Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, February 17, 2011

பஹ்ரைன் அரசுக்கு நெருக்கடி தரும் சியா?

பஹ்ரைன் : எகிப்தில் ஏற்பட்ட ஜனநாயக உணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு கிடைத்த வெற்றியின் அறிகுறி, தற்போது வளைகுடா நாடான பக்ரைனை தொற்றிக் கொண்டிருக்கிறது. பஹ்ரைன் தலைநகரான மனாமாவில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமி போராட்டம் நேற்று நடத்தினர்.

ஆயிரக்கணக்கில் குழுமிய அவர்களை பாதுகாப்பு படையினர் விரட்டி அடித்தனர். அந்த மோதலில் 5 பேர் இறந்ததாகவும், 100 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.கடந்த செவ்வாய்கிழமை முதல் நடைபெறும் இந்த போராட்டத்தில், அரசுக்கு எதிராக வைக்கப்படும் கோரிக்கை, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்பதே.

ஏற்கனவே எகிப்திலும், துனிஷியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து, அந்நாட்டு அதிபர்களை பதவியிறக்கத்திற்கு வழிவகுத்த போராட்டங்களின் சாயல் இப்போது இங்கே இருக்கிறது. பஹ்ரைனில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இப்ராகீம் ஷெரீப் தலைமையிலான செக்யூலர் வாத் கட்சி நடத்துகிறது. பஹ்ரைனில் ஏற்பட்ட அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அமெரிக்காவுக்கு சற்று எரிச்சல் தரும் அம்சம்.

அமெரிக்காவின் ராணுவ கூட்டாளி பஹ்ரைன். இங்குள்ள கடற்பகுதியில் அமெரிக்காவின் ஐந்தாவது கப்பல் படைத்தளம் நிரந்தரமாக இருக்கிறது.பக்ரைனில் வாழும் மக்கள் பெரும் பகுதியினர் ஷியா முஸ்லிகள். ஆனால், ஆட்சியாளர்கள் மற்றொரு பிரிவான சன்னி முஸ்லிம்கள். கடந்த 200 ஆண்டுகளாகவே இங்கு மெஜாரிட்டி இல்லாத பிரிவினர் ஆட்சி என்பது ஒரு நெருடலாக இருந்த போதும், தற்போது ஆட்சி மாற்றம் தேவை என, மக்கள் குரல் எழுப்பி போராட முன்வந்துள்ளனர்.

கடந்த 2002ல், இங்கே மன்னர் தலைமையிலான சட்ட நெறிமுறை அரசு கொண்டு வரப்பட்டதே தவிர ஆட்சியில் பெரிய மாற்றமில்லை. மக்கள் எதிர்ப்பு அதிகரிப்பதை கண்ட பக்ரைன் மன்னர் ஷேக் அகமது பின் இசா அலி கலிபா இரு நாட்களுக்கு முன் "டிவி'யில் தோன்றி "நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்' என அறிவித்தார்.

ஆனால், அரசை எதிர்த்து மனாமாவில் உள்ள பேரள் ஸ்குயர் சதுக்கத்தில் கூடாரம் அமைத்து மக்கள் தங்கி ஆர்ப்பாட்டத்தை அஞ்சாமல் செய்து வருகின்றனர். போலீசார் அடக்குமுறை நேற்று அதிகரித்தால், இந்த மோதலில் 5 பேர் உயிரிழக்க நேரிட்டது என்றும் காயம்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் ரத்தம் தர மக்கள் கூட்டமாக வந்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!