என்பது கடந்த கால வரலாறு.

பொதுவாக கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் தங்களுடைய பலத்தை மட்டுமின்றி எதிர் அணிகளின் பலவீனத்தை சாதகமாக்கி வெற்றிபெறும் எண்ணத்துடன்தான் களம் இறங்கும். ஓர் அணியுடன் விளையாடும் முன் அந்த அணியின் வீரர்கள் பிற அணிகளுடன் எப்படி விளையாடியுள்ளனர் என்பதை வீடியோ பதிவில் பார்த்துத்தான் வியூகம் வகுக்கின்றனர்.

இந்த வகையில் இந்திய அணியின் பலவீனம் என்ன என்பதை அடுத்து வரும் லீக் ஆட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக ஆடவுள்ள இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மேற்கிந்தியத் தீவுகள் உணர்ந்து அதற்கு ஏற்ப வியூகம் அமைத்து ஆடும். அயர்லாந்து நெதர்லாந்து அணிகளை இந்தியா வெல்வது பெரிய விஷயமாக இருக்காது என்று நம்பப்படுகிறது. அதுவும் பலிக்க வேண்டும்.

ஆனால் தென் ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தும் சிறப்பான பந்து வீச்சாளர்களை மட்டுமின்றி, வலுவான பேட்டிங் வரிசையையும் கொண்டுள்ளது. இந்திய அணி இப்போதுள்ள நிலையிலேயே பந்துவீச்சைத் தொடர்ந்தால் அந்த அணிகளுடனான ஆட்டத்தில் வெற்றி பெறுவது கடினமாகிவிடும். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களில் இலங்கை, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள், முறையே கனடா, கென்யா, ஜிம்பாப்வே ஆகிய அணிகளை எதிர்கொண்டு வென்றுள்ளன.

இந்த அணிகள் பெற்ற வெற்றியில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய மூன்று துறைகளின் பங்களிப்பும் சமஅளவில் இருந்ததை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்.
குறிப்பாக கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை பெற்ற வெற்றியும், கென்யாவுக்கு எதிராக நியூஸிலாந்தின் வெற்றியும் பிரமாண்டமானவை. இலங்கை 210 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நியூஸிலாந்து 69 ரன்களில் கென்யாவைச் சுருட்டியது.

இவற்றுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் வெற்றி பிரமாண்டமானதல்ல, முதலில் பேட் செய்து எடுத்த ஸ்கோர் (370 ரன்கள்) மட்டுமே பிரமாண்டமானது. இந்திய அணி தனது வெற்றியையும் பிரமாண்டமானதாக்க தேவை சிறந்த பந்துவீச்சும், பீல்டிங்கும் தான். பேட்டிங் மட்டுமல்லாது மற்ற பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டால்தான் உலகக் கோப்பை வெல்லும் கனவு நனவாகும்.

2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி ஆட்டம் வரை இந்தியா முன்னேறியதற்கும் ஆசிஷ் நெஹ்ரா, ஜாகீர்கான் ஆகியோரது சிறப்பான பந்து வீச்சே காரணம். அந்த உலகக் கோப்பையில் நெஹ்ரா 9 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான் 11 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவர்களின் பந்து வீச்சு எடுபடாததும், அப்போது இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்ததற்கு முக்கியக் காரணம்.

சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான நெஹ்ராவும், ஜாகீர்கானும் இப்போதும் அணியில் இடம் பெற்றுள்ளனர். எனினும் காயம் காரணமாக நெஹ்ரா களம் இறங்க முடியாமல் போனது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஏற்கெனவே உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த பிரவீண் குமாரும் அணியில் இருந்து விலகிவிட்டார்.
நமது பந்து வீச்சாளர்கள் காயத்தில் இருந்து மீண்டும், சிறப்பாக பந்து வீசும்பட்சத்தில் இந்தியாவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.

தேர்தளுக்கு முன்பே கிடுக்குபிடி போடும் காங்?

சென்னை : தி.மு.க, கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன் ஆட்சியில் பங்கு குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கிணைப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு விதித்துள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான நிலையை ஏற்படுத்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் தூதுவராக டி.ஆர்.பாலு சோனியாவை சந்திக்க உள்ளார்.

தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., குழுவினருடன், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட காங்கிரஸ் குழு பேச்சு நடத்தியது.

கூட்டணி ஆட்சிக்கு உறுதியளிக்க வேண்டும். குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்க ஒப்புக் கொள்ளவேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் அப்போது வலியுறுத்தப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அரசில் குறைந்தபட்ச செயல் திட்டம் ஏதுமில்லை. அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்படவில்லை. எனவே, அதுபோன்ற முறையை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.

இந்த கருத்து வேறுபாட்டால், தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை முன்னேற்றம் ஏற்படாமல் நின்றுபோனது. மேலும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தொகுதிப் பங்கீடு பேச்சின்போது, ஆட்சியில் பங்கு என்பது தேவையற்ற ஒன்று என்றும், அதற்கு இப்போது எவ்வித அவசியமும் ஏற்படவில்லை என்றும், தி.மு.க., தரப்பில் கூறப்படுகிறது.

