Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, March 1, 2011

தக்காளியின் மருத்துவ குணம்

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் அரிய பழம் இது. தக்காளியில் உள்ள சிட்ரிக், பாஸ்போரிக், மாலிக் ஆகிய அமிலங்கள் இரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றன.

புற்று நோயைத் தவிர்க்கும் பி1 (P1) என்ற பொருளும், உடலுக்கு நிறத்தையும் மனதிற்குத் துடிப்பையும் வழங்கும் 'லைகோபென்' என்ற பொருளும் தக்காளியில் உள்ளன.

கலோரி குறைவாக உள்ள பழம் இது. உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ளலாம். தினமும் 5 பழங்கள் சாப்பிட்டுவந்தால் உடல் எடை இரண்டே மாதத்தில் குறைந்து விடும்.

இத்துடன் உடலின் எந்தப் பகுதியில் எந்தவிதமான நோய்க்கிருமி இருந்தாலும் அந்த விஷக்கிருமிகளை அப்புறப்படுத்தி, சிறுநீரை நன்கு வெளியேறச் செய்து, அதன் மூலம் நோய்க்கிருமிகள் அனைத்தையும் உடலிலிருந்து வெளியேறச் செய்துவிடும். இதனால் கச்சிதமான தோற்றத்தில் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்

தக்காளியில் வைட்டமின் A, வைட்டமின் C, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிக அளவு உள்ளன. எனவே, தக்காளிச்சாறை உணவு சாப்பிடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு அருந்தினால் சாப்பாடு குறைவாகச் சாப்பிடலாம். போதிய சத்துணவும் தக்காளிச் சாறு மூலம் கிடைத்துவிடுவதால் உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.

நடுத்தர மக்களின் அரிய பழம் இது. ஆப்பிள், பப்பாளி, திராட்சையை விட விலை குறைவு என்பதால் தக்காளிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு இளமையை எளிதில் புதுப்பித்துக் கொள்ளலாம். ஏனென்றால், யூரிக் அமிலம் என்ற விஷ அமிலம் அப்புறப்படுத்தப்படுகிறது. கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது தக்காளிச் சாறு.

தக்காளிச் சாறுடன் காரட் அல்லது பீட்ரூட் சாறு அருந்துவது நல்லது. முதுமையிலும் கண்பார்வை தெளிவாக இருக்க வைட்டமின் A நிறைந்த தக்காளிச் சாறு அதிகம் உதவும்.

சாரா.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!