Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 13, 2011

கை கழுவிய தமிழக மக்கள், கருத்து சொல்லும் கலைஞர்!! தேர்தல் "11

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் அ.தி.மு.க. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. தி.மு.க கூட்டணி குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி காரணமாக முதலமைச்சர் கருணாநிதியும், அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

தேர்தல் முடிவு குறித்து முதலமைச்சர் கருணாநிதி கூறுகையில்,”தமிழ்நாட்டு மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்” என்றார்.

இந்த தோல்வி குறித்து கனிமொழி கூறுகையில்,”தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்” என்றார்.

மேலும் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி நாளை நடைபெறும் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான விசாரணையை பாதிக்காது எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!