ஆட்சியில் பங்கு அளிப்பது பற்றி, அவசியம் ஏற்பட்டால், தேர்தல் முடிந்து தான் பேச முடியும் அப்படி இருக்கையில், காங்கிரஸ் அக்கோரிக்கையை வலியுறுத்தியதால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்தையின் போது பேசவேண்டிய முக்கிய அம்சங்கள் தடைபட்டுப் போனதாகவும் தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "தி.மு.க., தலைமையில் பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணிகள் பலமுறை அமைக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை எழவில்லை. தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, ஆட்சி பங்கு பார்முலாவை முன்வைத்து சந்தித்த 1980 தேர்தலில், படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. இதனால், கூட்டணி ஆட்சி பார்முலா தமிழகத்துக்கு ஒத்துவராது' என்றார்.

பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலைப் போக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தி.மு.க, முடிவு செய்துள்ளது. சோனியாவின் தலையீட்டுக்குப் பின்னரே தி.மு.க., - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் சுமுக உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, முதல்வர் கருணாநிதியின் கருத்துக்களை சோனியாவிடம் கூறுவதற்காக, அவரை சந்திக்க டி.ஆர்.பாலு நேரம் கேட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் சோனியாவை சந்தித்து அவர் விளக்கம் அளிக்க உள்ளார்.

நடுநிசியை காணவந்து மாட்டிகொண்ட நடிகை!!

கோலிவுட்டில் கோலோச்சி விட்டு பாலிவுட்டிலும் டாப் நாயகியாக ஜொலித்த சிவகாசிப் பொண்ணு ஸ்ரீதேவி, போனி கபூரை மணந்து அங்கேயே செட்டிலாகி விட்டார். தமிழிலும், இந்தியிலும் டாப் ஹீரோயினாக பல ஆண்டுகள் நீடித்த ஸ்ரீதேவிக்கு இப்போதும் மவுசு குறையவில்‌லை.

சமீபத்தில் எர்ற குலாபி என்ற தெலுங்கு படத்தை பார்ப்பதற்காக ஐதராபாத் சென்றிருக்கிறார் ஸ்ரீதேவி. கவுதம் மேனனின் நடுநிசி நாய்கள் படத்தின் தெலுங்கு பதிப்பான இந்த எர்ற குலாபியில், ஸ்ரீதேவியின் ஒன்றுவிட்ட தங்கை மகேஸ்வரியின் தம்பி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரது அழைப்பை ஏற்றுத்தான் ஐதரபாத் பறந்திருந்தார் பெரியம்மா ஸ்ரீதேவி.

தியேட்டருக்குள் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் நுழைந்த ஸ்ரீதேவி, படம் முடிந்து வெளியே புறப்பட்ட நேரத்தில் ரொம்பவே அதிர்ச்சியை சந்தித்தார். தியேட்டர் முன் எக்கச்சக்க கூட்டம் கூடி விட்டது ஸ்ரீதேவியை பார்க்க. பலரும் ஸ்ரீதேவியிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்தனர். ஒருவழியாக தியேட்டர் ஊழியர்கள் உதவியுடன் தியேட்டரில் இருந்து வெளியேறினார் ஸ்ரீதேவி.

Monday, February 21, 2011

இந்தியாவும், ஹிந்துத்துவா நீதியும்?

ஆமதாபாத் : கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு தொடர்பான விசாரணையின் தீர்ப்பு இன்று ஆமதாபாத் கோர்ட்டில் வெளியிடப்படுகிறது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதியன்று உ.பி. மாநிலம் அயோத்தியா சென்று சபர்மிதி எக்ஸ்பிரஸ் மூலம் ஏராளமான சாதுக்கள் திரும்பிக்கொண்டிருந்தனர்.

கோத்ரா ரயில் நிலையத்தில் (நரேந்திர கேடி முன்பே செட்டப்செய்யப்பட்ட) ரயில், தீ வைத்து எரிக்கப்பட்டது. (தன் மக்களையே கொளுத்தியது)

இதில் 58 பேர் கொல்லப்பட்டடனர். இந்த சம்பவத்தால் பெரும் கலவரம் ஏற்பட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதன் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட் மூலம் இடைகால தடை உத்தரவுபெறப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு அதன் தலைவர் மாஜி சி.பி.ஐ. இயக்குனர் ராகவன் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை ஆமதாபாத் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

வழக்கி்ல் குஜராத் முதல்வர் தீவிரவாதி நரேந்திர கேடி மற்றும் தீவிரவாத அமைப்பைசேர்ந்த வி.எச்.பி. அமைப்பின் தலைவர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட‌ 63 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் நீதிபதிகள் டி.‌கே.ஜெயின், பி.சதாசிவம், அல்தாப் ஆலம் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்க இருந்தது. பின்னர் சிறப்பு விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரியும் தீர்ப்பை ஒத்தி வைக்க மனு செய்யப்பட்டதால் மே மாதம் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.

