Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 12, 2011

ஒட்டு யாருக்கு? கல்லுரி மாணவர்கள் பதில் (பணத்திற்கு அல்ல)

ஷியாம்சுந்தர் (ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி பி.இ. மாணவர்)

முதல் முறையாக மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதை எண்ணி மகிழ்கிறேன். நிறைய மக்கள் நலத் திட்டங்களை செய்துள்ள தி.மு.க அரசுக்கு ஓட்டுப் போடுவதா, ஆட்சி மாற்றம் தமிழகத்துக்கு நல்லது என்பதால் அ.தி.மு.க-வை ஆதரிப்பதா என்பதில் குழப்பமாக உள்ளது. எனினும் தேர்தலில் வெற்றி பெற்றவர் யாராக இருந்தாலும் நேர்மையாக, லஞ்சத்துக்கு ஆசைப்படாதவராக இருக்க வேண்டும்.

லோகேஷ் (எம்.ஜி.ஆர். யுனிவர்சிட்டி ஆப் இன்ஜினீயரிங் மாணவர்) அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்பதே நாட்டை சுரண்டத் தான் என்பதால் தேர்தலில் ஓட்டுப் போடுவது பற்றி எனக்கு பெரியதாக மகிழ்ச்சி இல்லை. எனினும் வாக்களிப்பது இந்தியக் குடிமகனின் கடமை என்பதால் பாட்டாளி மக்கள் கட்சி அல்லது தி.மு.க-வுக்கு வாக்களிப்பேன் என்றார்.

தீபிகா (ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி பி.இ. மாணவி) முதல் முறையாக வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற காத்திருக்கிறேன். தேர்தலில் வாக்களிக்காமல் ஒருவர் இருந்தால் அதை ஜனநாயகக் குற்றமாக கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றக் கூடிய நலத் திட்டங்களை தீட்டும் அரசாங்கமே நாட்டுக்குத் தேவை, இலவசங்களை வழங்கி மக்களை சோம்பேறியாக்கக் கூடாது. தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!