Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, May 24, 2011

நாய் வாலை நிமிர்த்தலாம், ஆனால் ஜெயா? போராட்டத்தில் மாணவர்கள்

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி வரும் 7ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் துணை செயலாளர் மாரியப்பன், இந்திய மாணவர் சங்கம் தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை கட்டுப்படுத்திட தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.

அதேபோல் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை தற்போது அமல்படுத்திட வலியுறுத்தியும், சமச்சீர் கல்வியை உடனடியாக முழுமையாக அமல்படுத்திடக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், அதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பிலும் வரும் ஜூன் 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!