மஹாத்மாவின் பூமிக்கு நீங்கா களங்கத்தை ஏற்படுத்திய இந்த காவிக் கும்பல் அடியாட்கள் இரு வகைப்பட்டனர். திரைமறைவிலிருந்து சதித் திட்டம் தீட்டிய கட்சிநிர்வாகிகள் மற்றும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் நடத்திய காலாட்படை. சிலசமயம் தலைவர்களே காலாட்படையிலும் தைரியமாக பங்கெடுத்தார்கள்.,குஜராத்தில்.

மூன்று நாட்களுக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள். அதற்கு பிறகு சட்டம் ஒழுங்கை நான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்று ஆலோசனையை வழங்கியது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆனாலும் மூன்று நாட்களுக்குள் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் 2 மாதத்திற்கும் மேலாக இனப்படுகொலையை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திர கேடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் பெருமையுடன் விவரிக்கும் காட்சிகளை காணும் யாருமே அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது.

தெஹல்கா ரகசியமாக படம் பிடித்த வீடியோ காட்சிகளில் ஒவ்வொருத்தரும் தாங்கள் செய்த செயல்களை விபரமாக எடுத்துச் சொல்லிடும்போது நடந்த அக்கிரமங்கள் அனைத்தும் நம் கண்முன்பாக வருகின்றன.

ஒய்வு பெறப்போகும் பிரபலங்கள்?

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளிலுள்ள சில முக்கிய வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கப் போகிறது.

உதாரணமாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், இலங்கையின் முத்தையா முரளீதரன், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோரைச் சொல்லலாம்.

இந்த உலகக் கோப்பை போட்டிதான் எனக்கு கடைசி என்று ஏற்கெனவே முரளீதரன் அறிவித்துவிட்டார்.

இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கும் 6-வது உலகக் கோப்பை போட்டியாகும் இது. 1992, 96, 99, 2003, 2007-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 2011-ம் ஆண்டு போட்டி அவருக்கு 6-வது உலகக் கோப்பை போட்டி என்பதோடு, பாகிஸ்தானின் மியான்தத்தின் சாதனையையும் அவர் சமன் செய்யவுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உள்ள மிக முக்கியமான சாதனைகளை தன்னிடத்தில் வைத்திருக்கும் சச்சினின் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக் கல்லாக இது அமையப் போகிறது. இதுதான் சச்சினுக்கு கடைசி உலகக் கோப்பை போட்டி என்று பெரும்பாலானவர்கள் சொல்லிவிட்டனர். நமது கேப்டன் தோனி உள்பட...

ஆனால் சச்சின் தனது ஓய்வு குறித்து இதுவரை அறிவிக்கவில்லை. இதுதொடர்பாக அவரைக் கேட்டால், ""நான் இப்போது விளையாடுவதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். ஓய்வு குறித்து நான் நினைக்கவே இல்லை. விளையாடும் வரை சிறப்பாக விளையாடவேண்டும். நான் எத்தனை ரன்கள் எடுத்தேன் என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. ஆனால் இந்தியா வெற்றி பெறவேண்டும் என்றுதான் எப்போதுமே நினைப்பேன்'' என்கிறார்.

இந்த உலகக் கோப்பை வீரேந்திர சேவாக், ஜாகீர் கான் ஆகியோருக்கும் கடைசி போட்டியாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (36), பிரெட் லீக் (34), மைக்கேல் ஹசி (34) ஆகியோருக்கும் இது கடைசி போட்டியாக இருக்கலாம்.

அதேபோல இலங்கையின் குமார சங்ககாரா (33), மஹேல ஜெயவர்த்தனே (33), திலகரத்னே தில்ஷன் (34) ஆகியோருக்கும் இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் (35), மிஸ்பா உல் ஹக் (36), யூனிஸ் கான் (34) ஆகியோருக்கும், மேற்கிந்தியத் தீவின் கிறிஸ் கெய்ல் (31), சிவநாராயண் சந்தர்பால் (36), ராம்நரேஷ் சர்வான் 30) ஆகியோருக்கும் இது கடைசி போட்டியாக இருக்கலாம்.

இதேபோல இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் (33), பால் காலிங்வுட் (35), நியூஸிலாந்து கேப்டன் வெட்டோரி, ஸ்காட் ஸ்டைரிஸ் (35), ஜேக்கப் ஓரம் (32), கென்யாவின் ஸ்டீவ் டிகாலோ (40), தாமஸ் ஓடோயா (32) ஆகியோருக்கும் இதுவே கடைசி ஆட்டமாக இருக்கலாம்.

பெரும்பாலான அணிகளின் முக்கிய வீரர்கள் இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்று விடவும் வாய்ப்பிருக்கிறது. அவர்களின் அற்புதமான ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வரலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அவர்களால் முடிந்த அளவுக்கு இந்த போட்டிகளில் பிரகாசிப்பார்கள் என்று நம்பலாம்.

கம்ப்யூட்டர்களில் எலக்ட்ரானுக்கு பதிலாக லேசர் ஒளிக்கற்றை!

