Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 5, 2011

மும்மூர்த்திகள் தமிழில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு?

தமிழ் சினிமாவில் இரண்டு நடிகர்கள் சேர்ந்து நடிப்பது மிகவும் அபூர்வம். ஆனால் இந்தி மற்றும் மலையாளத்தில் இது ரொம்ப சர்வ சாதாரணம். மலையாளத்தில் மம்முட்டி-மோகன்லால் இருவரும் இணைந்து நிறையபடங்களில் நடித்திருக்கின்றனர். அதுபோல் இந்தியிலும் அந்தகால நடிகர்கள் அமிதாப், தர்மேந்திரா உள்ளிட்ட நடிகர்கள் முதல் இப்போது உள்ள ஷாரூக்கான், அமீர்கான், ஹிருத்திக் உள்ளிட்ட நடிகர்கள் பலர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முதன்முறையாக விஜய்-விக்ரம்-விஷால் ஆகிய மூன்று முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கின்றனர்.

தமிழில் இந்த மாதிரி இணைந்து நடிப்பது மிக குறைவு தான். ஆனால் இப்போது அது கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது. தற்போது பாலா இயக்கத்தில் விஷால்-ஆர்யா இணைந்து அவன் இவன் படத்தில் நடிக்கின்றனர். அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் நண்பன் படத்தில் விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ராவணன் படத்திற்கு பிறகு மணிரத்னம் அடுத்த ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு பொன்னியின் செல்வன் என்று பெயரிடப்பட்டுள்ளது. சரித்திரத்தை மையமாக வைத்து உருவாகும் இப்‌படம் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் விஜய்-விக்ரம்-விஷால் ஆகிய முன்னணி நடிகர்கள் மூன்று பேர் சேர்ந்து நடிக்கின்றனர். தமிழ் சினிமாவில் இவர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறையாகும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!