Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, February 24, 2011

வெள்ளித்திரையில் கள்ள சாமியார் நித்யா!

சாமியார் நித்தியானந்தா நடிகை ரஞ்சி‌தாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில் அந்த சம்பவங்களை காட்சியாக்கி கல்லா கட்ட நினைத்த புதுப்பட குழு தங்கள் படத்தில் நித்தியானந்தா தொடர்பான காட்சிகளை வைத்திருந்தனர்.

வில்லாளன் என்ற பெயரில் உருவாகியிருக்கும் அந்த படத்தை தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., கண்டோன்மெண்ட் சண்முகம் தயாரித்துள்ளார். வெற்றிவேல் - சூரியன் ஆகியோர் இயக்கியுள்ளனர். நாயகனாக புதுமுகம் வெற்றிவேலும் நாயகியாக புதுமுகம் சுஷ்மிதாவும் நடித்துள்ளனர்.

ரீலிசுக்கு தயாராகியிருக்கும் இப்படம் சென்சார் சான்றிதழுக்காக சமீபத்தில் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள், நித்தியானந்தா, காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் ஆகியோரை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த காட்சிகளை நீக்கச் சொன்னார்கள். படக்குழுவினர் எவ்வளவோ‌ கேட்டும் காட்சிகளை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து நித்தியானந்தா ‌தேவநாதன் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டன.

இதுபற்றி படத்தின் டைரக்டர்கள் வெற்றிவேல், சூரியன் ஆகியோர் அளித்துள்ள பேட்டியில் சாமியார் நித்யானந்தா மற்றும் அர்ச்சகர் தேவநாதன் காட்சிகளை ஒரு பாடலில்தான் வைத்திருந்தோம். அதை தணிக்கை குழுவினர் அனுமதிக்காமல் வெட்டி நீக்கி விட்டனர் என்றனர்.

1 comments :

நான் என்னமோ நித்யானந்தாதான் வெளியே வந்து திரும்ப கூட்டத்தைக் கூட்டி விட்டார் என்று நினைத்தேன்.

நன்றி பகிர்ந்தமைக்கு.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!