Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, May 26, 2011

அ தி மு க ஆட்சியில் சங்கா? உயர் நீதி மன்றம் நோட்டீஸ்

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு குறித்து விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட இருந்த சமச்சீர் கல்வி திட்டத்தை, புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைப்பதென முடிவெடுத்து அறிவித்தது.

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்த முந்தைய அரசு ரூ.200 கோடி செலவழித்தது.

இதனை வீணடிக்கும் வகையில் தற்போதைய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் எதிர்காலம் வீணாகும் வகையில் இந்த அரசு ஆணை அமைந்துள்ளது என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு ஜுன் 8ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!