Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, May 17, 2011

கலைஞர் பார்த்துக்கொள்வார் என்று பேட்டி கொடுத்தவர், தற்போது?

கடந்த 20 ஆண்டுகளாக தமிழக திரைப்படத் துறையில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறேன். தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். குறிப்பாக தே.மு.தி.க.வை எதிர்த்து பிரசாரம் செய்தேன். இதனால் அந்தக் கட்சியினரும், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்தும் என் மீது கோபமாக இருந்து வந்தனர்.

இதற்கிடையே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தூண்டுதலின்பேரில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ச்சியாக மிரட்டல் இருந்து வருகிறது. எனது சொத்துகள் தே.மு.தி.க.வினரால் தாக்கப்பட்டும் வருகின்றன.

எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால்,தே.மு.தி.க.வினரே காரணமாக இருப்பார்கள். ஜனநாயக நெறிமுறைப்படி பிரசாரம் செய்த எனக்கு தே.மு.தி.கவினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மிரட்டல், தாக்குதல் ஆகியவற்றில் இருந்து காப்பாற்ற எனக்கும், எனது குடும்பத்துக்கும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். மிரட்டல் மற்றும் தாக்குதலில் ஈடுபடும் தே.மு.தி.க.வினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நடிகர் வடிவேலு சார்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், டி.ஜி.பி. லத்திகாசரணிடம் கொடுத்தார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!