Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, February 23, 2011

விட்டு கொடுப்போமா, விட்டு பிடிப்போமா?? கலைஞர்!!

சென்னை : தொகுதிப் பங்கீட்டுப் பேச்சின் போது ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம் அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு என்று மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் முன் வைத்தது. இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு பிரச்னையை சோனியாவிடம் தி.மு.க., கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில், தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள் மட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள கோபம், அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழாவில் கலந்து கொள்ள நேற்று திருவண்ணாமலை சென்ற முதல்வர் கருணாநிதி, கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், இது தொடர்பாக கருத்துக்களை கேட்டார். கூட்டணியில் இருக்கும் எதார்த்த நிலையை கருத்தில் கொள்ளாமல் 80 சீட் வேண்டும், 90 சீட் வேண்டும் என காங்கிரசின் அனைத்து மட்டத் தலைவர்களும் கூறி வந்தது தி.மு.க.,வுக்கு தேவையற்ற நெருக்கடியை உருவாக்கியதாகக் கூறும் தி.மு.க., நிர்வாகிகள், லோக்சபா தேர்தலில் அதிக இடங்களைப் பெற இது போன்ற அணுகுமுறையை காங்கிரஸ் பின்பற்றியதை சுட்டிக் காட்டினர்.

லோக்சபா தேர்தலில் 16 இடங்களைப் பெற்ற காங்கிரசால், தங்கபாலு, மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிரபு, கார்வேந்தன் போன்ற முக்கிய தலைவர்களையே வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. கோஷ்டி பூசல், மாவட்ட ஒன்றிய அளவில் தேர்தல் பணி செய்ய காங்கிரசுக்கு ஆள் இல்லாதது. தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை காங்கிரசார் செலவிடாதது போன்றவையால் எதிர் அணி தான் லாபம் அடைந்தது. சட்டசபை தேர்தலிலும் இதே நிலை தான் காங்கிரசால் ஏற்படும்' என்றும் தலைமையிடம் கூறினர்.

கூட்டணியின் பெரிய கட்சி என்ற வகையில் காங்கிரசின் செயல்பாடுகள் கடந்த காலத்தில் இல்லை. தி.மு.க.,வுக்கு நெருக்கடியையும், அவமானத்தையும் உருவாக்குதிலேயே அதன் கவனம் இருந்துள்ளது. காங்கிரசின் முன்னாள் தலைவர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் இதற்கு சான்றாக அமைந்துள்ளன' என்றும் கூறியுள்ளனர்.

பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் மூலம் வட மாவட்டங்களிலும், கொங்கு நாடு மக்கள் கட்சி மூலம் மேற்கு மாவட்டங்களிலும், மூவேந்தர் முன்னணி, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் மூலம் தென்மாவட்டங்களிலும் தேர்தலை எதிர்கொள்ளலாம். தி.மு.க.,வின் திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இவை முழுமையாக நமக்கு கை கொடுக்கும். காங்கிரசால் நமக்கு பயனில்லை; சுமை தான்' என்று தலைமையிடம் வாதிட்டனர்.

சி.பி.ஐ.,யை கையில் வைத்துக் கொண்டு தனது சொந்த லாபங்களுக்காக காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. முலாயம் சிங், மாயாவதி போன்ற தலைவர்களை இதுபோல மிரட்டியுள்ள காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சோதனை என்ற பெயரில் அறிவாலயம் வரை சி.பி.ஐ.,யை அனுப்பி மிரட்டுவது சரியல்ல என்று குறை கூறிய தி.மு.க., தலைவர்கள், "இதே காங்கிரசால், மிசா நெருக்கடியையும் கடந்து வந்துவிட்டோம தோழமை என்ற நிலையில் காங்கிரசுடன் அனைத்து உறவுகளையும் தொடரலாம் மிரட்டலுக்கு பணிந்து கூட்டணியை தொடர வேண்டிய அவசியமில்லை' என கருணாநிதியிடம் கூறினர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!