Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, March 25, 2011

அழகிரிக்காக கட்சை கட்டிய, குஷ்பு!

மதுரையில் நடிகை குஷ்பு. தேர்தல் பிரசாரத்துக்காக இன்று வெள்ளிக்கிழை காலை மதுரை வந்தார் குஷ்பு. அவர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இல்லத்துக்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் பிரசாரம் வியூகம் குறித்து சுமார் 1 மணி நேரம் அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவருடன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு உடன் இருந்தார். மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளரர் கோ. தளபதியை ஆதரித்து வெள்ளிக்கிழமை காலை நடிகை குஷ்பு மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் திறந்த வெளி வேனில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, முதல் அமைச்சர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் அழகான கதாநாயகியை உருவாக்கி உள்ளார். கடந்த தேர்தலில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி இலவச டி.வி., கேஸ் வழங்கி உள்ளார். இந்த தேர்தல் அறிக்கையில் மிக்ஸி, கிரைண்டர், தருவதாக கூறியுள்ளார். சொல்வதை செய்பவர்தான் முதல்வர் கருணாநிதி. மீண்டும் அவர் தமிழகத்தில் முதல்வராவது உறுதி.

முதல்-அமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் அழகிரி ஆசிபெற்ற வேட்பாளர் தளபதிக்கு வருகிற தேர்தலில் ஆதரவு தரவேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியபடி 35 கிலோ இலவச அரிசி, 58 வயது முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ், வீடு தேடு வரும் மருத்துவம் போன்ற நல்ல திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கப்போகிறது எனக் குஷ்பு தனது பிரச்சாரத்தில் பேசினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!