Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 20, 2011

அம்மா ஆசியுடன் அஸ்தமிக்க போகும் புதுவை அரசு??

புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்திசேகர், புருஷோத்த மன், பாஸ்கர், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார்.

அவர்,சட்டமன்ற தேர்தலில் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருந்த நாராயணசாமியையும், காங்கிரஸ் அரசையும் விரட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டோம். இன்று அது நடந்துள்ளது. அசூர பலத்தோடு இருந்த காங்கிரஸ் 7 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பரிதாப நிலைக்கு சென்றுள்ளது.

தி.மு.க. 2 ஆக குறைந்துவிட்டது. என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்காக நானும், ஓம்சக்திசேகரும் கடினமாக பாடுபட்டோம். அம்மாவிடம் ரங்கசாமியை பற்றி கடவுள் பக்தி உள்ளவர், நாணயமானவர், நேர்மையானவர் என்றெல்லாம் எடுத்து சொன்னோம். இப்போது அதை நினைத்தால் எனக்கு வெட்கமாக உள்ளது.

நாம் ஏமாறலாம். அம்மா அளவில் ஏமாறுவதற்கு நாம் காரணமாக இருந்து விட்டோமே என்று வருத்தமாக உள்ளது. அரசியலில் நாணயமும், வாக்கு சுத்தமும் முக்கியமானது. துரோகத்தின் மீது கட்டப்பட்டுள்ள கோட்டை நீண்ட நாளைக்கு நீடிக்காது. இந்த ஆட்சி 5 ஆண்டு காலம் நடக்காது. இதனை அம்மா பார்த்து கொள்வார். ஆனால் நாம் அடுத்த தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

புதுவையில் உள்ள 23 தொகுதிகளிலும் தகுதி உள்ள வேட்பாளர்களை கண்டறிய வேண்டும். இப்போதில் இருந்தே பணிகளை தொடர வேண்டும். அவநம்பிக்கையோடு யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று எம.எல்.ஏ.க்கள் வருத்தத்தில் உள்ளதாக கட்சியினர் சிலர் நினைக்கிறார்கள்.

எங்கள் 5 பேருக்கு எந்ததுளி வருத்தமும் கிடையாது.நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். அம்மா எங்களை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக (ஆட்சியை கவிழ்ப்பது) செயல்பட கூறியுள்ளார். அந்த பணியை முறையாக செய்வோம்’’ என்று பேசினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!