Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, March 30, 2011

ஒபாமா நிர்வாகத்தில் முக்கிய பதவி? இந்தியர்களுக்கு!

வாஷிங்டன் : தேசிய கலை கவுன்சில் உறுப்பினராக சிகாகோவைச் சேர்ந்த தீபா குப்தா நியமிக்கப் பட்டுள்ளார். சீன குடியரசுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல் குழுவின் உறுப்பினராக நிஷா தேசாய் பிஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தங்களது பதவியை ஏற்க முன்வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் அதிபர் ஒபாமா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது பதவியின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

சிகாகோவில் உள்ள ஜான் டி & கேத்தரீன் டி மேக் ஆர்தர் அறக்கட்டளையில் ஊடகங்களுக்கான திட்ட அதிகாரியாக உள்ள தீபா குப்தா இப்போது புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறக்கட்டளையின் நிதியத்தை கலை, கலாசாரத்தை வளர்க்கும் பணிக்கு இவர் பயன்படுத்துகிறார். கெல்லாக் நிர்வாகவியல் கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜென்சியில் ஆசிய பிரிவுக்கான துணை நிர்வாகியாக நிஷா தேசாய் உள்ளார். அவர் அந்தப் பதவியுடன் புதிய பதவியை கூடுதலாக வகிப்பார் என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களிருவர் தவிர மேலும் 7 பேர் வெவ்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!