Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, March 31, 2011

இன்று ஒட்டு! நாளை வேட்டு!!

செல்போன் மெசேஜ் மூலம் நூதன பிரசாரம் துவங்கியுள்ளது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்ததை தொடர்ந்து பிரசாரம் உச்சகட்டத்தில் நடந்து வருகிறது. ஆடம்பர பிரசாரத்தை விட சைலண்ட் பிரசாரமே முன்னிலைப்படுத்தி நடந்து வருகிறது.

இந்த தேர்தல் மாவட்டத்தில் சில கட்சிகளுக்கு கவுரவ பிரச்னையாக உள்ளது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் செல்போனில் மெசேஜ் மூலம் நூதன பிரசாரம் நடந்து வருகிறது. தற்போது தேர்தல் களத்தில் உள்ள ஒரு முக்கிய அணி சார்பில் அனுப்பப்பட்ட செல்போன் மெசேஜில் அணிக்கு ஓட்டு கொடுத்தால் இலவசம் கிடைக்கும்.

ஆனால் பெட்ரோல், டீசல் விலை மற்றும் பஸ் கட்டணம் உயரும். ஊழல் தற்போதைய சாதனையை விட அதிகரிக்கும் போன்ற வாசகங்கள் இடம்பெறுகிறது. மெசேஜ் பிரசாரம் துவங்கிய நிலையில் தேர்தல் நாள் நெருங்கும் போது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உங்கள் ஓட்டோ உங்கள் கையில், நிதானமாக யோசித்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள். ஜெயா முன்பு சேர்த்ததை சிலவு செய்துகொண்டுள்ளார், முதல்வர் சேர்த்துக்கொண்டு இருக்கிறார் இதுதான் வித்தியாசம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!