Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, May 22, 2011

இலங்கை அரசியல் அமைப்பு சட்டமும், இந்திய தலையீடும்

கொழும்பு : இலங்கையின் உள்விவகாரங்களை தலையிடும் இந்தியாவின் போக்கை கண்டித்து, அந்நாட்டு கட்சிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. இலங்கை வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் டில்லி வந்தார்.

இலங்கையில் அமைதி நடவடிக்கையை மேம்படுத்த அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என, மத்திய அரசின் சார்பில் வற்புறுத்தப்பட்டது. இதற்கு, இலங்கை அரசின் ஆதரவு கட்சிகளான தேசப்பற்று தேசிய இயக்கம் மற்றும் ஜாதிகா விமுக்தி பெரமுனா ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.

இது குறித்து தேசப்பற்று தேசிய இயக்க கட்சித் தலைவர் குணதாச அமரசேகரா குறிப்பிடுகையில், "இந்தியாவின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு இல்லை' என்றார்.ஜாதிகா விமுக்தி பெரமுனா தலைவர் அனுரா குமார திசநாயகே குறிப்பிடுகையில், "இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும்படி இந்தியா அறிவுரை கூறக்கூடாது. இது, இலங்கையின் உள்நாட்டு விவகாரம்' என்றார்.

* சிங்களன் எப்பதான் மதிச்சான் இந்தியாவை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!