Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, October 3, 2014

பாதிப்பு பொது மக்களுக்கே!?

18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம்.

சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது முதல், அந்த வழக்கை நடத்த இதுவரை 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.  


மக்கள் வரி பனத்தை கூட்டு கொள்ளையடித்துவிட்டு அப்பாவி மக்களை தூண்டிவிட்டு அனுதாபம் என்ற பெயரிலும் வன்முறை வெரியாட்டம் ஆடும் அதிமுக. 

மாபெரும் அரசு எந்திரத்தின் தூணாக நிற்கும் அரசு அதிகாரிகள்,போலீஸ் சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் இருந்தது ஏன்??. நம்முடைய வரிப்பணத்தில் ஓடும் அரசு பேருந்து மீது தாக்குவதால் நாட்டிற்கோ, ஜெயலலிதாவிற்கோ என்ன லாபம்?. நம் வீட்டு பெண்கள் இது போல போக வழியின்றி, உண்ண உணவகம் இன்றி இருந்தால் நமக்கு எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்து அரசியல் கட்சியினர் ஆர்பாட்டம் செய்யாமல் இயல்பு வாழ்விற்கு துணை நிற்பதே மனிதாபிமான செயல். உருவ பொம்மை எரிப்பதால் ,மாற்று கட்சி அலுவலகம் தாக்கப்படுவதால் என்ன லாபம்?? அப்பாவி பொது மக்களுக்கு தான் பாதிப்பு.

ஜெயலலிதா மேல் உண்மையான பாசமிருந்தால் உன் வாகனத்தை எரி அதவிட்டுட்டு பொது மக்கள் வர்ர பஸ்ஸ எரிக்கிறது அப்பாவி மக்களே பயப்படுத்துவது இதுவே முதலும் கடசியுமாக இருக்கட்டும். இது அதிமுக மட்டுமல்ல திமுகாவுக்கும்  சேர்த்துதான். இந்த வழக்கு வெற்றிபெற காரணம் முழுக்க முழுக்க நீதிபதி சாரும் ஏனென்றால் இந்த தீர்ப்பை அறிவிக்க எவ்வளவு தைரியம் வேண்டும் அதை மைக்கேல் டி'குன்ஹா  செய்து காட்டினார்.

@ இவர்கள் அன்று கொள்ளை அடித்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு பல ஆயிரம் கோடிகள். ஆனால் அபராதமோ வெறும் 100 கோடி. இன்று தமிழகத்தில் இவர்கள் போடும் இந்த முதலைக்கண்ணீர் நாடகம் மக்களை இதிலிருந்து திசை திருப்பத்தான். இது போல அடுத்தடுத்து தீர்ப்பு வந்தால் இனி ஊழல் செய்து சொத்து சேர்க்க முடியாதே. பாதிப்பு பொது மக்களுக்கே!?.

2 comments :

மதுவிலக்கு விவகாரம் மதுவால் வரும் 9000 கோடியை விட எங்கள் மக்களின் உயிர்தான் முக்கியம்

சென்னை: மது விற்பனை மூலம் கேரள அரசுக்கு கிடைக்கும் ரூ.9 ஆயிரம் கோடி வருமானத்தைவிட, எங்கள் மாநில மக்களின் உயிர்தான் முக்கியம் என்று அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி கூறினார். சென்னை விமான நிலையத்தில், கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கேரளாவில் மதுவிலக்கை அமல்படுத்துவதால் னீ7,000 கோடியில் இருந்து 9,000 கோடி வரையில் வருமான இழப்பு ஏற்படும் என்பது உண்மைதான்.

ஜெயலலிதா கைதால் அதிர்ச்சியில் இறந்தவர் எண்ணிக்கை நூறை தாண்டியது - அதிமுக அறிக்கை
இதிலென்ன ஆச்சர்யம்!!!!!
அரசின் சாராய வியாபாரத்தால்
டாஸ்மாக்கில் குடிச்சி இறந்தவர்கள் அதைவிட பல்லாயிரம்..

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!