Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, May 17, 2011

தேர்வுத்துறை எச்சரிக்கை!! மாணவர்கள் கவனத்திக்கு?

கூடுதல் மதிப்பெண் பெற்றுத் தருவதாக யாராவது கூறினால், மாணவர்கள் ஏமாற வேண்டாம்' என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு, அதிக மதிப்பெண்களுடன் போலியாக தயாரிக்கப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மூலம், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் முயற்சித்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கினர். இவர்களுக்கு, போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்துக் கொடுத்த ஆசாமிகளையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தற்போது மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, போலி மதிப்பெண் பட்டியல் ஊடுருவிவிடக்கூடாது என்பதில், தேர்வுத்துறை எச்சரிக்கையாக இருக்கிறது. இது குறித்து, தேர்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது, அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது அணுகி, கூடுதலாக மதிப்பெண்கள் பெற்றுத் தருவதாக கூறினால், அதை நம்பி, மாணவர்கள் ஏமாற வேண்டாம்' என, கேட்டுக் கொண்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!