Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, May 2, 2011

மன ரீதியான துன்புறுத்தல், அச்சத்தில் பெண் போலீசார்?

பெண் போலீசாரின் பிரச்னை, குறைகளை கேட்க கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரத்யேக கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், போலீஸ் அதிகாரிகள் மீதான அச்ச உணர்வு காரணமாக, பெண் போலீசார் யாரும் புகார் அளிக்க முன் வரவில்லை.

தமிழகத்தில் பெண் போலீசாருக்கு, ஆண் போலீஸ் அதிகாரிகளால் உடல், மன ரீதியான தொல்லைகள் அதிகரித்திருப்பதாக ஈரோட்டைச் சேர்ந்த பெண் போலீஸ் வள்ளி, சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டிருந்தார். மேலும், தனக்கு தெரிந்த தகவல்களுடன் கூடிய மனுவை "சீலிட்ட கவரில்' வைத்து கோர்ட்டில் சமர்ப்பித்திருந்தார்.

இவரது புகார், பெண் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வள்ளியின் மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் இவரை ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு நள்ளிரவு நேரத்தில் அழைத்து பெண் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். வழக்கு விசாரணை கோர்ட்டில் இருக்கையில், போலீஸ் அதிகாரிகள் அத்துமீறி செயல்பட்டு தன்னை அழைத்து விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாகவும், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகவும் ஐகோர்ட்டில் வள்ளி மீண்டும் முறையிட்டார்.

இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை கண்ட போலீஸ் அதிகாரிகள், வள்ளியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை கவனிக்கத் துவங்கியுள்ளனர். மேலும், பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் "பெண் போலீசாரின் குறை கேட்கும் கமிட்டி'க்கு மீண்டும் உயிரூட்டியுள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!