Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, March 4, 2011

புலிகளின் கைவர்சையா? இலங்கை அரசு சந்தேகம்!

கொழும்பு, மார்ச் 4 இலங்கையில் இரு போர் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த விமானியின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக குழப்பம் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த முக்கியத் தளபதி ஒருவர் திரிகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானி மொனாத் பெரேரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார் என்று விமானப்படைத் தளபதி ஹர்ச அபேவிக்கிரம கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இளைஞரான மொனாத் உட்பட அனைத்து விமானிகளுமே தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். விமானத்தில் புறப்படும் முன்னரும் திரும்பி வந்ததும் அவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படும். மேலும் கடந்த மாதம் அவருக்கு முழுமையான மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இதில் அவர் நல்ல உடல்நிலையி்ல் தான் இருந்துள்ளார். என்று விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் விமான மொனாத் பெரேராவின் பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், தற்போது மரணத்துக்குப் பின்னர் அவருக்கு ஸ்குவாட்ரன் லீடராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

புலிகளா, அல்லது இலங்கை அரசு செய்துவிட்டு புலிகளின் பெயருக்கு களங்கம் விளைவிக்க செய்த சதியா.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!