Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 27, 2011

இந்திய இளம் தலைவி, ஐ. நா. மாநாட்டில்!

நியூயார்க், மார்ச் 27: மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஐ.நா.வின் 11-வது வறுமை ஒழிப்பு மாநாட்டில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பஞ்சாயத்து தலைவி சாவி ரஜாவத் கலந்து கொண்டார்.

அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், வெளிநாட்டு தூதர்களும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றின் பஞ்சாயத்து தலைவி சாவி ரஜாவத்தும் கலந்து கொண்டார். 30 வயதான அவர் ஜீன்ஸ் அணிந்த நவீன மங்கை என்பதும் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏர் டெல் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த அவர் கிராம முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு அந்த பதவியை துறந்து ராஜஸ்தான் மாநிலம் சோடா கிராமத்துக்கான பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வென்று பஞ்சாயத்து தலைவியாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

மாநாட்டில் பேசிய ரஜாவத், "கடந்த 65 ஆண்டுகளில் இந்திய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான வசதிகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்காகத் தான் போராடி வருகிறோம். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நான் பஞ்சாயத்து தலைவியாக பொறுப்பு வகிக்கும் சோடா கிராமத்தில் துரிதமாக பல வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாங்கள் இதுவரை தனியார் நிறுவனங்களிடம் இருந்தோ, தொண்டு நிறுவனங்களிடம் இருந்தோ எந்த உதவியும் பெறவில்லை. எங்களது இலக்கை எட்ட வெளியில் இருந்தும் நிறுவனங்களிடம் இருந்தும் உதவி கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்' என்றார் அவர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!