Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, February 2, 2011

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர்!

சென்னை :

வரும் சட்டசபைத் தேர்தலுக்காக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணி முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 10ம் தேதி வெளியிடப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், தங்கள் வசிப்பிட முகவரிக்கான சான்றுடன், படிவம் 6ல் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 24 வயதுடையவர்கள் தங்கள் விண்ணப் பித்துடன், வயதுக்கான சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களை, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள் (நகராட்சிகளில் தாசில்தார் அலுவலகங்கள்) அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள் (மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்கள்), மற்ற பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.தாசில்தார் அலுவலகங்களில் உள்ள தலைமையிட துணை தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தலைமை உதவியாளர், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உள்ள அலுவலக மேலாளர் ஆகியோர் இந்த விண்ணப்பங்களை பெற, அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பத்தை பெற்றதற்கு ஒப்புதல் சீட்டு அளிப்பதோடு, விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறியவும், தகுதியிருந்தால் புகைப்பட அடையாள அட்டையைப் பெறவும் விண்ணப்பதாரர் எந்த நாளில் வர வேண்டும் என்பதை அவர் தெரிவிப்பார்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டோருக்கு ஒரு மாதத்தில் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். இதேபோல, தங்களது பெயர் மற்றும் விவரங்களில் திருத்தங்கள் செய்ய விரும்புவோர், படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

1 comments :

தகவலுக்கு நன்றி.நான் பல முறை வாய்ப்புகளை தவற விட்டுவிட்டேன்.இப்போது சேர்க்கவேண்டும்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!