Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, May 9, 2011

தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் கொடுத்த தேர்தல் அதிகாரி??

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு, ஒட்டன்சத்திரம் உதவி தேர்தல் அதிகாரி (ஏ.ஆர்.ஓ.,) பாலசுப்பிரமணி, ஓட்டு எண்ணிக்கைக்கான டேபிள், சேர்களை மையத்திற்கு லாரியில் கொண்டு வந்தார். லாரியில், பயன்படுத்தாத ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருந்தன. கண்காணிப்பு பணியில் இருந்த தி.மு.க.,வினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவற்றை, மையத்திற்குள் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க கொண்டு வந்ததாக, உதவி தேர்தல் அதிகாரி கூற, பிரச்னை முடிவுக்கு வந்தது. சம்பவம் குறித்து விளக்கம் தருமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரி வள்ளலார் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!