Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, December 7, 2011

மலிவு விலை மயக்கத்துக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!!

மது, ஹெராயின், கஞ்சா போன்றவை தான் போதை தரும்' என கருதினால், நீங்கள் விவரம் தெரியாதவர்கள் என்று அர்த்தம். பள்ளி மாணவர்களிடம் கேளுங்கள், "பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர்' என, எந்தெந்த பொருட்களில் போதை இருக்கிறது என, "கிறக்கத்துடன்' கூறுவர்.

நேற்று மதியம், மதுரை ஒத்தக்கடையில், அரசுப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் ஒருவர், "கிறங்கி' விழுந்தார். பல் உடைந்தும், முகத்தில் காயம் ஏற்பட்டும், தற்போது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரது இந்நிலைக்கு காரணம், "ஒயிட்னர்!'. பெட்ரோல் விற்கிற விலையில், அதை வாங்கி, "மோப்பம்' பிடித்து, போதை ஏற்ற முடியாது என்பதால், இவரை போன்ற சில மாணவர்களுக்கு, மலிவான விலையில் கிடைக்கும், "ஒயிட்னர்' போதையை தருகிறது. பள்ளி இடைவேளையின்போது, வெளியே வந்து, மூக்கால் ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு, பள்ளி முடியும் வரை, போதையுடன் இருக்கின்றனர். ஆசிரியர்கள் கண்டித்தும், மாணவர்கள் திருந்தவில்லை. போலீஸ் மிரட்டியும் பயப்படவில்லை. பெற்றோரும் கண்டிப்பதாக இல்லை.

இதுகுறித்து, அப்பகுதி எவர்சில்வர் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் அலி கூறுகையில், "பலமுறை மாணவர்களை கண்டித்து விட்டோம். திருந்துவதாக இல்லை. இவர்கள் மீது, பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருந்துவர். மாணவர்களுக்கு படிப்பை மட்டும் கற்றுத் தராமல், போதையால் ஏற்படும் விபரீதங்களையும், ஆசிரியர்கள் பாடம் எடுத்தால், மாணவர்கள் இதிலிருந்து விடுபட வாய்ப்புண்டு'' என்றார்.

இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மூளை நரம்பியல் டாக்டர்கள் கூறுகையில், "இதே போல் நகப் பூச்சு, பெயின்ட் போன்றவற்றை நுகர்ந்தும், போதை ஏற்றுகின்றனர். காரணம், அதில் உள்ள காரீயம். இது அதிகரிக்கும்போது, நரம்பு செல்களை பாதிக்கிறது. தொடர்ந்து உடம்பில் இருந்தால், மூளை, தண்டுவடமும், மனநலமும் பாதிக்கப்படும். இவர்களிடம், "கவுன்சிலிங்' செய்வதன் மூலம் திருத்த முடியும்'' என்றனர்.

2 comments :

இவர்களிடம், "கவுன்சிலிங்' செய்வதன் மூலம் திருத்த முடியும்'' என்றால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஏற்பாடு செய்தால் வருங்கால சந்ததிகளைக்காப்பாற்றமுடியுமே..

விழிப்புணர்வுப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றி

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!