Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, May 23, 2011

பார்வையாளர்கள் நேரம் முடிந்தும் அனுமதித்த சிறை அதிகாரிகள்

புதுடில்லி : திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி.,யும் தனது மகளுமான கனிமொழியை முன்னாள் முதல்வர் கருணாநிதி திகார் சிறையில் சந்தித்து பேசினார்.

சிறைச்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக ‌கருணாநிதி சென்றார். திகார் சிறைச்சாலையின் விதிமுறைப்படி 5 மணிக்கு அனைத்து சந்திப்புகளும் முடிந்து விடும். ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு மாலையில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கனிமொழியை சந்தித்த பின்னர் கருணாநிதி இன்று இரவே சென்னை திரும்புவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் சென்னை திரும்புவதற்காக விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டு விட்டது. இன்று இரவு ஸ்டாலினும் டில்லி வர உள்ளதாக தெரிகிறது. டில்லிக்கு கருணாநிதியுடன் அழகிரியும் உடன் சென்றுள்ளார். ஏற்கனவே கனிமொழியின் கணவர் மற்றும் தாயார் ராஜாத்தி டில்லியில் உள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!