Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 5, 2011

பிரபு தேவா, வை தொடர்ந்து அடுத்து விவாகரத்து!

விவாகரத்து பெறுபவர்களின் பட்டியலில் சினிமாக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. சமீபத்தில் விவாகரத்து பெற்ற செல்வராகவன்-சோனியா அகர்வால் பிரகாஷ்ராஜ்-லலிதாகுமாரி, நடிகர்கள் அரவிந்த்சாமி இதுதவிர விவாகரத்து கேட்டுள்ள பிரபுதேவா-ரமலத் ஜோடி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில் மற்றொரு நடிகையும் சேர்ந்துள்ளார். அவர் பெயர் பூமிகா.

தமிழில் "பத்ரி" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூமிகா, "ரோஜாகூட்டம்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இந்தியில் பூமிகா சாவ்லா என்ற பெயரில் அவர் ரொம்ப பிரபலம். இவருக்கும் பிரபல யோகா மாஸ்டர் பரத் தாகூருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். சந்தோஷமாக சென்ற இவர்கள் வாழ்க்கையில் இப்போது புயல் அடிக்க ஆரம்பித்துள்ளது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் பூமிகா விவாகரத்து கேட்டு அப்பீல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதற்காக விவாகரத்து என்று விசாரித்த போது பரத் தாகூரும்-பூமிகாவும் இணைந்து "தகிட தகிட" என ஒருபடம் தயாரித்து உள்ளனர். ஆனால் இந்தபடம் ப்ளாப் ஆனது. இதுதவிர துபாயில் யோகா பள்ளி ஒன்றும் திறந்து உள்ளனர். இதுவும் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லையாம். இதனால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் பரத்தாகூர் தொடர்ந்து படம் தயாரிக்கும் படி பூமிகாவை வற்புறுத்தி வருவதாக தெரிகிறது. ஏற்கனவே நிறைய நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து படதயாரிக்கும் படி கணவர் கூறிவருவது அவரை வெறுப்‌படையச் செய்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து வரைக்கும் சென்றுள்ளதாக தெரிகிறது. பூமிகா தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு அப்பீல் செய்துள்ளார்.

பூமிகா தற்போது தனது தயாருடன் வசித்து வருகிறார். தவிர முன்பெல்லாம் பொது நிகழ்ச்சியில் தனது கணவருடன் சேர்ந்து வந்த பூமிகா இப்போது தனியாகத்தான் வருகிறாராம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!