Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 25, 2011

மருத்துவ பயன் லாபம் ஈட்ட கறிவேப்பிலை!!

தென்னிந்திய சமையலில் அதிகளவில் இடம் பெறுவது கறிவேப்பிலை. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கொத்து 50 காசுக்கு விற்கப்பட்டு வந்த கறிவேப்பிலை தற்போது 2 ரூபாய் வரை விற்கப்படும் அளவிற்கு மவுசு கூடியுள்ளது.

மருத்துவக் குணத்தின் காரணமாக கறிவேப்பிலைப் பொடி பெருமளவு அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிக மருத்துவக் குணங்களும், அதிக லாபமும் தரும் கறிவேப்பிலை சாகுபடியில் ஒரே ஆண்டில் ஆறு முறை அறுவடை செய்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும்.

மருத்துவ குணங்கள்: அஜீரணம், வயிற்றுப்போக்கு, இளநரை, முடியின் வேர்கள் வலுப்படுத்துல் ஆகியவற்றுக்கு கறிவேப்பிலை உதவுகிறது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்-சி உயிர்சத்தும் உள்ளது.

செங்காம்பு, தார்வாட் 1, தார்வாட் 2 ஆகிய ரக கறிவேப்பிலை தற்போது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கறிவேப்பிலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து தோட்டக்கலைத் துறை தெரிவித்த தகவல்கள்:

மண் வகை: மணல் கலந்த செம்மண். வண்டல் மண் மற்றும் நல்ல வடிகால் வசதியுள்ள மண்.

நடவு முறை: பெரிய செடிகளாக வளர்க்க 2.5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். குத்துச் செடிகளாக வளர்க்க 1.2 மீ இடைவெளி வேண்டும்.

அதிக மகசூல் பெற 60 செ.மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இம்முறையில் நடவு செய்தால் 45 முதல் 60 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய முடியும். பூமியில் இருந்து 10 செ.மீ. உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும்.

உரமிடுதல்: அடிவுரம் 1 அடி ஆழத்தில் சதுர குழித் தோண்டி நாற்றுகளைச் சுற்றி மக்கிய தொழுவுரம் இடவேண்டும். பின்னர் உரத்தை மண்ணுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். நட்டவுடன் ஒரு முறையும், மூன்றாம் நாள் ஒரு முறையும், பின்னர் வாரம் ஒருமுறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

மேலுரம்: ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் ஒரு செடிக்கு 20 கிலோ தொழுவுரத்தை இட்டு கொத்தி விடவேண்டும்.

பயிர் பாதுகாப்பு: கறிவேப்பிலையைத் தாக்கும் நோய் இலைப்புள்ளி நோயாகும். இதில் இருந்து பாதுகாக்க கார்பன்டைசிம் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் அளவு கலந்து செடிகள் முழுவதும் நனையும் வரை தெளிக்க வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்: நடவு செய்யும் முறையைப் பொறுத்து மகசூல் மாறுபடும். 60 செ.மீ. இடைவெளியில் நடவு செய்தால் முதலில் 6 முதல் 9 மாதத்தில் முதல் அறுவடை செய்யலாம். தொடர்ந்து 45 முதல் 60 நாள்களில் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 2000 கிலோ வரை அறுவடை செய்ய முடியும்.

தற்போது கறிவேப்பிலை ஒரு கிலோ ரூ.30 முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இன்னும் விசேஷ நாள்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!