பிப். 21 : லேசர் ஒளிக்கற்றையை நிறுத்தும் உலகின் முதல் கருவியை யேல் பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அதிசக்திவாய்ந்த லேசர் ஆயுதங்களை தடுக்கும் நோக்கத்துடன் இந்தக் கருவியை உருவாக்கவில்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். அடுத்த சந்ததியினரின் சூப்பர் கம்ப்யூட்டர்களில் எலக்ட்ரானுக்கு பதிலாக ஒளி பயன்படுத்தப்படும் பட்சத்தில் தங்களது கண்டுபிடிப்பு பயன்படும் என அவர்கள் கூறினர்.

யேல் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டக்ளஸ் ஸ்டோன் மற்றும் அவரது குழுவினர் லேசருக்கு எந்த பொருட்கள் அடிப்படையாக உள்ளன என்பது குறித்து துவக்கத்தில் ஆய்வு செய்தனர். லேசர் வடிவமைப்பில் சமீபத்தில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாரம்பரிய லேசர் செயல்பாட்டுடன் அவை பொருந்துவதாக இல்லை. எனவே ஒரு லேசரை உருவாக்குவதற்கு எவை பயன்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தோம் என டக்ளஸ் கூறினார்.

இந்த குழுவினர் கண்டறிந்த புதிய கருவி குறிப்பிட்ட அலை வேகத்தில் உள்ள 2 லேசர் கற்றைகளின் மீது கவனம் செலுத்துவதாக இருக்கிறது. சிலிகானில் உருவாக்கப்பட்ட இக்கருவி லேசரை திரும்ப பரவ செய்து செயலிழக்க செய்யும்.

சவுதி விமான நிலைய பனிக்கு ஆட்கள் தேவை!!

ரியாத் : சவுதி அரேபியாவில் விமான நிலைய விரிவுபடுத்தும் பணிக்காக ஆட்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுவருகிறது.

விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட தகவலை படித்து பயனடைந்துக்கொள்ளுங்கள்.

Saudi Binladin Group (Airport Projects)

Mechanical - Operation & Maintenance
· Mechanical Engineer 08 Nos. (SR - 3200-4500)
· Chillers Technician 20 Nos. (SR -1500-1800)
· HVAC Foreman 08 Nos. (SR -1800-2400)
· HVAC Technician (Air-Conditioning) 16 Nos. (SR -1300-1500)
· AC Automotive Technician 06 Nos. (SR -1300-1500)
· Water & Sewage Plant Technician 12 Nos. (SR - 1300-1500)
· Sewage Plant Operator 12 Nos. (SR -1300-1500)
· Passenger Boarding Bridge Mechanic 06 Nos. (SR -1500-1800)
· Passenger Boarding Bridge Operator 06 Nos. (SR -1300-1500)
· Conveyor Operator 06 Nos. (SR -1300-1500)
· Power Plant Supervisor 04 Nos. (SR - 2800-3200)
· Power Plant Shift in Charge 06 Nos. (SR 2400-2800)
· Pump Technician 18 Nos. (SR - 1300-1500)
· Power Plant Technician 22 Nos. (SR -1300-1500)
· Gen. Mechanical Technician 12 Nos. (SR -1200-1400)
· Power Plant Operator 10 Nos. (SR -1300-1500)
· Motor Pool Foreman 04 Nos. (SR -1600 -2000)
· Crush Fire Rescue Technician 10 Nos. (SR -1300-1500)
· Blacksmith & Welding Technician 06 Nos. (SR 1200-1400)
· Plumbing Technician 12 Nos. (SR -1200-1400)

Civil & Other - Operation & Maintenance
· Civil Engineer 10 Nos. (SR -3200-4500)
· Civil Foreman 06 Nos. (SR -1800-2400)
· Terminal Operations Specialist 04 Nos. (SR -2200-2500)
· Air Side Operation Specialist 04 Nos. (SR -2000-2500)
· Chief House Keeper 04 Nos. (SR -2000-2500)
· House Keeping Foreman 10 Nos. (SR -2000-2500)
· Janitorial Supervisor 28 Nos. (SR -1400-1600)
· Landscaping Supervisor 14 Nos. (SR -1600-2000)
· Laundry Supervisor 04 Nos. (SR -1600-2000
· Data Entry Operator 06 Nos. (SR - 1200-1200)

Electrical - Operation & Maintenance
· Electrical Engineer 08 Nos. (SR -3200-4500)
· Medium & High Voltage Technician 20 Nos. (SR -1300-1500)
· Low Voltage Technician 20 Nos. (Sr-1200-1400)
· Air Field Lighting (AFL) Supervisor 04 Nos. (SR -2800-3200)
· Air Field Lighting (AFL) Technician 08 Nos. (SR -1300-1500)
· Power Plant Technician 24 Nos. (SR 1300-1500)
· CFR Vehicle Electrical 06 Nos. (SR 1300-1600)
· Automotive Electrician 06 Nos. (SR 1200-1500)
· Power Plant Relay Technician 20 Nos. (SR -1300-1600)
Electronics & Computer - Operation & Maintenance
· Communication Engineer 04 Nos. (SR -3200-4500)
· Communication Foreman 02 Nos. (SR -1800-2400)
· Work Control Center Engineer 02 Nos. (SR 3000-4000)
· Computer Engineer 04 Nos. (SR - 3000-4000)
· Engineer Data Base/ Administrator 04 Nos. (SR -3000-4000)
· Electronics Archive Systems Engineer 04 Nos. (SR 3000-4000)
· Network & Security Info. Engineer 04 Nos. (SR 3000-4000)
· Electronics Serviceman 30 Nos. (SR -1000-1100)
· Audio Visual Technician 08 Nos. (SR 1300-1600)
· Network & Computer Technician 18 Nos. (SR -1300-1600)
· Electronics Alarm Technician 14 Nos. (SR -1300-1600)
· Radio Technician 12 Nos. (SR -1300-1600)
· Controls Technician 08 Nos. (SR -1300-1600)
· Office Equipment Technician 08 Nos. (SR 1500 -1800)
· CFR Electronic Technician 10 Nos. (SR 1500-1800)
· Flight Info & Display System Technician 04 Nos. (SR -1300-1600)

