Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, February 2, 2011

பல முறை துப்பியாகிவிட்டது, மத்திய, மாநில அரசுகளை?

எகிப்தில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு முன் டுனிசியாவில் டிவிட்டர் புரட்சி வெடித்தது.வேலையில்லா திண்டாட்டம் ,ஊழல் போன்ற பிர்சனைகளால் வெறுத்து போன டுனிசிய மக்கள் டிவிட்டர் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத்துவங்கியது அரசுக்கு எதிரான மக்கள் இயக்கமாக உருவானது.

டுனிசியாவின் புரட்சி தீ மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரவலாம் என்று கணிக்கப்பட்டதற்கு ஏற்பவே எகிப்தில் பதவி நாற்காலியில் பல ஆண்டுகளாக ஒட்டிக்கொண்டிருக்கும் முபாரக் அரசுக்கும் எதிரான‌ போராட்டம் வெடித்தது.எதிர்பார்க்க கூடியது போலவே எகிப்து அரசு முதல் வேலையாக டிவிட்டருக்கு தடை விதித்து இண்டெர்நெட் பயன்பட்டிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.

போராட்டத்தை நசுக்க எப்போதுமே ஆதக்க சக்திகள் பல்வேறு அடக்கு முறைகளை கடைபிடித்து வந்துள்ளனர்.தகவல் யுகத்தில் மக்கள் போராட்டத்திற்கான மாபெரும் ஆயுதமாக இணையம் உருவாகி இருப்பதால் போராட்டம் என்று வரும் போது அரசுகள் முதலில் செய்வது இண்டெர்நெட்டின் குரல் வலையை நெறிப்பது தான்.

சரி விசயத்துக்கு வருவோம், வேறு யார், நம் மீனவர்கள்தான் தெனம் கடலில் சுடப்படும் அவலநிலை., மத்திய, மாநில அரசுகள் வாய்வார்த்தகலால் எதிர்ப்பை சொல்லிவிட்டு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை, நம் மீனவர்களுக்கு.

இறந்தவர்கள் எல்லோருமே வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த ஏழைகள். எனினும், தங்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் உயிர்தான் எனக் கருதி, ஈழத் தமிழர்களைக் காப்பதற்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அந்த தியாகிகளின் குடும்பத்தார், அரசு அளித்த பணத்தை வாங்க மறுத்தனர். இந்த இன உணர்வு தமிழக இளைஞர்களுக்கு வர வேண்டும். கடந்த 27 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களகடற்படை கொன்று குவித்துள்ளது. இதைக் கேட்க நாதியில்லை.

உலகின் 5-வது பெரிய கடற்படையை வைத்துள்ள இந்தியாவால், எல்லை தாண்டும் ஒரு சிறிய நாட்டின் கடற்படையைத் தடுக்க முடியவில்லை என்பதை யாராவது நம்புவார்களா? ஆனால், தமிழர்கள் என்பதால் இவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை.

நமது மீனவர்களையும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமெனில், தமிழகத்தில் உள்ள 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழவேண்டும்.

தமிழ் இனத்தைக் காக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை நாளை உலகத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் வரும்.

தமிழ் தேசிய இனம் ஒன்றுபட்டால், அதை வெல்லும் சக்தி யாருக்கும் கிடையாது. இன்று, உலகத் தமிழினம் அழிவின் விளிம்பில் உள்ளது. இப்போதாவது இந்த அபாயத்தை நாம் உணராவிட்டால், நமக்கு விடிவு வராது. எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை காக்கும் கடமை நமக்குள்ளது.

குறிப்பு : வாங்க ஓட்டுக்கு பைசா தர்றாங்க போய் வாங்கலாம், யாருக்கோ பிரச்சினை நமேக்கென்னே! மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்ல நாமலும்தான்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!