Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 11, 2011

மாறிவரும் துப்பாக்கி கலாசாரம், இந்தியா!

லக்னோ : உத்திரபிரதேச மாநிலம் லக்னோ அருகே கல்லூரி மாணவியை ஒருவர் சுட்டுக்கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தேசிய அளவிலான கபடி வீராங்கனை ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் மறைவதற்குள் இந்த கொடிய சம்பவம் நடந்துள்ளது.

சமீப காலமாக காரணமே இல்லாத கொலைகள் அதிகரித்து வருவது சமூக ஆர்வவலர்களை கவலையடையச்செய்துள்ளது. லக்னோவில் 18 வயது கொண்ட கல்லூரி மாணவி சாக்ஷி. இவர் அருகில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டுக்காரர் ஆஷீஸ் இவர்மீது காதல் வலையை விரித்துள்ளார். காதல் ஒருத்தலையாக இருந்திருக்கிறது. 

இந்நிலையில் சாக்ஷி கல்லூரிக்கு செல்லும் வழியில் ஆசீஸ் மற்றொரு நண்பருடன் பைக்கில் வந்தார். சாக்சியை தனது பைக்கில் ஏறுமாறு கேட்டார். ஆனால் அதற்கு மறுத்து விட்டதால் ஆஷீஸ் ஆத்திரமுற்றார். உடனே கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் வீட்டுக்கு சென்ற ஆஷீஸ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இவர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!