Applicants must have above 5-yrs. relevant work experience in India and abroad. Suitable candidates will be called for client interview at Delhi on 13th & 14th Feb. 2011, Patna on 15th & 16th Feb. 2011 and Hyderabad on 23rd & 24th Feb. 2011. Email/ Courier CV mentioning Specific Position, Experience and contact number, copies of testimonials & passport & recent photographs immediately to:

M/s R.K. International
Contact Person : Mr. Raj Khosla / Mr. Kamal Khosla
Address : 605, Hemkunt Tower, 6 Rajendra Place,
New Delhi-110008
Telephone: 011-45335533/25735533 & Fax : 011-25755333
E-Mail : rki@ndb.vsnl.net.in

இப்படிக்கு,
அய்டா நிர்வாகம்

Sunday, February 20, 2011

கமலுடன் ஜோடி சேரும் சோனாக்ஷி

நடிகர் கமல்ஹாசன் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார்.

இவர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனை விட ஒரு வயது இளையவர். செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தில் கமலுக்கு ஜோடி யார்? என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. முதலில் அனுஷ்கா என தகவல் வெளியானது. பின்னர் அவர் இல்லை என்று கூறப்பட்டது. இப்போது இளம் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாதான் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சோனாக்ஷி சின்ஹா, சல்மான்கானுடன் தபாங் என்ற படத்தில் நடித்ததன் மூலம் வெற்றி நாயகியாக பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் மும்பை சென்ற செல்வராகவன், சோனாக்ஷிக்கு கதை சொல்லியிருக்கிறார். அவருக்கு ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்துவிட்டதால் கமலுடன் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

தற்போது அக்ஷய் குமாருடன் ஜோக்கர் படத்தில் நடித்து வரும் சோனாக்ஷி, அந்த படத்தை முடித்த கையோடு சென்னைக்கு வருகிறார். இன்னமும் பெயரிடப்படாத இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் எடுக்கப்படுகிறது.

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதியை விட வயதில் ஒரு வருடம் இளையவர் என்பது கூடுதல் தகவல்.

விளையாட்டு மட்டுமல்ல, உதவியும்!

உலக கோப்பை போட்டிகளில் "சிக்சர்கள்' பறக்கும் போது, ரசிகர்கள் மட்டுமல்ல வசதியற்ற குழந்தைகளும் மகிழ்ச்சி அடையலாம். இம்முறை ஒவ்வொரு சிக்சருக்கும் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான நிதி, ஏழை குழந்தைகளின் கல்விக்காக அளிக்கப்பட உள்ளது.

இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில், வீரர்கள் "சிக்சர்கள்' அடிக்கும் போதெல்லாம், ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டும். இம்மகிழ்ச்சியை நல்ல காரியத்துக்கு பயன்படுத்த, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) முடிவு செய்தது. இதற்கு "ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம் கைகொடுத்தது. இதன்படி ஒவ்வொரு "சிக்சருக்கும்' தலா 25 ஆயிரம் ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனமும் வழங்கும்.
இத்தொடரில், நூற்றுக்கணக்கான "சிக்சர்கள்' அடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் நிதி கிடைக்கும். இது வசதியற்ற குழந்தைகளின் கல்விப் பணிக்காக பயன்படுத்தப்படும். இவர்கள் படிப்பதற்கு நூலகம், வசதியான அறை, ஆங்கிலம் கற்க தேவையான புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் வசதியற்ற 300 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சேவக் 5, கோஹ்லி 2 "சிக்சர்கள்' அடித்தனர். வங்கதேச வீரர்களான தமிம் இக்பால், சித்திக், ரகிபுல் ஹசன் தலா ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 10 "சிக்சர்' அடிக்கப்பட்டன. இதன் மூலம் துவக்க போட்டியில் மட்டும் 2.5 லட்சம் ரூபாய் நிதி கிடைத்துள்ளது.

ஐ.சி.சி.,யின் இந்த "சிக்சர்' திட்டத்துக்கு இந்தியாவின் சச்சின், தோனி, பாண்டிங்(ஆஸி.,), டேல் ஸ்டைன்(தென் ஆப்ரிக்கா), வாட்சன்(ஆஸி.,) போன்ற முன்னணி வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். உலக கோப்பை போட்டிகள், போகப் போக விறுவிறுப்பு அடையும். அப்போது இன்னும் அதிகமான "சிக்சர்கள்' அடிக்கப்படும். இதன் மூலம் நிறைய குழந்தைகள் பயன் அடையட்டும்.

