மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த உயரதிகாரியான ஹேமந்த் கர்க்கரேயை நினைவுபடுத்தும் வகையில் அந்த சம்பவத்தை சினிமாவாக எடுக்கிறார் டைரக்டர் அமல் நீரத். ராம்கோபால் வர்மாவிடன் இயக்குனர் பயிற்சி பெற்ற அனுபடத்துடன் படம் இயக்க வந்திருக்கும் இவர், அன்வர் என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தையும், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தையும் கலந்து கட்டி கதை சொல்லியிருக்கிறாராம்.
மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் உயிரிழந்த போலீஸ் உயர் அதிகாரி ஹேமந்த் கர்க்கரேயை நினைவுபடுத்தும் கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். மத தலைவர் ஒருவருடைய கையாளாக ப்ருத்விராஜ் நடித்திருக்கிறார். ப்ருத்வி ராஜ் ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார். மொழி, அபியும் நானும், வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் ஒர்க்அவுட் ஆன பிரகாஷ்ராஜ்- ப்ருத்வி ராஜ் காம்பினேஷன் இந்த படத்திலும் ரசிகர்களை கவரும் என்று நம்பிக்கை கூறும் டைரக்டர் அமல் நீரத், படம் பார்க்கும் இளைஞர்கள் பயங்கரவாதத்தை பார்த்து கண்ணீர் வடிக்காமல் அதற்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிற படமாக இது இருக்கும், என்கிறார். படத்தில் இடம்பெறும் 5 குண்டு வெடிப்பு சம்பவங்களை தத்ரூபமாக எடுத்து முடித்திருக்கிறாராம் அமல்நீரத்!



0 comments :
Post a Comment