Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, March 14, 2011

ஆலும் கட்சியும், அரசியல் கட்சிகளும்!

தி.மு.க., அணியில் காங்கிரஸ் 63 தொகுதிகளிலும், பா.ம.க., 30 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மூன்று கட்சிகளுடன் தொகுதிகள் அடையாளம் காணும் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. காங்கிரஸ் ஐவர் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில், சில தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் சிலர் தங்களது ஆதரவாளர்களுக்காக தி.மு.க.,விடம் கேட்ட தொகுதிகளும் கிடைக்கவில்லை என்ற பிரச்னையும் எழுந்துள்ளதால், பரபரப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அ.தி.மு.க., அணியிலும் நீண்ட இழுபறிக்கு பின், ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு எண்ணிக்கை தொடர்பான உடன்பாடு இன்று முடிவுக்கு வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.அ.தி.மு.க., அணியில் ம.தி.மு.க., 25 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் 18 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் 15 தொகுதிகளும் கேட்கின்றன. ஆனால், அ.தி.மு.க., தரப்பில் ம.தி.மு.க.,வுக்கு - 13, மார்க்சிஸ்டுக்கு - 11, இந்திய கம்யூனிஸ்டுக்கு - 9 என்ற அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அ.தி.மு.க., அணியில் தொகுதிப் பங்கீடு இறுதி வடிவம் பெறாமல் இழுபறியாக இருந்தது.

இந்நிலையில், மூன்று கட்சிகளிடமும் அ.தி.மு.க., நடத்திய இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் ம.தி.மு.க.,வுக்கு 18 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்குவதற்கு அ.தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டு மூன்று கட்சிகளும் இன்று, தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையöழுத்திட வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று தசமி திதி என்பதையும் கருத்தில் கொண்டு முடிவு செய்யலாம் என தெரிகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!