தேர்தலும்., நடிகர்களின் திண்டாட்டமும் விஜய்!

தேர்தல் நெருங்கி விட்டாலே முன்னணி நடிகர்களின் பாடு ரொம்பவே திண்டாட்டமாகத்தான் இருக்கும். எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பார், எந்த கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்? என யூகங்களின் அடிப்படையில் மீடிக்களில் ‌பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கும்.

சாதாரண நடிகரின் நிலையே இப்படியென்றால், அரசியலுக்கு விரைவில் வருவேன் என்று அவ்வப்போது சொல்லி தனது ரசிகர்களை உசுப்பேற்றி விட்டுக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் நிலை எப்படியிருக்கும்?

காவலன் படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் அரசியல்வாதிகள் தடுத்தார்கள்; ஆளும்கட்சி பிரமுகர்கள் தியேட்டர் அதிபர்களை மிரட்டினார்கள் என்றெல்லாம் பகிரங்கமாகவே குற்றம் சாட்டிய விஜய், காவலன் ஹிட் ஆகி விட்ட மகிழ்ச்சியை சைலண்டாக கொண்டாடி மகிழ்ந்தார். விஜய்யின் அப்பா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரோ, காவலன் பஞ்சாயத்து நடந்தபோது ஒருமுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார்.


இப்போது மீண்டும் ஒருமுறை போயஸ் கார்டன் சென்றிருக்கிறார். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, தேர்தல் நேரத்தில் விஜய், அதிமுகவை ஆதரித்து பிரசாரத்தில் களம் இறங்குவார் என்று பலரும் யூகித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜய்யின் எண்ணம் வேறாக இருக்கிறது என்கிறது தகவல்.

தேர்தல் நேரத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவாக விஜய் பிரசாரம் செய்யப்போவதில்லையாம். ‌அந்த நேரத்தில் வெளிநாடு ட்ரிப் அடிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம் அவர். அரசியல் விவகாரத்தில் விஜய்யின் எண்ணமும், அப்பா சந்திரசேகரின் எண்ணமும் வேறு‌ வேறாக இருப்பதாக சொல்கிறது.

Saturday, February 19, 2011

பரிசோதித்துகொள்ளுங்கள்! நீங்கள்தான் டாக்டர்?

உடல் ஆரோக்யமாக இருக்க ஓடி, ஆடி விளையாடுவது முக்கியம். உடல் ஆரோக்யமாக உள்ளதா? என பரிசோதிக்க ஒரு எளிய பயிற்சி பற்றி.

 முதலில் கண்ணை மூடி நிமிர்ந்து நில்லுங்கள், அதன் பின் வலது கால் மட்டும் மடக்கியும், தொடர்ந்து கால்மாற்றி இடதுகால் மட்டும் மடக்கி நில்லுங்கள். உங்கள் உடல் ஆடாமல் இருந்தால் முழு ஆரோக்யமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். உடல் ஆடினாலோ ஆரோக்ய குறைவு என அறியலாம்.

நம் உடலை நாம் பாதுகாத்து கொள்வது நம் கடமை. சிறிய உடற்ப்பயிற்சி, தினம் 40 நிமிடம் நடப்பது, நீச்சல், வசதி உள்ளவர்கள் (ஜிம்முக்கு செல்வது) யோகா, சோனா போன்றவைகளை தொடர்ந்து செய்யவேண்டும்.

மீனவர்கள், கடற்படை கூட்டு சதி, அம்பலமாகும் உண்மை!

நாகப்பட்டினம், பிப். 19: இலங்கை மீனவர்களும், இலங்கைக் கடற்படையினரும் கூட்டாக சேர்ந்தே தமிழக மீனவர்களைக் கைது செய்தனர் என இலங்கைச் சிறையிலிருந்து சனிக்கிழமை நாகை திரும்பிய தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.

நாகை, காரைக்கால், புதுக்கோட்டை, ராமேசுவரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டனர்.

மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர முயற்சிகளால், தமிழக மீனவர்களை இலங்கை அரசு வெள்ளிக்கிழமை விடுவித்தது.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை காலை நாகை துறைமுகப் பகுதிக்கு வந்தனர். அப்போது மீனவர்கள், இலங்கையில் தாங்கள் சிறைபிடிக்கப்பட்டது குறித்துக் கூறியது:

செவ்வாய்க்கிழமை மாலை வரை இலங்கை மீனவர்களும், இலங்கைக் கடற்படையினரும் தமிழக மீனவர்களை சிறைபிடிப்பிடிக்க தொடர்ந்து ரோந்து வந்து கொண்டிருந்தனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்களே தாக்குதல் நடத்தினர். பெட்ரோல் குண்டு, கற்கள் ஆகியவற்றை வீசி தாக்கினர்.

