Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, March 17, 2011

காங்கிரஸ்-திமுக இழுபறியில்??

காங்கிரஸ்- திமுக கட்சிகளுக்கு இடையில் புதுச்சேரியில் நடந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இரண்டு கட்சிகளும் எந்த வகையிலும் விட்டுக்கொடுத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் இருப்பது மொத்தம் 30 தொகுதி. இதில் காங்கிரஸ் 20 தொகுதிகளையும், திமுக 13 தொகுதிகளையும் கேட்கின்றன. இதைக் குறைத்துக் கொள்ள புதுச்சேரியைச் சேர்ந்த இக் கட்சிகளின் தலைவர்கள் முன்வரவில்லை. இதைத் தவிர இக் கூட்டணியில் உள்ள பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கும் தொகுதிகள் கொடுத்தாக வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் தங்கள் கட்சித் தலைமையிடம் இது தொடர்பாக கலந்து ஆலோசித்து பிறகு முடிவைத் தெரிவிப்பதாக இரண்டு கட்சித் தலைவர்களும் கூறி சென்றுவிட்டனர்.

தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் தொகுதி எண்ணிக்கை முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிக்கும் சூழ்நிலை வந்துவிட்டது. அதனால் இப்போது இந்த இரண்டு கட்சியின் மேலிடங்களும் புதுச்சேரியின் பிரச்னையைப் பேசத் தொடங்கியுள்ளதாகவும், இன்னும் 2 நாளில் சுமுக முடிவு கிடைக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!