Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, March 24, 2011

ஜெ, க்கு செருப்பு வீசப்பட்டதா?

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெ., இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது இவருடன் வந்த அ.தி.மு.க., தொண்டர்கள் மீது செருப்பு வீசப்பட்டதால் .அ.தி.மு.க., - தி.மு.க., தொண்டர்கள் மோதும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.

அ.தி.மு.க., பொதுசெயலர் இன்று வேட்பு மனுத்தாக்கல் ஜெ., தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். 11 மணி அளவில் திருச்சி கலெக்டர் ஆபீசுக்கு தங்களுடைய தொண்டர்கள் புடைசூழ வந்தார். இவர் முன்பு செல்ல இவரது பின்னால் அ.தி.மு.க., தொண்டர்கள் சாரை,சாரையாக வந்து கொண்டிருந்தனர்.

இவர் மனுத்தாக்கல் செய்ய வரும்போது ஜெ., வை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ஆனந்தும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நேருவும், தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தனர். இந்நேரத்தில் இருதரப்பு தொண்டர்கள் குவிந்திருந்ததால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜெ.., மனுத்தாக்கல் செய்ய கலெக்டர் ஆபீஸ் வளாகத்திற்குள் சென்ற போது, தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வினரை நோக்கி செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருதரப்பும் பலத்த குரலில் கத்தியபடி மோதும் சூழல் ஏற்பட்டது. வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் தொற்றிக்கொண்டது இருதரப்பினர் நடத்திய கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி மண்டை உடைந்தது. ரத்தம் சொட்ட, சொட்ட, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!