இலங்கை மீனவர்கள் அழைத்ததும் அவர்களுடன் சென்ற தமிழக மீனவர்கள் தாக்கப்படவில்லை. அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றவர்கள் மீதே இலங்கை மீனவர்கள் கடும் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை மீனவர்களுக்கு பாதுகாப்பாக இலங்கைக் கடற்படையினர் செயல்பட்டனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள வடமராச்சி என்ற கிராமத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். பின்னர், அங்கிருந்து பருத்தித்துறை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். புதன்கிழமை பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காவல் நிலையத்துக்கு வந்து, தமிழக மீனவர்களைச் சந்தித்தார். அப்போது, நீங்கள் எல்லைத் தாண்டி வந்தது தவறுதானே என்றார். மறுத்துப் பேச முடியாத நிலையில் நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதே கேள்வி, நீதிமன்றத்திலும் கேட்கப்பட்டது. அங்கும் ஒப்புக்கொண்டோம்.

தமிழக மீனவர்களின் படகுகளிலிருந்து ஜி.பி.எஸ். கருவிகளையும், மீன்களையும் இலங்கை மீனவர்கள் எடுத்துக் கொண்டனர். இதனால், ஒவ்வொரு படகுக்கும் சுமார் ரூ. 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டது என அவர்கள் தெரிவித்தனர்.

முடிவுக்கு வருமா, மூன்றாவது சந்திப்பு? ஜெ"யை

சென்னை.பிப்,19:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் சனிக்கிழமை சந்தித்து பேசினார்.

கடந்த சில மாதங்களில் மூன்றாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.

மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் போக்கை கண்டித்து விஜயின் மக்கள் இயக்கம், வரும் 22-ம் தேதி நாகை நடத்தவுள்ள பொதுக் கூட்டத்துக்கு முன்பாக நடந்துள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கேட்ட போது அவர் கூறியது:

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. இது குறித்து வேறெதும் சொல்வதற்கில்லை. நாகை பொதுக் கூட்டத்துக்கு தயாராகி வருகிறோம். 21-ம் தேதி நான் நாகை செல்கிறேன். 22-ம் தேதி காலை விஜய் நாகைக்கு வருகிறார். கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன என்றார்.

வேலாயுதம் படத்தின் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியில் இருந்த நடிகர் விஜய், இந்த சந்திப்பின் போது சென்னையில் இருந்தார். ஓய்வுக்காக அவர் சென்னை வந்ததாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள்தொகை கணக்கெடுப்பும்., மக்களின் அறியாமையும்?

வணக்கம் சார்! மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துருக்கோம்!'

- ரோட்டில் இருந்து வாசல் கதவை எட்டிப் பார்த்துக் கூவுகிறார் அந்த அரசு ஊழியர்.

"நாளைக்கு சாயந்தரமா வாங்க' என, முகத்தில் அடித்தாற்போல் பதில் வருகிறது. பென்சிலால் அதைக் குறித்துக்கொண்டு, அலுக்காமல் அடுத்த வீட்டு கதவைத் தட்டுகிறார் அந்த ஊழியர்.

இப்படித்தான் இருக்கிறது, மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களின் நிலை. சிலர் காலையில் வரச் சொல்வர்; சிலர் மாலையில்; சிலர் அடுத்த நாள். சிலரிடம் பதிலே கிடையாது. "அவ்வளவு ஏன்? விவரம் சொன்னதும், படாரென்று கதவைச் சாத்தியவர்களும் உண்டு' என, குமுறுகிறார் சென்னையின் புறநகர்ப் பகுதியில் கணக்கெடுக்கும் ஒரு பெண்மணி. மக்களைச் சொல்லியும் குற்றமில்லை. வாரம் முழுவதும் வேலை பார்த்து, வீட்டில் ஓய்ந்து கிடக்கும் நேரத்தில், யாரோ அதிகாரியின் கேள்விகளுக்கு அரை மணி நேரம் பதில் சொல்வதென்றால் கசப்பாகத் தான் இருக்கிறது. இப்படி இரண்டும் இரு துருவத்தில் இருக்கும் என்பதைக் கணித்து தான், இந்தப் பணிக்கு 20 நாட்களை ஒதுக்கியிருக்கிறது உள்துறை அமைச்சகம்.

கடந்த 9ம் தேதி துவங்கிய கணக்கெடுப்பு, 28ம் தேதி முடிவுக்கு வருகிறது. பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அறிவொளி இயக்கத்தில் பணிபுரிந்தவர்கள் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் இருப்பவர்கள். அனைவருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐந்து கணக்கெடுப்பாளருக்கு, ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது.

காலை, மாலை என அவரவர் வசதிக்கேற்ப, அரை நாள், "அனுமதி' அளிக்கப்படுகிறது. ஒரு கணக்கெடுப்பாளர் சராசரியாக ஒரு நாளைக்கு பத்து வீடுகளில் கணக்கெடுக்கிறார். காலை 6 மணிக்கு துவங்கும் பணி, பல நாட்களில் இரவு 10 மணி வரை நீள்கிறது. இப்படி அகாலமான வேளையில் வீடுகளுக்குச் செல்லும்போது, பெண்கள் நைட்டியுடனும், ஆண்கள் வெற்றுடம்போடும் இருப்பது, கணக்கெடுக்கச் செல்லும் எதிர்பாலினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குகிறது.

