Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 4, 2011

"எஸ் க்யூப்' பள்ளி குழந்தைகளுக்காக பி.பாபு கண்டுபிடிப்பு

பள்ளிக்குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் குறுஞ் செய்திகளாக பெற்றோருக்கு அனுப்பும், மென் பொருளை கண்டுபிடித்துள்ள பிரசன்ன பாபு ஒவ்வொரு சமூகப் பிரச்னைக்குமே, ஏதாவது ஒரு தீர்வை யோசித்து பார்ப்பது என் வழக்கம். அந்த வகையில், பள்ளிக் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பான செய்திகளைப் படித்த போது, அதற்கான தீர்வு காணும் முயற்சியில் இறங்கினேன்.

மூன்று மாதக் கடின உழைப்பிற்குப் பின், ஒரு புதிய மென் பொருளை கண்டுபிடித் துள்ளேன். இதற்கு "எஸ் க்யூப்' என்று பெயரிட்டுள்ளேன். பள்ளி செல்லும் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும், குறுஞ்செய்திகளாக, பெற்றோரின் மொபைல் போனுக்கு, "எஸ் க்யூப்' அனுப்பி வைக்கும். பள்ளி வேன் அல்லது பஸ் குழந்தைகளை ஏற்றிச் செல்வது முதல், முதல் பாட வேளை வருகைப் பதிவு உணவு நேரத்திற்கு பின் உள்ள பாட வகுப்பு, மாலை வீடு திரும்பும் வரை எல்லா விஷயங்களும், பெற்றோருக்கு குறுஞ்செய்தியாக வந்து விடும். மாலை நேரத்தில் பள்ளியில் சிறப்பு வகுப்பில் குழந்தை பங்கேற்றால், அது குறித்த அறிவிப்பும் கிடைத்துவிடும்.

இந்த ஏற்பாடு பள்ளியை கட்' அடித்துவிட்டு சினிமாவிற்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே பாதகமானது; பெற்றோருக்கு 100 சதவீதம் சாதகமானது. இந்த வசதியை பெற, பள்ளியில் இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் இருப்பது அவசியம். வருகைப்பதிவு விவரங்கள் கம்ப்யூட்டரில் ஒருவரால், சுலபமான முறையில் ஏற்றப்பட வேண்டும். அரசே மாநிலம் தழுவிய அளவில், பள்ளிகளில் இந்த வசதியை ஏற்படுத்தலாம். தனியார் பள்ளிகளிலும், இந்த முறையை கட்டாயமாக்கச் சொல்லி கேட்கலாம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!