Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 19, 2011

மீனவர்கள், கடற்படை கூட்டு சதி, அம்பலமாகும் உண்மை!

நாகப்பட்டினம், பிப். 19: இலங்கை மீனவர்களும், இலங்கைக் கடற்படையினரும் கூட்டாக சேர்ந்தே தமிழக மீனவர்களைக் கைது செய்தனர் என இலங்கைச் சிறையிலிருந்து சனிக்கிழமை நாகை திரும்பிய தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.

நாகை, காரைக்கால், புதுக்கோட்டை, ராமேசுவரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டனர்.

மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர முயற்சிகளால், தமிழக மீனவர்களை இலங்கை அரசு வெள்ளிக்கிழமை விடுவித்தது.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை காலை நாகை துறைமுகப் பகுதிக்கு வந்தனர். அப்போது மீனவர்கள், இலங்கையில் தாங்கள் சிறைபிடிக்கப்பட்டது குறித்துக் கூறியது:

செவ்வாய்க்கிழமை மாலை வரை இலங்கை மீனவர்களும், இலங்கைக் கடற்படையினரும் தமிழக மீனவர்களை சிறைபிடிப்பிடிக்க தொடர்ந்து ரோந்து வந்து கொண்டிருந்தனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்களே தாக்குதல் நடத்தினர். பெட்ரோல் குண்டு, கற்கள் ஆகியவற்றை வீசி தாக்கினர்.

இலங்கை மீனவர்கள் அழைத்ததும் அவர்களுடன் சென்ற தமிழக மீனவர்கள் தாக்கப்படவில்லை. அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றவர்கள் மீதே இலங்கை மீனவர்கள் கடும் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை மீனவர்களுக்கு பாதுகாப்பாக இலங்கைக் கடற்படையினர் செயல்பட்டனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள வடமராச்சி என்ற கிராமத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். பின்னர், அங்கிருந்து பருத்தித்துறை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். புதன்கிழமை பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காவல் நிலையத்துக்கு வந்து, தமிழக மீனவர்களைச் சந்தித்தார். அப்போது, நீங்கள் எல்லைத் தாண்டி வந்தது தவறுதானே என்றார். மறுத்துப் பேச முடியாத நிலையில் நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதே கேள்வி, நீதிமன்றத்திலும் கேட்கப்பட்டது. அங்கும் ஒப்புக்கொண்டோம்.

தமிழக மீனவர்களின் படகுகளிலிருந்து ஜி.பி.எஸ். கருவிகளையும், மீன்களையும் இலங்கை மீனவர்கள் எடுத்துக் கொண்டனர். இதனால், ஒவ்வொரு படகுக்கும் சுமார் ரூ. 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டது என அவர்கள் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!