சென்னை புறநகரில் பார்த்த ஒருவர், வெறும் நாலு முழம் துண்டுடன் தான், அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்தார். மேற்கு மாம்பலத்தில் கணக்கெடுத்த ஒரு பெண்ணின் நிலை இன்னும் மோசமானது. இரவு 7.30 மணிக்கு ஒரு வீட்டுக்குப் போனார். குடும்பத்தின் மூத்த குடிமகன், முட்ட முட்டக் குடித்திருந்தார். எல்லாவற்றுக்கும் எடக்கு மடக்கான பதில்கள் தான். "எத்தனை குழந்தைகள்? எனக் கேட்டால், "இந்த வீட்டுல ரெண்டு, அந்த வீட்டுல ரெண்டு' என பதில். நல்லவேளையாக, அருகிலேயே அவரது மனைவியும் இருந்ததால், தப்பித்தோம் பிழைத்தோம் என, கிடைத்த தகவல்களைப் பெற்றுக்கொண்டு, "எஸ்கேப்' ஆனார் பெண்.

மதத்தைத் தைரியமாகக் குறிப்பிடுபவர்கள், பட்டியலினத்தவரா, இல்லையா எனக் குறிப்பிடுவதில் தயக்கம் காட்டுகின்றனர். ஜாதி, ஊனம், பிறப்பு, இறப்பு பற்றிய கேள்விகள், தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான கேள்விகளுக்கு, குத்து மதிப்பான பதில்கள் சொல்லப்படுவது கவலைக்குரிய விஷயம். வேறு வேறு விதமாக கேள்விகள் கேட்டு, உண்மையான பதிலை யூகிக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான கணவன்களுக்கு, மனைவியைப் பற்றியும், மனைவியருக்கு, கணவன்களைப் பற்றியும் விவரம் (பிறந்த தேதி, பிறந்த ஊர், படிப்பு, பணியின் பெயர்) தெரியவில்லை.

சராசரியாக ஒரு வீட்டுக்கு, 20 நிமிடம் ஆகிறது. கணக்கெடுப்பு முடிந்ததும், குடும்பத்தில் உள்ள படித்தவர்கள், படிக்காதவர்கள், குழந்தைகள் என, பல்வேறு தகவல்களின் கூட்டுத்தொகையைக் கணக்கிடுகின்றனர். 28ம் தேதி இரவு, தத்தம் பகுதிகளுக்குச் சென்று, தெருவில் படுத்திருப்போரின் விவரத்தைச் சேகரிக்க உள்ளனர். அவர்கள், இதற்கு முன் கணக்கில் சேர்க்கப்படவில்லை எனில், வீடற்ற நபர்களாக குறிக்கப்படுகின்றனர். அன்று இரவு, துறைமுகங்களில் நிற்கும் கப்பல்களிலும் கணக்கெடுப்பு நடக்கும்.

மக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பது தான், இந்தக் கணக்கெடுப்பின் மிகப் பெரிய சிக்கல். ஓட்டுப்பதிவன்று அரசியல்வாதிகள் கொடுப்பது போல, ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்தால், ஆர்வமாக பதில் சொல்வரோ, என்னவோ...!

சினி கலைஞர்களை கடிந்துகொள்ளும் சினிமா கலைஞர்(ருக்காக)

சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற நடிகர், நடிகைகளில் சிலர் பாதியில் எழுந்து போனதற்கு தி.மு.க., உறுப்பினருமான, நடிகையுமான குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டும் சென்னையில் நடந்த விழாவில் நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட 76 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கினார் முதல்வர் கருணாநிதி. விழாவில் விருதை பெற்று கொண்ட நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட சிலர் நடிகர், நடிகையர் விழா முடியும் முன்னரே பாதியில் எழுந்து போனார்கள். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு நடிகை குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமது கண்டனத்தில் குஷ்பூ கூறியுள்ளதாவது, விழா நடந்தபோது மேடையில் நானும் இருந்தேன், அப்போது விருதுபெற்ற நடிகர், நடிகையர் சிலரின் இருக்கைகள் காலியாக இருந்தது. இதை பார்த்து நான் அதிர்ச்சியானேன். பெரியவர்கள் பலர் அமர்ந்திருந்த மேடையில் அவர்கள் இவ்வாறு செய்தது மரியாதைக்குரிய செயல் அல்ல. வேறுசில நிகழ்ச்சி இருந்ததால் நாங்கள் சென்றுவிட்டதாக அவர்கள் கூறலாம்.

87வயதான் ஒரு மாமனிதர் மற்றும் தமிழகத்தின் முதல்வர் கருணாநிதி அவர்கள் பல வேலைகளுக்கும் மத்தியிலும் இந்த நிகழ்ச்சி முடியும் வரை பங்கேற்று இருக்கிறார், அவர்களால் உட்கார முடியாதா என்ன? இதனை தி.மு.க., உறுப்பினராக நான் சொல்லவில்லை, நானும், ஒரு சினிமா கலைஞராகத்தான் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!