Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, February 23, 2011

காதலை எதிர்த்து!! கூலிப்படை ஏவிய தந்தை?

சென்னை : பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற தந்தையை கூட்டாளிகளுடன் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை தேடி வருகின்றனர்.

மதுரை, திருநகரை சேர்ந்தவர் மனோகர் (51) இவரது மகள் தீபிகா (19) பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (23) இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தீபிகாவிற்கு 18 வயது பூர்த்தியானது. இதையடுத்து காதலனுடன் அவர் மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தார். அப்போது இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு போலீசார் செய்த சமரசத்தை பெற்றோர் ஏற்க மறுத்தனர். மேலும், தங்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டால், கொலை செய்து விடுவோம் என்று பெண்ணின் பெற்றோர் மிரட்டினர். இதையடுத்து, தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தாம்பரம் சானடோரியம், மாதவன் தெருவில் நாகராஜ் மனைவியுடன் வாடகை வீட்டில் குடிபெயர்ந்தார். வீட்டிற்கு அருகே வாடிக்கையாளர் சேவை மையம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி மதியம் தீபிகா வீட்டில் தனியாக இருந்த போது, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டியது. இதில், பலத்த காயமடைந்த தீபிகா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்படி, பரங்கிமலை துணை கமிஷனர் ராமர் மேற்பார்வையில், தாம்பரம் உதவி கமிஷனர் நாராயணசாமி, குரோம்பேட்டை இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணையில், எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால், தீபிகாவின் தந்தை மனோகர் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. உள்ளகரத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மனோகரையும், குரோம்பேட்டை நியூ காலனியில் தங்கியிருந்த பாரதி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (20) முருகன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து மனோகர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: என் மகளின் காதல் விவகாரம் தெரிந்தவுடன் அவரை கண்டித்தேன். பொறியியல் கல்லூரியில் மகளை படிக்க வைத்தேன். இரண்டு லட்ச ரூபாய் கல்லூரிக்கு கட்டணம் செலுத்தினேன். ஆனால், எங்களை ஏமாற்றிவிட்டு, திட்டமிட்டபடியே நாகராஜை, அவள் திருமணம் செய்து கொண்டாள். இதனால் ஆத்திரம் ஏற்பட்டது. என் சகோதரர் மகன் பாரதியின் உதவியுடன், மதுரையை சேர்ந்த கூலிப்படையை வைத்து தீபிகாவை கொலை செய்ய திட்டமிட்டோம். இதன்படி கூலிப்படைக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!